நீண்ட நாட்களாக நினைத்த வேலை கிடைக்காமல் வருத்தப்பட்டு கொண்டு இருக்கிறீர்களா? இந்த வழிபாட்டை மேற்கொண்டு பாருங்கள். கை மேல் பலன் நிச்சயம் கிடைக்கும்.

job prayer
- Advertisement -

இன்றைய காலகட்டத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் வேலைக்கு சென்று சம்பாதிக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள். அந்த முயற்சியில் வெற்றியும் அடைகிறார்கள். அதே சமயம் தாங்கள் ஆசைப்பட்ட வேலையில் தான் அனைவரும் வேலை செய்கிறார்களா என்பது ஒரு பெரிய கேள்விக்குறி. சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக கிடைக்கின்ற வேலையை செய்து கொண்டிருப்பவர்கள் பலர். சிலரோ தான் நினைத்த வேலையை தான் செய்ய வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருப்பார்கள். இன்னும் சிலரோ அரசாங்க உத்தியோகம் தான் வேண்டும் என்று அதற்கான முயற்சிகளை மேற்கொள்வார்கள். இப்படி வேலை தொடர்பான எந்த வேண்டுதலாக இருந்தாலும் எந்த வழிபாட்டை செய்வதன் மூலம் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

வேலை தொடர்பான அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றக்கூடிய தெய்வமாக சூரிய பகவான் விளங்குகிறார். இவர் ஆட்சிக்கும், அதிகாரத்திற்கும் உட்பட்டவர் என்பதால் அதிகாரத்தனமிக்க அரசாங்க வேலையை விரும்புபவர்கள் சூரிய பகவானை வழிபட வேண்டும். அவரை முறையாக நாம் வழிபட்டோம் என்றால் நம்முடைய வேலை தொடர்பான வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும்.

- Advertisement -

சூரிய பகவானுக்கு உகந்த கிழமையாக கருதப்படுவது ஞாயிற்றுக்கிழமை. மேலும் அவருக்கு உகந்த தானியமாக கருதப்படுவது கோதுமை. ஞாயிற்றுக்கிழமை அன்று சூரிய உதயத்திற்கு முன்பாகவே இந்த வழிபாட்டை மேற்கொள்ள தயாராகி விட வேண்டும். இந்த வழிபாட்டை மேற்கொள்வதற்கு நமக்கு ஒரு வாழை இலையும், இரண்டு அகல் விளக்கும், கோதுமை மாவு மற்றும் நாட்டுச்சர்க்கரையும் தேவைப்படும்.

சூரிய வெளிச்சம் எங்கே நேரடியாக படுகிறதோ அந்த இடத்திற்கு வந்து பூஜை செய்ய வேண்டும். பூஜை செய்யும் இடத்தை சுத்தம் செய்து மாக்கோலம் போட வேண்டும். பிறகு அதில் வாழை இலையை விரித்து அதற்கு நடுவில் சிறிது கோதுமை மாவை பரப்பி அதன் மேல் இரண்டு அகல் விளக்குகளை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

சூரிய பகவானுக்கு நெய்வேத்தியமாக ஒரு தட்டில் சிறிது கோதுமை மாவை எடுத்து அதனுடன் நாட்டுச் சர்க்கரையும் சேர்த்து வைக்க வேண்டும். சூரியன் உதயமாகும் பொழுது ஊதுபத்தி ஏற்றி, கற்பூர ஆரத்தி காட்டி அவரை மனதார வழிபட வேண்டும். இந்த தீபம் குறைந்தது ஒரு மணி நேரமாவது எரிய வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து விளக்கை குளிர வைத்து பூஜை பொருட்கள் வீட்டிற்குள் எடுத்து வர வேண்டும். வாழை இலையில் வைத்த கோதுமை மாவையும், தட்டில் வைத்த கோதுமை மாவையும் ஒன்றாக சேர்த்து வாழை இலையுடன் அருகில் இருக்கும் பசு மாட்டிற்கு தானமாக வழங்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: தினமும் இந்த திலகத்தை வைத்தால் போதும் சுக்கிர யோகம் பெற்று ஆனந்தமான,அழகான வாழ்க்கை அமைவதோடு நீங்கள் கனவிலும் நினைத்து பார்க்க உயரத்தை தொடலாம்.

இவ்வாறு நாம் தொடர்ந்து ஒன்பது ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானை வழிபாடு செய்தோம் என்றால் நாம் நினைத்த வேலை அது அரசாங்க வேலையாக இருந்தாலும் அது கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் அதிகரிக்கும்.

- Advertisement -