கைக்கூடி வரும் வாய்ப்புகள் அனைத்தும் கடைசி நேரத்தில் கை நழுவி சென்று விடுகிறதா? உங்களை தரித்திரம் பிடித்தவர் என்று ஒதுக்கிறர்களா? சனிக்கிழமையில் இந்த எளிமையான பரிகாரத்தை செய்து விடுங்கள். இனி நீங்கள் தொட்டதெல்லாம் ஜெயம் தான்.

kariya thadai
- Advertisement -

நம் அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ பேரை சந்தித்திருப்போம் ஒவ்வொருவர் வாழ்க்கை சூழ்நிலையும் ஒவ்வொரு விதமாக ஒரு சிலரின் நிலையை கேட்டால் இப்படி எல்லாம் கூட நடக்குமா என்று நாமே வியக்கும் அளவிற்கு அவர்களுடைய வாழ்க்கையில் பிரச்சனைகள் தலைவிரித்தாலும். இத்தனைக்கும் அவர்கள் நல்ல உழைப்பாளிகளாக இருப்பார்கள் தொடர்ந்து முயற்சிகள் எடுப்பார்கள் இருப்பினும் அவர்களுடைய வாழ்க்கையில் எந்த ஒரு சின்ன மாற்றமும் இல்லாமல் எப்பொழுதும் துன்பத்திலே இருப்பார்கள் அப்படியானவர்கள் கூட வாழ்க்கையில் வெற்றி பெற்று உயர பணவரவை அதிகரித்துக் கொள்ளக் கூடிய ஒரு அருமையான தாந்திரீக பரிகார முறையை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

காரிய தடை நீங்கி பணவரவு அதிகரிக்க
ஒரு மனிதன் நல்ல முறையில் முன்னேற வேண்டுமெனில் பாடுபட்டு உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்பது எல்லாம் சரி தான். ஆனால் அப்படி உழைப்பவர்கள் எல்லாராலும் அந்த நிலையை நாம் எட்டி விட முடிவதில்லை. அதற்கு காரணம் அவர்கள் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் அதற்கான பலனை தருவதில்லை. இது எல்லோருக்கும் நடக்குமா என்றால் அப்படி இருக்காது. ஒரு சிலருக்கு மட்டும் தான் இது போன்ற பிரச்சனைகள் தொடர்ச்சியாக இருக்கும். அவர்களால் எந்த ஒரு செயலிலும் வெற்றி அடையவே முடியாது. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம் கிரக தோஷம், ஜாதகம், கர்மா என எது வேண்டுமானாலும் இருக்கலாம் இந்த பரிகாரத்தை செய்யும் போது அனைத்தும் சரியாகும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

இந்த பரிகாரத்தை சனிக்கிழமை அன்று தான் செய்ய வேண்டும் சனிக்கிழமை காலை முதல் மாலை 6 மணிக்குள் உங்களால் முடிந்த நேரத்தில் இதை செய்து கொள்ளலாம். இந்த பரிகாரத்தை யார் செய்கிறார்களோ அவர்களின் முழு நீளத்திற்கு ஒரு கருப்பு கயிறை அளந்து அதை ஐந்து மடங்காக எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது ஒருவரின் உயரத்திற்கு ஏற்ற அளவு கருப்பு கயிறு ஐந்து மடங்கு இருக்க வேண்டும். அடுத்து ஒரு மட்டை தேங்காய் இந்த இரண்டும் தான் இந்த பரிகாரத்திற்கு தேவை.

இப்போது சனிக்கிழமை அன்று உங்கள் வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி விட்டு இஷ்ட தெய்வம், குலதெய்வம் என உங்கள் விருப்பமான தெய்வத்தை மனதார வணங்கிக் கொள்ளுங்கள். உங்களுடைய துன்பம், துயரம், காரிய தடை, ராசி இல்லாதன்மை, பணத்தடை என உங்களுக்கு இருக்கும் அனைத்து இன்னல்களும் நீங்க வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொண்டு அளந்து வைத்த இந்த கருப்பு கயிற்றால் மட்டை தேங்காயை சுற்றி கட்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்படி கட்டிய இந்த மட்டை தேங்காயை உங்கள் வீட்டில் அருகில் இருக்கும் ஓடும் நீரில் விட வேண்டும். இதை வேறு எங்கும் போடக் கூடாது இதில் குறிப்பாக கவனிக்க வேண்டியது என்னவெனில் நீங்கள் இந்த மட்டை தேங்காய் கயிறு சுற்றிய பிறகு யாரிடமும் பேசக் கூடாது. நேரடியாக சென்று அதை ஓடும் நேரில் போட்டு விட்ட பிறகு யாரிடமும் பேசாமல் திரும்பி பார்க்காமல் நேராக வீட்டிற்கு வந்து கை கால்களை அலம்பி கொண்டு வீட்டுக்குள் சென்று விடுங்கள்.இது தான் பரிகாரம்.

இதையும் படிக்கலாமே: கையில் ஒரு ரூபாய் கூட இல்லையேன்னு இனி கவலை பட வேண்டாம். சனிக்கிழமையில் அரச இலையில் இப்படி எழுதி வைத்து கொள்ளுங்கள். பணம் பத்து திக்கிலும் இருந்தும் பறந்தோடி வரும்.

இந்த பரிகாரத்தை நீங்கள் 5 வாரங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். இதை செய்த ஒன்று இரண்டு வாரத்திற்குள்ளாகவே உங்களுக்கு இருக்கும் தடைகள் அனைத்தும் விலக ஆரம்பிக்கும். தடைகள் விலகினாலே வாழ்க்கையில் வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும் பண வரவு அதிகரிக்கும். இது வரை இல்லாத ஒரு நிம்மதியான மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ இந்த பரிகாரம் வழிவகுக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை செய்து நல்ல முறையில் வாழ்வதற்கான வழி அமைத்து கொள்ளலாம் என்ற இந்த தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -