முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகளை நீக்க இயற்கையான இந்த அழகு குறிப்பு போதும். தேவையற்ற முடிகள் எல்லாம் தானாக நிரந்தரமாக உதிர்ந்து போகும்.

face4
- Advertisement -

பெண்களுக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனை, முக அழகை குறைத்து காட்டக்கூடிய மிகப்பெரிய பிரச்சனை, முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகள். இதை நீக்குவதற்கு செயற்கையான முறையில் எத்தனையோ வழிகள் உள்ளது. ஆனால், அவையெல்லாம் நிரந்தர தீர்வை கொடுக்காது. அதேசமயம் பக்க விளைவுகளை உண்டு பண்ணும். ஆகவே பெண்களுக்கு இருக்கும் இந்த பிரச்சினையை சரி செய்ய, நிரந்தர தீர்வை காணக்கூடிய ஒரு அழகு குறிப்பு உள்ளது. இந்த குறிப்பை இன்னைக்கு ட்ரை பண்ணா, நாளைக்கு தேவையற்ற முடிகள் உதிர்ந்து விடுமா என்று கேட்டால், நிச்சயம் கிடையாது.

kuppai-meni

ஆனால் தொடர்ந்து நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றி வரும்போது நல்ல ரிசல்ட் கிடைக்கும். அந்த ரிசல்ட் நிரந்தரமாக இருக்கும். இந்த குறிப்பை பின்பற்றி உங்களுக்கு முகத்தில் இருக்கும் முடி உதிர்ந்து விட்டால், மீண்டும் அந்த தேவையில்லாத முடி, அந்த இடத்தில் மீண்டும் னனனனனவளராமல் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

- Advertisement -

முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகள் இயற்கையாக உதிர:
இந்த குறிப்புக்கு நாம் பயன்படுத்த போகும் பொருட்கள் குப்பைமேனி இலை பவுடர், பூலான் கிழங்கு பவுடர், மஞ்சள் தூள், தயிர் அல்லது ரோஸ் வாட்டர், இந்த பொருட்கள் தான் தேவை. இப்போது குப்பைமேனி பவுடர், பூலான் கிழங்கு பவுடர் எல்லாம் நாட்டு மருந்து கடைகளில் உங்களுக்கு விற்கிறது. அதை வாங்கி பயன்படுத்தலாம்.

poolankilangu

ஒரு சிறிய கிண்ணத்தில் 1 ஸ்பூன் குப்பைமேனி பவுடர், 1 ஸ்பூன் பூலான் கிழங்கு பவுடர், 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள், போட்டு இந்த மூன்று பொருட்களையும் தேவையான அளவு தயிர் ஊற்றி கலந்து கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் தேவையான அளவு ரோஸ் வாட்டர் ஊற்றி இதை பேக்காக கலந்து தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

உங்களுடைய முகத்தில் இதை அப்ளை செய்ய வேண்டும். முகத்தில் இந்த பேக்கை போடுவதற்கு முன்பு முகத்தில் இருக்கும் மேக்கப் எல்லாம் நன்றாக துடைத்து எடுத்து விடுங்கள். முகத்தை கழுவி விட்டு, இந்த பேக்கை அப்ளை செய்து கொள்ளுங்கள். உதடுக்கு மேல் பகுதி, தாடைக்கு கீழ் பகுதி, கன்னங்களில் எல்லாம் சில பேருக்கு தேவையற்ற முடிகள் அதிகமாக இருக்கும். அந்த இடத்தில் கூடுதல் கவனம் எடுத்து இந்த பேக்கை போட்டுவிட்டு, 20 நிமிடங்கள் கழித்து முகத்தை ஸ்கிராப் செய்தபடி கழுவ வேண்டும்.

இதையும் படிக்கலாமே: எவ்வளவு பெரிய முகப்பருவாக இருந்தாலும் அதை சரி செய்ய சமையலறையில் இருக்கும் இந்த 3 பொருட்களே போதும். முப்பதே நாளில் முழு மதியை உங்கள் முகத்தில் பார்க்கலாம்.

வாரத்தில் இரண்டு நாள் தொடர்ந்து இந்த குறிப்பை பின்பற்றி வந்தால் கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகள் மெல்லிசாக மாறத் தொடங்கி, தானாக உதிர தொடங்கி விடும். ரிசல்ட் கிடைக்க கட்டாயம் கொஞ்சம் நாட்கள் எடுக்கும். விடாம வாரத்தில் இரண்டு நாள் இதை தொடர்ந்து போட்டு வர உங்களுக்கே நல்ல வித்தியாசம் தெரியும். உங்களுக்கு ரொம்பவும் சென்சிடிவ் ஸ்கின் எனும் போது இதை ஒரு பேட்ச் டெஸ்ட் எடுத்துவிட்டு அதன் பின்பு பயன்படுத்துவது நல்லது. அழகு குறிப்பு பிடிச்சவங்க முயற்சி செய்து பலன் பெறலாம்.

- Advertisement -