கோடீஸ்வரனையும் பிச்சைக்காரன் ஆக்கும் இந்த செயலை நிலை வாசலில் செய்யாமல் இருந்தாலே போதும். மகாலட்சுமி தாயாரே உங்கள் வீடு தேடி வந்து ஐஸ்வர்யங்களை வாரி தருவார்.

nilai vashal kolam
- Advertisement -

நம்முடைய வீடுகளில் தினமும் பூஜை புனஸ்காரங்கள் செய்வது தீபம் ஏற்றுவது போன்ற ஒவ்வொரு காரியமும் பார்த்து பார்த்து செய்வது மகாலட்சுமி தாயார் நம் வீடு தேடி வந்து நமக்கு ஆசிர்வாதங்களையும் ஐஸ்வர்யங்களையும் தர வேண்டும் என்பதற்காக தான். ஏனென்றால் ஒரு வீட்டில் மகாலட்சுமி தாயார் குடிகொண்டு விட்டார் என்றால் அந்த வீட்டில் சகல செல்வங்களுடன் நோய் நொடி இல்லாத நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும் என்பதை அனைவரும் அறிந்த ஒன்றே.

தாயார் நம் இல்லம் தேடி வர இத்தனை காரியங்களையும் செய்யும் நாம் அவர்கள் வராமல் இருப்பதற்கும் நாம் செய்யும் ஒரு சில தவறுகள் தான் காரணம் என்று நம்முடைய சாஸ்திரங்கள் சொல்லுகிறது. அதுவும் நிலை வாசல் என்பது ஒரு வீட்டின் ராஜ வாசல் எனவும் அந்த வீட்டின் குலதெய்வம் தேவதைகள் என அனைவரும் வாசம் செய்யும் இடமாகவும் இதை பார்க்கப்படுகிறது. இப்படியான நிலை வாசலில் நாம் செய்யும் இந்த தவறு மகாலட்சுமி தாயார் நம் வீடு வராமல் சென்று விட காரணமாக அமைகிறது. அது என்ன என்பதை இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

நம் வீட்டு வாசலில் தினமும் தண்ணீர் தெளித்து கோலம் போடுவது மிகவும் சிறந்தது. அதிலும் அரிசி மாவை கொண்டு போடும் இந்தக் கோலம் அதை விட புண்ணியத்தையும் சேர்த்து கொடுக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். அதே போல் வீட்டின் நிலை வாசலிலும் நாம் மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து தீபாராதனை காட்டி வழிபடுவது இந்த லட்சுமி கடாட்சத்தை பெருக்கிக் கொள்வதற்காகத் தான்.

தாயார் வருவதற்காக இத்தனையும் பார்த்து பார்த்து செய்யும் நாம் அவர்கள் வரும் வழியான நிலை வாசலில் காலணிகளையும் துடப்பத்தையும் வைக்க கூடாது என்று சாஸ்திரங்கள் மிகவும் தெளிவாக நமக்கு சொல்கிறது. அந்த காலங்களில் இரவு உறங்கச் செல்லும் முன்பு வீட்டில் வாசலில் இதை போட்டு செல்வார்கள். இதற்குக் காரணம் அர்த்த ஜாமத்தில் எந்த ஒரு தீய சக்தியும் நம் இல்லத்தில் வரக் கூடாது என்பதற்கு தான். அது மட்டும் இன்றி அவர்கள் விடியற்காலையிலே எழுந்து அதை அப்புறப்படுத்திய பிறகு தான் முதல் அடுத்த வேலையை செய்வார்கள்.

- Advertisement -

ஆனால் இன்று அப்படி அல்லாமல் நம் வாசலில் எப்பொழுதும் காலணிகள் இருப்பதை பார்க்க முடிகிறது. வெளியில் எங்கு சென்று வந்தாலும் அதை நேரடியாக வாசலில் தான் வைத்து விடுகிறோம். இதனால் காலையில் தூங்கி எழுந்து வாசல் கதவை திறக்கும் பொழுது காலணிகளை தான் முதலில் பார்க்கிறோம். நிலை வாசலை திறக்கும் பொழுது மகாலட்சுமி தாயாரே வருக என்று வார்த்தையை சொல்லி வாயிலை திறப்பதை மிகவும் விசேஷம். இப்படி வாசலில் காலணியும், துடப்பத்தையும் வைத்தால் தாயார் எப்போதுமே நம் வீட்டிற்குள் நுழைய மாட்டார் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த இரண்டு விஷயங்களையும் நாம் சரியாக செய்து விட்டாலே போதும். நம்முடைய இல்லம் மகிழ்ச்சிகரமானதாக மாறி விடும். ஏனென்றால் இந்த இரண்டும் இருக்கும் போது தாயார் நம் இல்லத்திற்கு வராமல் சென்று விட்டால், நம் வீட்டில் நடக்கும் பிரச்சனைகளை ஒரு கணம் நினைத்து பாருங்கள். கோடீஸ்வரன் கூட நடுத்தெருவிற்கு வந்து விடுவான். மகாலட்சுமி தாயாரின் அருள் இல்லாமல் எந்த ஒரு செல்வ செழிப்பான காரியங்களும் வீட்டில் நடக்காது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதையும் படிக்காலமே: நவகிரகங்களை வீட்டில் இருந்த படியே இப்படி மட்டும் வழிபாடு செய்து பாருங்கள். வாழ்க்கையில் நீங்கள் நினைத்தும் பார்த்திராத நல்ல மாற்றங்கள் எல்லாம் விரைவில் கைகூடும் அதிசயம் நடக்கும்.

இந்த ஒரு தவறை இனியும் நாம் செய்யாமல் காலணிகளையும் துடப்பத்தையும் வைப்பதற்கு என வீட்டின் ஓரத்தில் தனியாக ஒரு இடத்தை ஒதுக்கி அங்கு வைக்க பழகிக் கொள்ளுங்கள். வீட்டில் இருப்பவர்களுக்கும் சொல்லிக் கொடுத்து பழகிக் கொள்ளுங்கள். இதை செய்த பிறகு நீங்கள் எந்த ஒரு பூஜை புனஸ்காரங்கள் செய்தாலும் அதன் பலனை முழுமையாக அனுபவிக்கலாம் என்ற தகவலுடன் இந்த பதிவினை நாம் நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -