இயற்கையாக நம்ம முகம் பிரைட்டாக பளிச்சுன்னு இருக்க கண்ட கண்ட கிரீமையும் வாங்காதீங்க! இதை ட்ரை பண்ணி பாருங்க.

face-skin-maavu
- Advertisement -

நம்முடைய முகம் இன்ஸ்டன்ட் ஆக பிரைட்டாக இருக்க அவ்வபொழுது ஃபேஸ் பேக் போட்டு முகத்தை பளிச்சென்று வைத்துக் கொள்ளலாம். அதுவும் இயற்கையான முறையில் பழங்கள் மற்றும் இயற்கையான பொருட்களை வைத்து ஃபேஸ் பேக் போடும் பொழுது நல்ல ஒரு ரிசல்ட் கிடைக்கிறது. இதனால் பக்க விளைவுகளும் ஏற்படுவது கிடையாது. அந்த வகையில் நம்முடைய முகம் இயற்கையாக பிரைட்டாக பளிச்சுன்னு இருக்க, நாம் கடைபிடிக்க வேண்டியது என்ன? என்கிற அழகு குறிப்பு ரகசியத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் இப்போது அறிந்து கொள்ள இருக்கிறோம்.

எப்பொழுதும் எந்த கிரீம் பூசினாலும், இயற்கையான நிறத்தில் இருந்து அதீத நிறத்திற்கு நம்மால் மாறிவிட முடியாது. இது ஒரு மாயத் தோற்றமே ஆகும். அது போல செயற்கையான முகப்பூச்சுகள் பூசுவதால் உண்டாகக்கூடிய விளைவுகளும் பயங்கரமானவையாக இருக்கின்றன. தினமும் கிரீம் பூசுவதால் காலப்போக்கில் முகம் பொலிவிழந்து, சுருக்கம் எளிதாக அடைந்துவிடுகிறது.

- Advertisement -

இத்தகைய செயற்கை முறையை கையாளுவதை விட்டுவிட்டு இயற்கையான முறையிலேயே நம் முகத்தை மாசு மருவில்லாமல், சுருக்கங்கள் இல்லாமல் எப்பொழுதும் இளமையான பொலிவோடு இருக்க என்ன செய்வது? இந்த ரெண்டு பொடி வகைகள் எப்பொழுதும் நம் வீட்டில் இருப்பது நம்முடைய சரும பாதுகாப்பிற்கு நல்லது என்று வழி வழியாக நாம் முன்னோர்கள் மற்றும் பாட்டிமார்கள் கூறிவந்தது உண்டு.

அத்தகைய பொருட்களில் ஒன்றாக இருப்பது பாசி பயறு! பாசி பயறு மாவு குழந்தைகளை குளிப்பாட்ட பயன்படுத்துவார்கள். இதனால் குழந்தைகளுக்கு சரும பிரச்சனைகள் அண்டாது, பாதுகாப்பாக இருக்கும் என்பது நம்முடைய நம்பிக்கையாக இருந்து வந்தது. அதே போல இளம் பெண்களுக்கு கடலைப்பருப்பு மாவு அதாவது கடலை மாவு இதை பூசி வருவதால் முகப்பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவை அண்டாது முகம் பாதுகாப்பாக இருக்கும். இளமையாகவும் இருக்கும் என்று கூறியுள்ளனர்.

- Advertisement -

அந்த வகையில் பாசிப்பருப்பை லேசாக வறுத்து மெஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். அதே போல கடலை பருப்பையும் லேசாக வாணலியில் போட்டு வறுத்து மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த இரண்டு பொடி வகைகளில் ஒரு ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டையும் சம அளவு எடுத்து நன்கு கலந்த பின்பு இதனுடன் தேவையான அளவிற்கு தயிர் அல்லது பன்னீர் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

வறண்ட சருமம் கொண்டவர் தயிரையும், எண்ணெய் பிசுக்குள்ள சருமம் கொண்டவர்கள் பன்னீரையும் பயன்படுத்தலாம். இதனை நன்கு பேஸ்ட் போல கலந்து வைத்த பின்பு முகத்தில் தடவி உலர விட்டு விடுங்கள். அதன் பிறகு நீங்கள் குளித்துவிட்டு வரலாம். முகத்திற்கு சோப்பு போட வேண்டாம். இப்படி தினமும் செய்து வர மூன்று மாதத்தில் செம ரிசல்ட் தெரியும். இனி தினமும் சோப்பிற்கு பதிலாக இது போல செய்து வருவதால் நம்முடைய சருமம் குழந்தையின் சருமம் போல மிருதுவாகவும், சரும பிரச்சனைகள் இல்லாமலும் இளமையுடன் எப்பொழுதும் இருக்கும்.

இதையும் படிக்கலாமே:
தலைமுடி உதிர்வு இளநரை பொடுகு என அனைத்து பிரச்சனைக்கும் ஒரே தீர்வாக அதுவும் வாரம் ஒரு முறை மட்டும் இதை செய்தால் போதும். அப்புறம் பாருங்க உங்க முடி சும்மா ஜெட் வேகத்தில் வளரும்.

மேலும் பிரைட்டாக பளிச்சுன்னு கண்ணாடி போல பளபளன்னு மின்னும். இதை ஒவ்வொருவரும் தொடர்ந்து கடைபிடிப்பதால் ஏராளமான நற்பலன்கள் உண்டு. இதை நீங்கள் உடம்பு முழுவதும் கூட பூசி குளிக்கலாம். இதனால் உடல் முழுக்க சரும பிரச்சனைகள் வராமல் மிருதுவாகவும், பொலிவோடும் இருக்கும்.

- Advertisement -