வேண்டுதல் நிறைவேற நரசிம்மர் வழிபாடு

narachimmar panagam
- Advertisement -

மனிதனுடைய வாழ்க்கையில் பிரச்சனைகள் அளவே கிடையாது. ஒவ்வொருவர் வாழ்விலும் எண்ணற்ற பிரச்சனைகள் சோகங்கள் இருக்கின்றன. அவற்றை சுமந்து கொண்டு தான் ஒவ்வொரு நாளும் மனிதர்களும் தங்களுடைய வாழ்க்கை பயணத்தை தொடர்கிறார்கள்.

இது மனிதனுக்கு மனிதன் மாறுப்படுமே அன்றி பிரச்சனைகளோ, துயரங்களோ இல்லாத ஒரு மனிதரை கூட நம்மால் அடையாளம் காட்ட முடியாது. சதா சர்வ காலமும் இப்படி துன்பத்திலே விழுந்து கொண்டு இருப்பவர்கள் பலவிதமான தெய்வங்களை வணங்கிக் கொண்டு தான் இருப்பார்கள்.

- Advertisement -

பூஜைகள் பரிகாரங்கள் என தெரிந்தவற்றையெல்லாம் செய்து கொண்டு தான் இருப்பார்கள். அப்படி செய்தும் சிலருக்கு அதிலிருந்து விடுதலை கிடைக்காது. இதற்கு காரணம் கர்மா கிரக சூழ்நிலை என எதுவாக இருந்தாலும் அதை உடனே உடைத்து மீட்க கூடியவர் தான் இந்த நரசிம்மர்.

அப்படியான இந்த நரசிம்மரை நாம் எளிய முறையில் வழிபட்டாலே நம்முடைய பிரச்சனைகள் அனைத்தையும் தீர்த்து வைப்பார். அது மட்டும் இன்றி நம்முடைய வேண்டுதல்களையும் உடனே நிறைவேற்றுவார் என்று சொல்லப்படுகிறது. அந்த வழிபாடு குறித்த தகவலை ஆன்மீகம் பற்றிய இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

வேண்டுதல் நிறைவேற நரசிம்மர் வழிபாடு

பக்தர்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து நிற்கும் தெய்வங்களும் நரசிம்மருக்கு நிகர் அவர் தான். சிறிய பாலகனான பிரகலாதன் அழைத்த குரலுக்கு தூணை உடைத்து கொண்டு வந்து நின்று நான் இருக்கிறேன் என்று உண்மையை உலகிற்கு தன்னை உணர்த்தியவர் இந்த நரசிம்மர்.

தூய்மையான அன்போடும் உண்மையான உள்ளத்தோடும் யார் அழைத்தாலும் அவர்களின் அழைப்புக்கு உடனே வந்து அருள் பாலிக்கும் அற்புதமான தெய்வம்.அப்படியான இந்த நரசிம்மரை நாம் ஞாயிற்றுக்கிழமைகளில் வணங்குவது மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது.

- Advertisement -

இவரை வழிபடுவதற்கு என எந்த விதமான கஷ்டமும் பூஜை மந்திரம் என் சொல்லத் தேவையில்லை. நரசிம்மரை மனதார நினைத்து நம்பிக்கையுடன் வேண்டிக் கொண்டாலே நிச்சயம் நம்முடைய வேண்டுதல்களை நிறைவேற்றுவார்.

நரசிம்மர் அல்லது லட்சுமி நரசிம்மர் இருக்கும் ஆலயத்திற்கு ஞாயிற்றுக்கிழமைகளில் செல்லுங்கள். செல்லும் போது பாகனத்தை தயார் செய்து கொண்டு செல்லுங்கள். கோவிலில் நரசிம்மருக்கு முன்பு ஒரு அகல் விளக்கில் நெய் ஊற்றி பஞ்ச திரி போட்டு தீபம் ஏற்றி வைத்து விட்டு பானகத்தை நெய்வேத்தியமாக வைத்து விடுங்கள்.

நரசிம்மரிடம் உங்களுடைய பிரச்சனைகள் வேண்டுதல் என எது தேவையோ அதை வேண்டிக் கொள்ளுங்கள். பிறகு நரசிம்மரை 21 முறை வலம் வர வேண்டும். இப்படி வலம் வரும் வேளையில் நரசிம்பரை தவிர வேறு எந்த சிந்தனையும் மனதில் இல்லாமல் உங்களுடைய வேண்டுதல்களை மட்டும் கருத்தில் கொண்டு வலம் வர வேண்டும்.

அதன் பிறகு பானகத்தை வாங்கி நீங்கள் முதலில் அருந்துங்கள். அதன் பிறகு உங்கள் கைகளாலே ஆலயத்திற்கு வருவோருக்கு பானகத்தை பிரசாதமாக கொடுங்கள். இவ்வளவு தான் வழிபாடு ஞாயிற்றுக்கிழமைகளில் செய்யும் இந்த வழிபாடு நரசிம்மரை மனம் குளிர வைக்கும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: பிரச்சனைகள் தீர கால பைரவர் வழிபாடு

இதன் மூலம் நம்முடைய வேண்டுதல் பிரச்சனைகள் எதுவாயினும் அதை உடனே நிறைவேற்றியும் தீர்த்தம் வைப்பார் என்றும் நம்பப்படுகிறது. நரசிம்மரின் இந்த வழிபாட்டு முறையில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து நல்ல முறையில் பலன் அடையுங்கள்.

- Advertisement -