தங்க நகை வீட்டில் மென்மேலும் சேருவதற்கு 108 ரூபாய் நாணயம் இருந்தால் போதுமே! அள்ள அள்ள குறையாத தங்க நகை சேர்க்கைக்கு எளிய வழிபாடு!

- Advertisement -

தங்க நகை சேர்க்கை என்பது இப்பொழுது பெருகி வருகிறது. எல்லா வகையான திருமண சடங்குகளுக்கும் தங்க நகை என்பது பிரதானமாக இருக்கிறது. தங்க நகை ஒரு சேமிப்பாகவும், முதலீடாகவும் கூட செய்து வருகிறோம். இந்த ஒரு தங்க நகையை வாங்க முடியாதவர்கள் தொடர்ந்து 48 நாட்கள் இந்த வழிபாடு செய்தால் விரைவிலேயே உங்களுக்கும் தங்கம் சேரும் என்கிறது சாஸ்திரங்கள். அப்படியான ஒரு எளிய தங்க நகை பரிகாரத்தை தான் இந்த ஆன்மீக குறிப்பு தகவல்களின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

வசதி வாய்ப்பு இருந்தால் தான் தங்கம் சேரும் என்பது அல்ல, மகாலட்சுமியின் அருட்கடாட்சம் பெருகினாலே தங்கம் உங்களுக்கு சேர ஆரம்பிக்கும். தங்கம் மட்டும் அல்ல வைரமும் இதில் அடங்கும். தங்கம், வைரம் போன்ற ஆபரணங்கள் வாங்கி குவிக்க மகாலட்சுமியை எப்படி எளிதாக வழிபடலாம்?

- Advertisement -

உங்கள் வீட்டில் மகாலட்சுமியின் படம் கண்டிப்பாக வைத்திருப்பீர்கள். மகாலட்சுமியின் படத்திற்கு முன்பு 48 நாட்கள் இந்த பூஜையை செய்ய வேண்டும். முதலில் 108 ரூபாய் நாணயங்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு ரூபாய் நாணயமாக இருந்தால் போதுமானது. இதனை சுத்தமான வெள்ளை காட்டன் துணியை எடுத்து அதை மஞ்சளில் கலந்து தோய்த்து மஞ்சளாக காய வைத்து உலர்த்தி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இந்த நாணயங்களை மொத்தமாக போட்டு ஒரு முடிச்சு போல கட்டி மூட்டையாக எடுத்துக் கொண்டு போய் பூஜை அறையில் மகாலட்சுமி படத்திற்கு முன்பு வையுங்கள்.

48 நாட்கள் மனதார மகாலட்சுமியின் மீது நம்பிக்கை வைத்து அவளுக்கு இஷ்டமான இனிப்பு வகைகள் ஏதேனும் ஒன்றை வைத்து தினமும் பிரார்த்திக்க வேண்டும். எனக்கு தங்கம் அதிகம் சேர வேண்டும், தங்க நகை, வைர நகைகளை வாங்கி குவிக்க வேண்டும், திருமணத்திற்கு நகை சேர்க்க வேண்டும், வீடு கட்ட கொஞ்சம் கொஞ்சமாக தங்கமாக முதலீடு செய்ய வேண்டும் என்று உங்கள் ஆசைகளையும், வேண்டுதல்களையும் நீங்கள் மனதார வைக்க வேண்டும். டைமன் கற்கண்டு இருந்தால் அதை நைவேத்தியம் படையுங்கள் ரொம்பவே நல்லது.

- Advertisement -

இது போல 48 நாட்கள் மகாலட்சுமியின் படத்திற்கு முன்பு வைத்திருக்கும் இந்த நாணயத்தை பார்த்து வணங்கி வேண்டி கொள்ள வேண்டும். பின் 48 நாட்கள் முடிந்த பிறகு அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று அங்குள்ள தாயார் சன்னதியின் தட்டில் இந்த நாணயத்தை வைக்கலாம் அல்லது அங்குள்ள உண்டியலில் கூட இந்த நாணயத்தை மூட்டை பிரிக்காமல் அப்படியே போட்டு விடலாம். இது போல நீங்கள் செய்தால் கண்டிப்பாக உங்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக தங்க நகையானது சேர ஆரம்பிக்கும். அதற்கான வழியை அம்பாளே காண்பிப்பார்.

இதையும் படிக்கலாமே:
பலாப்பழத்தில் பாயாசமா! அடடே இது என்ன புது சுவையாக இருக்கிறதே என்று அனைவரும் கூறும் அளவிற்கு சுவைக்க சுவைக்க நாவில் நாட்டியமாடும் பலாச்சுளை பாயாசம் ரெசிபி

இப்படி வழிபட்டால் மட்டும் தங்கம் சேருமா? உழைக்க வேண்டாமா? என்று சொல்லக்கூடாது. எவ்வளவுதான் உழைப்பு இருந்தாலும், நம்மால் தங்க நகை வாங்க முடிகிறதா? உழைப்பிற்கு உழைப்பும், வேண்டுதலுக்கு வேண்டுதலும் கொடுக்கும் பொழுது தான் ஆசைகளும் நிறைவேறுகின்றன. முழு நம்பிக்கையோடு இந்த பிரார்த்தனை நீங்கள் செய்தால் கண்டிப்பாக உங்களிடம் தங்கும் சேர ஆரம்பிக்கும். ஒரு முறை செய்த பின்பு மறுபடியும் இதே போல மூட்டை கட்டி வைத்து 48 நாட்கள் பூஜை செய்யலாம்.

- Advertisement -