நிலை வாசலில் இந்த செடி இருந்தால் வீட்டில் செல்வம் நிலையாக தங்கும்.

mahalashmi6
- Advertisement -

பொதுவாகவே வீட்டில் செடி கொடிகள் வளர்ப்பது என்பது ரொம்பவும் நேர்மறையான நல்ல விஷயம் தான். பச்சை நிறத்தில் அழகாக செழிப்பாக வளரக்கூடிய செடிகள் நம்முடைய வீட்டை செழிப்பாக வைத்திருக்கும். அந்த வரிசையில் நம்முடைய வீட்டிற்கு முன்னால் வைக்கக்கூடிய, நமக்கு பாசிட்டிவ் எனர்ஜியை தரக்கூடிய நம் வீட்டில் இருக்கும் நெகட்டிவ் எனர்ஜியை தகர்க்க கூடிய, ஒரு செடியைத்தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

பெரும்பாலும் இந்த செடி அந்த காலத்தில் எல்லோர் வீட்டு நிலை வாசலிலும் இருந்தது. இன்று நவ நாகரீக வளர்ச்சி அதெல்லாம் அழிந்துவிட்டது. சிறிய தொட்டியிலாவது இந்த செடியை வளர்த்து வாங்க. அது என்ன செடி ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

செல்வம் நிலக்க நிலை வாசலில் வைக்க வேண்டிய செடி

சிவப்பு செம்பருத்தி பூ செடி தான் அது. இந்த செடியை நிலை வாசலில் வைக்க வேண்டும். வைத்துவிட்டு தினமும் தண்ணீர் ஊற்றி பராமரித்து வர வேண்டும். வாரம் தோறும் ஒரு நாள் வெள்ளிக்கிழமையோ அல்லது செவ்வாய் கிழமையோ அல்லது ஞாயிற்றுக்கிழமையோ உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது இரண்டு நிமிடம் நிலை வாசலில் இருக்கும் இந்த செடியிடம் உங்களுடைய மனதில் இருக்கும் விருப்பத்தை சொல்லுங்கள்.

அதாவது ஏதோ ஒரு நிறைவேறாத ஆசை இருக்கும் அல்லவா அதை அந்த செடியிலும் சொல்லுங்க. உதாரணத்திற்கு நமக்கு தேவை விருப்பம் இதாகத்தான் இருக்கும். குடும்பம் சந்தோஷமாக இருக்க வேண்டும். வீட்டில் செல்வ செழிப்பு வர வேண்டும் அல்லது நோய் நொடிகள் தீர வேண்டும். வீட்டிற்குள் எதிரிகள் நுழையக்கூடாது. வீட்டிற்குள் கெட்ட சக்தி நுழையக்கூடாது.

- Advertisement -

இப்படி ஏதாவது ஒரு நல்ல விஷயத்தை அந்த செடியிடம் சொல்லிக் கொண்டே இருங்கள். செடிகளுக்கும் கேட்கக்கூடிய தன்மை உண்டு என்று சொல்லுவார்கள். அதிலும் இந்த செம்பருத்திப் பூச்செடியிடம் நீங்கள் இப்படி சில விஷயங்களை சொல்லி அந்த செடிக்கு தண்ணீர் ஊற்றி வளர்த்து வரும்போது, அந்த செடி உங்கள் நிலை வாசலில் ஒரு பாதுகாப்பு கவசமாகவே நிற்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாகவே இந்த செம்பருத்தி பூ செடிக்கு வீட்டிற்குள் எதிர்மறை சக்தியை நுழைய விட முடியாத ஆற்றல் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. தீய எண்ணத்தோடு யாராவது வீட்டிற்குள் வந்தால் கூட அவர்களுடைய நெகட்டிவ் எனர்ஜியை இந்த செம்பருத்தி பூ செடியானது தன்னகத்தை ஈர்த்துக் கொள்ளும் என்று சொல்லுவார்கள். அதனால் தான் அந்த காலத்திலேயே சிவப்பு செம்பருத்தி பூ செடியை ஒவ்வொரு வீட்டு நிலை வாசலில் வளர்த்து வந்தார்கள். இதையேதான் நாமும் செய்யப்போகின்றோம்.

இதையும் படிக்கலாமே: பண தடையே இல்லாமல் வீட்டில் செல்வம் கொழிக்க கொஞ்சம் ஏலக்காய் இருந்தால் போதும்.

48 நாள் அந்த செடிக்கு தண்ணீர் ஊற்றி வளர்த்து வாருங்கள். செடிக்கு தண்ணீர் ஊற்றும் போது சில பல நல்ல விஷயங்களை அந்த செடியிடம் சொல்லுங்கள். அந்த செடி வளர்வது போல, உங்கள் குடும்பமும் செழிப்பாக வளரும் அதில் எந்த சந்தேகமும் கிடையாது. மாற்றுக்கருத்தும் கிடையாது. 48 நாள் செடிக்கு தண்ணீர் ஊற்ற போறீங்க‌. இதில் என்ன இருக்கு. முயற்சி செய்துதான் பார்ப்போமே. வீட்டிற்கு நல்லது நடந்தால் சந்தோஷம் என்ற இந்த தகவலோடு இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -