வேண்டுதல்கள் விரைவில் நிறைவேற இந்த தீபத்தை ஏற்ற வேண்டும்.

pirandai deepam
- Advertisement -

ஏதாவது ஒரு தேவை பூர்த்தியாக வேண்டும் என்று நாம் ஆசைப்படுவோம். அந்த ஆசையை நம்மால் நிறைவேற்ற முடியும் பட்சத்தில் அதை நிறைவேற்றி விடுவோம். ஆனால் அதை நிறைவேற்றுவதற்காக நாம் கடினமாக உழைக்க வேண்டும் என்று சூழ்நிலை ஏற்படும் போது நம்முடைய உழைப்போடு சேர்த்து தெய்வத்தின் அருளையும் வேண்டி நிற்போம். அவ்வாறு வேண்டி நிற்பதை தான் நாம் வேண்டுதல் என்று கூறுகிறோம். நம்முடைய ஆசைகள் நிறைவேறுவதற்காக நாம் தெய்வத்திடம் வைக்கும் வேண்டுதல் எப்படி விரைவிலேயே நடைபெறும் அதற்கு எந்த தீபத்தை ஏற்றி வழிபட வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

ஆசைகளை நிறைவேற்ற வேண்டும் என்றால் அதற்காக நாம் முழு மனதோடு உழைக்க வேண்டும். அதற்கு முன்பாக நாம் ஆசைப்படும் விஷயம் நியாயமான விஷயமா என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். இப்படி நியாயமான கோரிக்கையாக இருந்து அதற்காக நாம் கடினமாக உழைத்தாலும் சில நேரங்களில் நம்மால் அந்த ஆசைகளை நிறைவேற்ற முடியாது. அப்படி நிறைவேற்ற முடியாமல் கஷ்டப்படும் பொழுது அதற்காக நாம் ஒரு தீபத்தை வீட்டில் ஏற்றி வழிபட்ட வேண்டும். அப்படி அந்த தீபத்தை ஏற்றி வழிபடும் பொழுது அந்த தீபத்திடம் நம்முடைய நியாயமான கோரிக்கையை நாம் வேண்டுதலாக வைக்கும் பொழுது அந்தக் கோரிக்கை விரைவிலேயே நிறைவேறும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த தீபத்தை வாரத்திற்கு ஒருமுறை மட்டும் தான் ஏற்ற வேண்டும். எந்த நாளில் வேண்டுமானாலும் ஏற்றலாம். எந்த தெய்வத்தை வேண்டுமானாலும் நினைத்து ஏற்றலாம். ஆனால் முடிந்த அளவுக்கு குலதெய்வத்தை நினைத்து ஏற்ற பாருங்கள். அடுத்ததாக எந்த எண்ணெயை ஊற்றி வேண்டுமானாலும் ஏற்றலாம். எந்த திரியை போட்டு வேண்டுமானாலும் ஏற்றலாம். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஏற்றலாம். ஆனால் முதல் வாரத்தில் எப்படி ஏற்றுகிறீர்களோ அதே போல் தான் ஒவ்வொரு வாரமும் ஏற்ற வேண்டும். அதே கிழமை அதே நேரம் அதே எண்ணெய் அதே திரி அதே விளக்கு என்று ஏற்ற வேண்டும். இந்த விளக்கு கிழக்கு அல்லது வடக்கு பார்த்தவாறு இருக்க வேண்டும். அடுத்ததாக இந்த விளக்கை நாம் பூஜை அறையிலும் வைத்து ஏற்றலாம் அல்லது வீட்டின் மையப் பகுதியில் வைத்தும் ஏற்றலாம்.

ஒரு தட்டு வைத்து அதன் மேல் விளக்கு வைத்து தீபம் ஏற்றுங்கள். இந்த தீபத்தை வேண்டுதலை நிறைவேற்றும் தீபமாக மாற்றுவதற்கு நமக்கு தேவைப்படும் பொருள்தான் பிரண்டை. பிரண்டை என்பது மருத்துவ ரீதியாக பல நன்மைகளை நமக்கு தருகிறது அதே பிரண்டை தான் நமக்கு மகத்துவ ரீதியாக நம்முடைய வேண்டுதலை நிறைவேற்றவும் உதவிகிறது.

- Advertisement -

பிரண்டையை எடுத்துக் கொள்ளுங்கள் அதை உங்களால் எந்த அளவுக்கு பொடியாக நறுக்க முடியுமோ அந்த அளவுக்கு பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். அவ்வாறு நறுக்கும்பொழுது எந்த தெய்வத்தை நினைத்து விளக்கேற்றினோமோ அந்த தெய்வத்தின் பெயரையோ அல்லது மந்திரத்தையோ மனதிற்குள் உச்சரித்துக் கொண்டே பிரண்டையை நறுக்க வேண்டும்.

பிறகு நாம் ஏற்றி வைத்திருக்கும் தீபத்தில் இந்த பிரண்டையை போட வேண்டும். இரண்டு நிமிடம் கழித்து அந்தப் பிரண்டை வாசனை வர ஆரம்பிக்கும் அப்பொழுது அந்த தீபத்தை பார்த்து நம்முடைய நியாயமான வேண்டுதல் என்னவோ அதை கூற வேண்டும். குறைந்தது ஒரு நிமிடமாவது இந்த தீபத்தை நாம் பார்க்க வேண்டும். இப்படி செய்தால் நம்முடைய வேண்டுதல்கள் நிறைவேறுவதற்குரிய வழிகள் பிறக்கும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: தடைகளையும் துன்பங்களையும் நீக்கும் துர்க்கை அம்மன் வழிபாடு.

இந்த எளிமையான பிரண்டை தீபத்தை நம் இல்லங்களில் நாம் ஏற்றி நம்முடைய நியாயமான வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்வோம்.

- Advertisement -