அள்ள அள்ள குறையாத செல்வத்தை பெற வெள்ளிக்கிழமைகளில் தவறாமல் இதை பிறருக்கு தானமாக கொடுங்கள். சுக்கிர அருளோடு, லட்சுமி கடாட்சத்தையும் பெற்று ராஜபோக வாழ்க்கையை வாழலாம்.

sukiran mahalashmi gold
- Advertisement -

வெள்ளிக்கிழமை என்றாலே மங்கள வாரம் என்று தான் பொருள். மங்கலம் என்றாலே அது மகாலட்சுமியின் அம்சத்தை குறிக்கும் சொல். அதே போல சுக்கிர வாரம் என்றும் இந்த வெள்ளிக்கிழமைக்கு ஒரு பெயர் உண்டு. இத்தனை அம்சங்கள் பொருந்திய இந்த கிழமையில் இந்த இருவரின் அருள் ஆசியும் ஒரு சேர பெற வேண்டும் என்றால் இந்த ஒரு எளிய பரிகாரத்தை செய்தால் போதும் என்று ஆன்மீகம் சொல்கிறது. அது என்னவென்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

சுக்கிரன் அருள் பெற
வெள்ளிக்கிழமைகளில் கட்டாயமாக வீட்டில் மகாலட்சுமி பூஜை செய்வதை வழக்கமாக கொள்ள வேண்டும். இதைத் தொடர்ந்து செய்து வரும் பொழுது குடும்பத்தின் செல்வ நிலை உயர்வதை உங்களால் கண்கூடாக உணர முடியும். இந்த பூஜை செய்வதோடு கனகதாரா ஸ்தோத்திரங்கள், மகாலட்சுமி தாயாருக்கு குங்கும அர்ச்சனை, மலர் அர்ச்சனை போன்றவை செய்வது மேலும் விசேஷத்தை தரும். அன்றைய தினத்தில் அம்பாளுக்கு பிடித்த வாசனை மிக்க மலர்களால் அலங்கரிக்கும் போது உங்களையும் உங்கள் வீட்டைச் சுற்றியும் எப்போதும் நல்ல அதிர்வலைகள் உண்டாகும்.

- Advertisement -

இப்படி வெள்ளிக்கிழமை பூஜை செய்யும் வேளையில் தாயாருக்கு அவல் பாயாசம் செய்து படைப்பது மிகவும் விசேஷம் என்று சொல்லப்படுகிறது. அவல் என்பது லக்ஷ்மி தாயார் உகந்த நெய்வேத்தியமாக கருதப்பட்டாலும், அவல் பாயாசத்தில் சேர்க்கப்படும் பால், நெய், உலர் திராட்சைகள், சர்க்கரை போன்ற அனைத்தும் சுக்கிர பகவானுக்கு உகந்த பொருளாக பார்க்கப்படுகிறது. இருவரின் அருளும் ஒரு சேர பெறுவதற்கு வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி தாயாருக்கு பூஜையுடன் செய்து இந்த அவல் பாயாசத்தை படைப்பது மிகவும் சிறப்பு.

இந்த அவல் பாயாசத்தை நீங்கள் தொழில் செய்பவராக இருந்தால் உங்களிடம் வேலை செய்பவர்களுக்கு ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் ஊற்றி மூடி போட்டு கொடுக்க வேண்டும். உங்கள் வீட்டில் வேலையாட்கள் இருந்தால் அவர்களுக்கு கொடுங்கள். இவர்கள் யாரும் இல்லை எனும் பட்சத்தில் உங்களுக்குத் தெரிந்த யாரேனும் இல்லாதவர்களுக்கு இந்த பாயாசத்தை தானமாக கொடுத்து வாருங்கள். உங்களின் செல்வ நிலை உயர்வதை உங்களால் உணர முடியும்.

- Advertisement -

அதே போல் மகாலட்சுமி தாயாரின் அருளை முழுவதுமாக பெற இன்னொரு எளிமையான வழி வீட்டு வாசலில் பச்சரிசி மாவில் கோலம் போடுவது. அதிலும் வெள்ளிக்கிழமைகளில் காலையில் குளித்து முடித்து பிரம்ம முகூர்த்த வேளையில் இதை செய்வது மிகவும் உத்தமம். நாம் வீட்டில் வேலைக்கு ஆட்கள் வைத்திருந்தாலும் கூட ஒரு சில வேலைகளை வீட்டின் இல்லத்தரசிகள் செய்வது தான் அந்த குடும்பத்திற்கு நல்லது. அதே போல இந்த அரிசி மாவு கோலத்தையும் முடிந்த வரை வீட்டின் குடும்ப தலைவிகள் செய்வது நல்லது.

இதையும் படிக்கலாமே: ஏழு மிளகு இருந்தால் போதும் லட்ச லட்சமாய் வாங்கிய கடனும் விரைவில் தீருமே! கடன் தீர சக்தி வாய்ந்த எளிய பரிகாரம் என்ன?

இந்த இரண்டு விஷயங்களையும் சரிவர கடைப்பிடித்து வரும் போது மகாலட்சுமி தாயார், சுக்கிர பகவான் இருவரின் அருள் ஆசியும் பரிபூரணமாக கிடைத்து வற்றாத செல்வம் கிடைக்க பெற்று வளமான வாழ்க்கையை வாழலாம் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -