கையில் ஒரு ரூபாய் கூட இல்லையேன்னு இனி கவலை பட வேண்டாம். சனிக்கிழமையில் அரச இலையில் இப்படி எழுதி வைத்து கொள்ளுங்கள். பணம் பத்து திக்கிலும் இருந்தும் பறந்தோடி வரும்.

cash in hand arasa ilai
- Advertisement -

அன்றாட தேவைக்கு கூட பணம் இல்லாமல் அவதிப்படுபவர்கள் இன்றைய காலத்தில் ஏராளமானவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். அடுத்த வேலை உணவிற்கும் வழி இல்லை. அடுத்து ஏதும் வாங்க வேண்டும் என்றால் அதற்கும் கையில் பணம் இல்லை என்று நினைக்கும் எளிய மக்களும் நல்ல முறையில் செல்வ செழிப்புடன் வாழ வைக்க ஒரு அருமையான பரிகாரம் தான் இந்த அரச இலை பரிகாரம். இந்த பரிகாரத்தை எப்படி செய்வது என்பதை பற்றி ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

பணம் வந்து கொண்டே இருக்க அரச இலை பரிகாரம்
இந்த பரிகாரத்தை நாம் சனிக்கிழமைகளில் மட்டும் தான் செய்ய வேண்டும். ஏனெனில் சனிக்கிழமையில் மட்டும் தான் அரச மரத்தில் மகாவிஷ்ணுவும் மகாலட்சுமி தாயாரும் ஒன்றாக வாசம் செய்வார்கள் என்பது ஐதீகம். இன்றைய நாளில் இதை செய்யும் போது தான் நமக்கு இந்த பரிகாரத்திற்கான முழு பலன் கிடைக்கும்.

- Advertisement -

சனிக்கிழமை மாலை 6:00 மணிக்கு முன் இந்த பரிகாரத்தை செய்து விடுங்கள். இதற்கு உங்கள் வீட்டில் அருகில் இருக்கும் அரச மரத்தடிக்கு சென்று அரசை இலையை பறித்து கொள்ளுங்கள். இந்த இலை மூன்று, ஐந்து, ஏழு என்ற உங்களுக்கு எத்தனை வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு இந்த அரச இலையை வீட்டிற்கு கொண்டு வந்து கங்காஜலம் விட்டு அலம்ப வேண்டும். இது இப்போதெல்லாம் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது இதை வாங்கி பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

அதன் பிறகு சுத்தமான மஞ்சளை கடையில் வாங்கி வீட்டிலே அரைத்து அந்த மஞ்சளில் இருந்து கொஞ்சம் எடுத்துக் கொள்ளுங்கள். அத்துடன் புதிதாக உரை ஊற்றிய தயிரையும் சேர்த்து கெட்டியாக பேஸ்ட் போல குறைத்துக் கொள்ளுங்கள். இப்போது பரிகாரத்திற்கு தேவையான அனைத்தும் தயாராகி விட்டது. இந்த அரச இலை நீங்கள் தயார் செய்து வைத்த மஞ்சள் தயிர் பேஸ்ட் இவை அனைத்தையும் எடுத்துக் கொண்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விட்டு அமர்ந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது இந்த இலையில் குழைத்து வைத்த மஞ்சள் பேஸ்ட்டை உங்களுடைய வலது கையின் மோதிர விரலில் எடுத்து அரச இலையில் ரீம் என்ற வார்த்தையை எழுத வேண்டும். அதன் பிறகு இந்த இலையை பூஜை அறையில் மகாலட்சுமி தாயார் படத்திற்கு முன்பாக வைத்து விட்டு உங்களுடைய பணப் பிரச்சனை தீர வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டு அப்படியே வைத்து விடுங்கள். இது நன்றாக ஆறட்டும். இந்த இலையை நீங்கள் எங்கெல்லாம் வைக்க வேண்டுமோ அத்தனை இலைகளில் எழுதிக் கொள்ளுங்கள்.

அதன் பிறகு இந்த இலையை உங்கள் மணிப் பரிசில் வைத்துக் கொள்ளுங்கள். பிரோவில் பணம் வைக்கும் இடத்தில் வைத்து விடுங்கள். தொழில் செய்பவராக இருந்தால் வியாபார ஸ்தலங்களில் வைத்துக் கொள்ளலாம். இப்படி நீங்கள் பணம் வைக்கும் அணைத்து இடத்திலும் வைத்துக் கொள்ளுங்கள். ஒரே வீட்டில் கணவன், மனைவி, பிள்ளைகள் என தனி தனியாக கூட இதை செய்து வைத்துக் கொள்ளலாம். ஆண்கள் இதை பரிசில் வைத்து பயன்படுத்தும் போது இடுப்பிற்கு கீழே பரிசை வைக்க கூடாது இது மிகவும் முக்கியமான ஒன்று. இந்த பரிகாரத்தை எட்டு வாரங்கள் தொடர்ந்து செய்து வாருங்கள். இப்படி எழுதி வைத்த இலையை அடுத்த வாரம் நீங்கள் ஓடும் நீரில் விட்டு விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: உடல் நலனில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படுகிறதா? வீட்டில் இருப்பவர்களில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு மருத்துவ செலவு நேரிடுகிறதா? அப்பொழுது இந்த தானத்தை செய்து பாருங்கள். குடும்பத்தில் மருத்துவ செலவு குறைய ஆரம்பிக்கும்.

இந்த பரிகாரத்தை நீங்கள் தொடர்ந்து செய்து வர வர உங்களுக்கு வர வேண்டிய பணம் வருவதோடு மட்டுமில்லாமல் புதிதாக பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். வருமானம் அதிகரிக்கும் வியாபாரம் ஸ்தலத்தில் வியாபாரம் அதிகரிக்கும். இப்படி பண வருவதற்கான அனைத்து வழிகளும் பிறக்கும். இந்த அரச இலை பரிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் செய்து பலனை அடையலாம் என்ற தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -