குடும்பத்தில் உள்ள எப்பேர்ப்பட்ட பிரச்சனைகளும் தீர நிலைவாசலில் இந்த வாஸ்து தீபத்தை ஏற்றினால் போதும். உங்கள் குடும்பத்தின் தலையெழுத்தே மாறி ஊரே வியந்து பார்க்கும் ராஜ வாழ்க்கை வாழலாம்.

dheepam nilaivasal
- Advertisement -

இன்றைய கால சூழ்நிலையில் ஒரு குடும்பம் ஓஹோவென வாழ்கிறது என்று சொன்னால் அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் மகிழ்ச்சியுடன், நிம்மதியுடனும் கடன் சுமை இல்லாமல் ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டும். இத்தனை நலன்களும் பெற்று வாழக் கூடிய குடும்பம் தான் நல்ல ஒரு சுபிட்சத்தை பெற்ற குடும்பமாக பார்க்கப்படுகிறது. இவை அனைத்தையும் ஒரு சேர பெறுவது என்பதும் சாதாரணமான விஷயம் கிடையாது. அதை எல்லாம் பெற ஒரு தீபம் போதும் என்று வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது. அது என்ன தீபம் எப்படி ஏற்ற வேண்டும் என்பதை இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

குடும்பத்தில் உள்ள வாஸ்து பிரச்சனைகள் தீர ஏற்ற வேண்டிய தீபம்
குடும்பம் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் எனில் அந்த வீட்டில் வாஸ்து பிரச்சனை எதுவும் இல்லாமல் இருக்க வேண்டும். இது மிக மிக முக்கியம் . ஆகையால் தான் அந்தக் காலம் முதல் வீட்டை வாஸ்து பார்த்து பார்த்து கட்டி வந்தார்கள். எப்படி இருப்பினும் ஏதேனும் ஒரு சில இடங்களில் இந்த வாஸ்து பிரச்சனைகள் வந்து குடும்பத்தின் ஆணிவேரையே ஆட்டம் காண வைக்கும் அளவிற்கு உருவெடுத்து விடுகிறது. அப்படியான பிரச்சனையை கூட இந்த ஒரு தீபம் சரி செய்யும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

இந்த தீபம் ஏற்ற ஒரு சின்ன சொம்பு வாங்கி கொள்ளுங்கள். இதற்கு சில்வர் சொம்பு பயன்படுத்தக் கூடாது. சொம்பு நிறைய தண்ணீர் ஊற்றிய பிறகு ஒரு துண்டு பச்சை கற்பூரம், ஒரு ரூபாய் நாணயம், கொஞ்சம் மஞ்சள் தூள் இதை எல்லாம் கலந்த பிறகு கடைகளில் இப்போதெல்லாம் ரெடி மேட் நெய் விளக்கு கிடைக்கும். அதை வாங்கி இந்த தண்ணீரின் மேல் வைத்து நிலை வாசலுக்கு உட்புறம் வலது பக்கத்தில் வைத்து இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். இந்த தீபம் குறைந்தது 15 நிமிடம் எரிய வேண்டியது அவசியம்.

இந்தப் பொருட்களை எல்லாம் வாங்கி ஏற்ற முடியாதவர்கள் வேறு ஒரு முறையில் இந்த தீபத்தை ஏற்றி வழிபடலாம். அதற்கு வீட்டில் நிலை வாசலின் உட்புறம் இதே போல் வலது பக்கத்தில் சின்னதாக ஒரு ஸ்டார் போல போட்டு அதன் மேல் அகல் தீபம் வைத்து நெய் ஊற்றி தீபம் ஏற்றலாம். இந்த தீபத்தின் ஒளியானது கிழக்கு அல்லது வடக்கு புறமாக இருக்க வேண்டும். இந்த விளக்கை சுற்றி மலர்களால் அலங்காரம் செய்து வைத்து விடுங்கள் போதும்.

- Advertisement -

இந்த தீபம் ஏற்றும் போதும் தீபம் எரியும் போதும் தீபத்திற்கு முன் அமர்ந்து ஓம் வாசு புருசாய நமக என்று இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும். வீட்டில் பிரச்சனைகள் மேலோங்கி இருக்கும் போதும் வீட்டில் நிம்மதி இல்லாமல் இருக்கும் போது பணத்தட்டுப்பாடு இப்படியான சூழ்நிலைகளில் இதை ஏற்றினால் கூட போதும். ஒரு முறை இந்த தீபம் ஏற்றினாலே இதற்கான பலன் பல மடங்கு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: இந்த மந்திரத்தை தினமும் உச்சரித்தால் பர்சில் வைக்க முடியாத அளவிற்கு பணம் உங்களைத் தேடி வரும்.

இந்த தீபம் வீட்டில் ஏற்ற ஏற்ற வீட்டில் பண வரவு அதிகரிக்கும் காரியத்தடைகள் நீங்கும். வீட்டில் நிம்மதி பிறக்கும் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். இப்படி பல முன்னேற்றங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். பொருளாதாரத்தில் எந்த நிலையில் பின்தங்கி இருந்தாலும் இந்த தீபம் ஏற்றும் போது அது எல்லாம் தகர்த்தெறிந்து ராஜபோக வாழ்க்கையை வாழ்வதற்கான யோகங்களை பெற்று தரும் என்று சொல்லப்படுகிறது நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இந்த தெய்வ முறையை கடைப் பிடிக்கலாம் என்ற இந்த தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -