இந்த அம்பாளின் திருவுருவப்படத்தை பூஜை அறையில் வைத்தாலே போதும். தாறுமாறாக தங்கம் நம் வீட்டில் சேர தொடங்கிவிடும்.

amman3.
- Advertisement -

ஒரு பவுன் தங்க நகை வாங்க வேண்டும் என்றால் நடுத்தர வர்க்கத்திற்கு அது இன்று எட்டாக்கனியாக இருக்கின்றது. இருப்பினும் நம் வீட்டில் நடக்கும் சுபகாரிய நிகழ்ச்சிகளுக்கு இந்த தங்கம் அத்தியாவசியமாக இருக்கின்றது. ஆகவே நமக்கு தேவையான அளவு மட்டுமாவது தங்கத்தை சேர்க்க வேண்டும் என்பவர்கள், இந்த அம்பாளை வெள்ளிக்கிழமை தோறும் வழிபட்டாலே போதும். தங்கம் சேர, நம்முடைய அங்கங்கள் எல்லாம் மெருகேற எந்த அம்பாளை எப்படி வழிபாடு செய்வது என்பதை பற்றிய பதிவுதான் இது.

அங்கங்கள் மெருகேறுவதற்கு இந்த அம்பாளை வழிபட வேண்டுமா? என்ற சந்தேகம் சில பேருக்கு இருக்கும். இந்த அம்பாளை வழிபட்டால் வெறும் தங்கம் மட்டும் நம்முடைய வீட்டில் தங்காது. நம்முடைய உடம்பில் இருக்கும் அங்கங்களும் ஆரோக்கியமாக இருக்கும். தீராத நோய்கள் தீரும். உடல் உறுப்புகள் ஆரோக்கியம் பெறும். அந்த அளவுக்கு சக்தி வாய்ந்த ஒரு வழிபாட்டை தான் இன்று நாம் பார்க்க போகின்றோம்.

- Advertisement -

தங்கம் சேர நாராயணி அம்மன் பூஜை:
இங்கே நாம் பார்க்க போகும் வழிபாடு, நாராயணி அம்பாள் வழிபாடு. நாராயணி அம்பாளை வழிபாடு செய்தால் நம்முடைய வீட்டில் நோய் நொடி பிரச்சனை இருக்காது. தீராத வியாதியை கூட தீர்த்து தரக்கூடிய சக்தி இந்த அம்பாளுக்கு உண்டு. அதே சமயம் இந்த அம்பாளை வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய வீட்டில் தங்கம் சேரும். அடமானம் வைத்த நகைகளை எல்லாம் சீக்கிரம் மீட்டக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். வாரம் தோறும் வெள்ளிக்கிழமை இந்த வழிபாட்டை செய்தாலும் தவறு கிடையாது.

ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று இந்த பூஜையை வீட்டில் தொடங்குங்கள். வழக்கம் போல வெள்ளிக்கிழமை என்றால் வீடு, பூஜை அறை எல்லாம் சுத்தமாக இருக்கும். பூக்களால் பூஜை அறைக்கு அலங்காரம் செய்திருப்பீர்கள். இந்த பூஜைக்கு கட்டாயம் இந்த நாராயணி அம்மன் திருவுருவப்படம் பூஜை அறையில் இருக்க வேண்டும். அதை சிறிய அளவில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அந்த அம்மனுக்கு நாம் சூட வேண்டிய பூ, ஆவாரம் பூ.

- Advertisement -

இந்த ஆவாரம் பூவுக்கும் தங்கம் என்ற பெயர் உண்டு. ஆவாரம்பூ மஞ்சள் நிறத்தில் தங்கம் போலவே ஜொலி ஜொலிக்கும். இந்த ஆவாரம் பூவை, அந்த அம்பாளுக்கு சூட்டி விலக்கு ஏற்றி வைத்துவிட்டு வீட்டில் ஐஸ்வர்யம் பெருகவும், ஆரோக்கியம் பெருகவும் மனதார வேண்டி கற்பூர ஆரத்தி காண்பித்து வழிபாடு செய்து வந்தாலே போதும். உங்களுடைய வீட்டில் எந்த கஷ்டமும் வராது.

இதையும் படிக்கலாமே: அள்ள அள்ள குறையாத செல்வத்தை பெற வெள்ளிக்கிழமைகளில் தவறாமல் இதை பிறருக்கு தானமாக கொடுங்கள். சுக்கிர அருளோடு, லட்சுமி கடாட்சத்தையும் பெற்று ராஜபோக வாழ்க்கையை வாழலாம்.

வாரம் தோறும் வெள்ளிக்கிழமை பூஜை செய்யும் போது கூடவே இந்த ஆவாரம் பூவை சேர்த்து, அம்பாளுக்கு வைத்து இந்த பூஜையையும் செய்ய தொடங்கி பாருங்கள். உங்கள் குடும்பத்தில் பல நல்ல மாற்றங்கள் வரும். பணக்கஷ்டம் தீரும். வருமானம் அதிகரிக்கும். கடன் சுமை குறையும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன இந்த ஆன்மீகம் சொல்லும் பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -