நிலை வாசலில் இந்த 1 படத்தை மாட்டி வைத்தால் உங்கள் குடும்பத்திற்கே நல்லது நடக்கும்.

pillaiyar7
- Advertisement -

குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் பிரச்சனை. சின்ன பிள்ளைகளுக்கு படிப்பில் பிரச்சனையாக இருக்கும். பெரியவர்களுக்கு பணம் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக இருக்கும். பெண்களுக்கு ஒரு வகையில் பிரச்சனை இருக்கும். சில குடும்பங்களில் கண் திருஷ்டியால் பிரச்சனை இருக்கும். சில குடும்பங்களில் இதையெல்லாம் தாண்டி வேறு ஒரு பிரச்சனை இருக்கும். பிரச்சினைகளுக்கா பஞ்சம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி பிரச்சனைகள் இருக்கிறது. ஒட்டுமொத்த குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும் என்றால் நாம் வீட்டில் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவலை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

மொத்த குடும்பமும் சந்தோஷமாக இருக்க செய்ய வேண்டிய பரிகாரம்:
மொத்த குடும்பமும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால் வீட்டில் இருப்பவர்கள் ஒவ்வொருவரும் சுறுசுறுப்பாக, அவரவர் வேலையை அந்தந்த நேரத்தில் செய்து விட வேண்டும். சோம்பேறித்தனத்தோடு ஒரு குடும்பத்தில் ஒருவர் இருந்தால் கூட, அது மற்றவர்களை பாதித்துவிடும். முதலில் குடும்பத்தில் இருப்பவர்களுடைய சோம்பேறித்தனத்தை ஒழிக்க வேண்டும். அதற்கு உண்டான வழிகளை பாருங்கள்.

- Advertisement -

அதிகாலை வேளையில் கண்விழிப்பது, வாசல் தெளித்த கோலம் போடுவது, வீட்டு பூஜையில் விளக்கு ஏற்றி வாசனை நிறைந்த தூபம் போடுவது, வீட்டில் இனிமையான இறை சம்பந்தப்பட்ட பாடல்களை ஒலிக்க வைப்பது, போன்றவை பாசிட்டிவான எனர்ஜியை கொடுக்கும். மேல் சொன்ன விஷயங்களை தினம் தினம் தொடர்ந்து செய்து வர வேண்டும்

ஒரு வீட்டின் சந்தோஷமோ, துக்கமோ அது அந்த நிலை வாசல் படியில் தான் உள்ளது. நிலை வாசலை தாண்டி தான் வீட்டிற்குள் சந்தோஷமும் நுழையும் துக்கமும் நுழையும். அப்படிப்பட்ட நிலை வாசலில் நாம் இந்த ஒரு படத்தை மாட்டி வைத்துவிட்டால் போதும். நம்முடைய நிலை வாசலுக்குள் சந்தோஷத்தை மட்டும் அனுமதிக்க கூடிய வேலையை இந்த கடவுள் பார்த்துக் கொள்வார்.

- Advertisement -

நிலை வாசலில் மாட்ட வேண்டிய அந்த ஒரு படம் என்ன தெரியுமா. பிள்ளையார் தாங்க. அதிலும் பிள்ளையார்பட்டியில் இருக்கக்கூடிய பிள்ளையாரின் திருவுருவப்படத்தை சின்ன அளவில் மாட்டினாலும் சரிதான். உங்கள் வீட்டு நிலை வாசலில் பிள்ளையார்பட்டி பிள்ளையார் வந்து அமர்ந்து விட்டால், உங்கள் வீட்டிற்குள் எந்த ஒரு கெட்ட சக்தியும் நுழையாது. உங்கள் குடும்பத்தில் இருப்பவர்கள் எல்லோருக்கும் நல்லதே நடக்கும்.

என்னடா இது என்ன செய்தும் நம்முடைய குடும்பம் முன்னேறவில்லையே, குடும்பத்தில் இருப்பவர்களுக்கு அடுத்தடுத்த கஷ்டம் வந்து கொண்டே இருக்கிறதே, என்ன சாமி கும்பிட்டும் எந்த பலனும் இல்லை என்று, வெறுக்கும் அளவுக்கு சில பேருக்கு கஷ்டங்கள் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் கூட எளிமையான இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.

இதையும் படிக்கலாமே: வீட்டில் இருக்கும் தங்க நகைகள் அடகு கடைக்கு செல்லாமல் இருக்கவும், மகாலட்சுமியின் அருளை பரிபூரணமாக பெறுவதற்கும் இந்த முறையில் வழிபாடு செய்தாலே போதும். கெட்ட நேரங்கள் அனைத்தும் நல்ல நேரங்களாக மாறிவிடும்.

நிலை வாசலில் பிள்ளையாரை வைத்துவிட்டு அப்படியே விட்டுவிடக்கூடாது. தினமும் விளக்கு ஏற்றி அந்த பிள்ளையாருக்கு ஊதுவத்தை காண்பித்து வழிபாடு செய்து வரவும். மேல் சொன்ன இந்த சின்ன எளிமையான வழிபாட்டு முறையை பின்பற்றி வந்தாலே உங்கள் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். நிலை வாசலில் ஏற்கனவே வேறு ஸ்வாமி படம் இருக்கிறது. இந்த பிள்ளையாரை வைக்க முடியவில்லை என்றாலும் கவலைப்பட வேண்டாம். வீட்டு வரவேற்பறையில் இந்த பிள்ளையார்பட்டி பிள்ளையாரை வாங்கி மாட்டி வையுங்கள். உங்கள் கஷ்டம் நிச்சயம் தீரும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன எளிமையான இந்த பரிகாரத்தை பின்பற்றி பலன் பெரலாம் என்ற தகவலுடன் இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -