நிலை வாசலில் உப்பை இப்படி வைத்தால் நீங்கள் நினைத்தது நிச்சயம் நடக்கும்.

salt-lakshmi
- Advertisement -

உப்பை வைத்து நம்பிக்கையுடன் செய்யக்கூடிய பரிகாரங்கள் எதுவுமே நிச்சயமாக தோற்காது‌. காரணம் உப்பு மகாலட்சுமியின் அம்சமாக பார்க்கப்படுகிறது. உங்களுடைய வீட்டில் பணக்கஷ்டம் இருந்தாலும் கடன் சுமை இருந்தாலும் அல்லது மற்ற ஏதாவது சுபகாரியத் தடை இருந்தாலும் சரி பின் சொல்லக்கூடிய இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். நிச்சயமாக ஏதாவது ஒரு வகையில் உங்களுடைய கஷ்டத்திற்கான நல்ல தீர்வு கிடைத்துவிடும். சில பேர் வேலை இல்லாமல் திண்டாடி வருவார்கள். சில பேர் வேலை இருந்தும் தொழில் இருந்தும் அதில் வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருவார்கள். இப்படிப்பட்டவர்களும் இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம்.

இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை செய்வது சிறப்பு. வெள்ளிக்கிழமை முடிந்தால் காலை 6.00 மணியிலிருந்து 7.00 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்யும் போது, பரிகாரத்திற்கு நிச்சயமாக இரட்டிப்பு பலன் கிடைக்கும். இந்த செய்ய முடியாத சூழ்நிலை இருந்தால் வெள்ளிக்கிழமை நீங்கள் பூஜை செய்யக்கூடிய நேரத்தில் கூட இந்த பரிகாரத்தை கூடவே சேர்த்து செய்து செய்யலாம்.

- Advertisement -

இந்த பரிகாரத்திற்கு நமக்கு சிவப்பு நிற சதுர வடிவில் இருக்கும் துணி, கல்லுப்பு தேவை. உங்களுடைய வீட்டில் செப்பு நாணயம் இருந்தால் அதை நீங்கள் பரிகாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். செப்பு நாணயம் இல்லை என்றால் இப்போது நாம் பயன்படுத்தும் 1 ரூபாய் நாணயம், 5 ரூபாய் நாணயத்தை பயன்படுத்த வேண்டாம். காரணம் இந்த நாணயங்களில் இரும்பு கலப்படம் இருந்தால் பரிகாரத்தின் மூலம் நமக்கு முழு பலன் கிடைப்பதற்கு சிரமம் இருக்கும்.

பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, சிவப்பு சதுர நிறத் துணியை ஒரு தாம்பூல தட்டில் வைத்துக் கொள்ளுங்கள். அதன் உள்ளே உப்பு வைக்க வேண்டும். மூன்று முறை உங்கள் கையால் உப்பை எடுத்து அந்த துணியில் வைக்க வேண்டும். மூன்று முறை கையில் உப்பு எடுக்கும்போதும், உங்களுடைய கோரிக்கையை மனதார குலதெய்வத்திடமும் மகாலட்சுமி தேவியிடமும் வைத்துவிட்டு அதன் பின்பு அந்த உப்பை எடுத்து சிகப்பு துணியின் மேல் வையுங்கள்.

- Advertisement -

கை நிறைய உப்பை அள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. 1 ஸ்பூன் உப்பு எடுத்து உள்ளங்கைகளில் வைத்து வேண்டி சிவப்பு துணியில் வையுங்கள். இதே போல மூன்று முறை மொத்தமாக, மூன்று ஸ்பூன் உப்பு பரிகாரத்திற்கு பயன்படுத்தினால் போதும். கையில் உப்பை வைத்துக் கொண்டு உங்களுடைய வேண்டுதலை வைக்கும் போது, உங்களுடைய மனதில் ஒரு துளி அளவும் சஞ்சலம் இருக்கக் கூடாது. மனது ஒரு நிலையாக உங்களுடைய வேண்டுதலை மட்டும்தான் நினைத்திருக்க வேண்டும்.

இந்த முடிச்சை அப்படியே சிவப்பு நூலில் முடிச்சாக கட்டி நிலை வாசல் படியில் தொங்கவிட்டு விடுங்கள். தினமும் ஊதுவத்தி காண்பிக்கும் போது நிலை வாசல்படியில் இருக்கும் இந்த முடிச்சுக்கும் ஊதுவத்தை காண்பித்து வந்தால் போதும். உங்களுடைய வேண்டுதல் கூடிய சீக்கிரத்தில் நிறைவேறும். கடன் பிரச்சனை காசு பணத்திற்காக மட்டும்தான் இந்த பரிகாரம் கிடையாது. பிரிந்த உறவுகள் ஒன்று சேர கூட இந்த பரிகாரத்தை நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம்.

நிலை வாசலில் கட்டி வைத்திருக்கும் அந்த முடிச்சை எப்போது கழட்ட வேண்டும். மாதத்திற்கு ஒருமுறை கழட்டி உள்ளே இருக்கும் உப்பை மட்டும் தண்ணீரில் கரைத்து விடுங்கள். உங்களுடைய வேண்டுதல் நிறைவேறிவிட்டால் மீண்டும் இந்த முடிச்சை கட்ட வேண்டாம். வேண்டுதல் நிறைவேறாத பட்சத்தில் மீண்டும் அதே வேண்டுதலை நினைத்து உப்பை சிவப்பு துணியில், மேல் சொன்னபடி வைத்து கட்டி நிலை வாசற்படியில் தொங்கவிட வேண்டும்.

இந்த சிறிய உப்பு பரிகாரம் நிச்சயமாக உங்களுக்கு பெரிய அளவில் நன்மைகளை தரக்கூடியதாக அமையும். நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து பார்த்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -