எந்த பூஜை பரிகாரம் செய்தாலும் நம் கஷ்டம் தீரவில்லையே என்று நினைப்பவர்கள் ஒரு முறை இந்த கோவிலுக்கு சென்று இப்படி வழிபாடு செய்து பாருங்கள். உங்கள் வாழ்க்கையே தலைகீழாக மாறி விடும்.

iyyanar-dheepam
- Advertisement -

வாழ்க்கை எல்லோருக்கும் ஒரே மாதிரியாக அமைந்து விடுவதில்லை. ஒரு சிலருக்கு தொட்டதெல்லாம் துலங்கி அடுத்த கட்டத்திற்கு விரைவாக சென்று விடுவார்கள். ஒரு சிலருக்கோ அடுத்து ஒரு அடி எடுத்து வைக்க பல காலம் போராட வேண்டி இருக்கும். இப்படியானவர்கள் வாழ்க்கையே ஏன் வாழ்கிறோம் என்று வெறுத்து ஒதுக்கும் மனநிலைக்கு கூட சென்று விடுவார்கள். இதை தீர்க்க அவர்களும் எத்தனையோ தெய்வங்களை வணங்குவது பூஜை செய்வது பரிகாரங்கள் செய்வது என செய்தாலும் கூட அவர்களுடைய இந்த நிலையில் ஒரு சிறு மாற்றம் கூட இருக்காது.

இப்படி வாழ்க்கையை வெறுத்து விரக்தி நிலைக்கு சென்றவர்களின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றி ஓஹோ வென்று வாழ வைக்கக் கூடிய அற்புதமான ஒரு கோவிலையும் அங்கு செய்யக் கூடிய பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம். உங்கள் வாழ்க்கை வெற்றிகரமானதாக மாற்றிக் கொள்ள இந்த ஒரு கோவில் பரிகாரம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

- Advertisement -

காரிய தடை நீக்கும் அற்புத கோவில்
நம்முடைய செயல்கள் அனைத்தையும் வெற்றி அடைய நாம் செல்ல வேண்டிய கோவில் வேதாரண்யத்தில் இருக்கக் கூடிய அருள்மிகு கலிதீர்த்த அய்யனார் கோவில் தான். இந்த கோவிலில் பலரும் சென்று தங்களுடைய வேண்டுதலை வைத்து பலன் அளித்ததாக சொல்லப்படுகிறது. அதுவும் ஏழே வாரத்தில் அவர்கள் நினைத்த காரியம் நடந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்த ஆலயத்திற்கு புதன்கிழமை அன்று சென்று அந்த கோவிலில் வழிபட வேண்டும். அங்கு சீட்டு எழுதி வைத்து வழிபடும் முறை உள்ளது. அதில் உங்களுடைய ஏதாவது ஒரு காரியத் தடையை மட்டும் முதலில் எழுதி வைத்து விடுங்கள். அது திருமண தடை குழந்தை பேறு வேலை போன்ற எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் எழுதி வைத்து விடுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு அங்கு இருக்கும் குளத்தில் குளித்த பிறகு ஈரத் துணியுடன் அந்த ஆலயத்தை 12 முறை வலம் வர வேண்டும். இது மிகவும் முக்கியம். இங்கு சுற்றப்படும் இந்த சுற்றி ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு பலன் உண்டு. எனவே 12 முறை ஈரத் துணியுடன் இந்த கோவிலை வலம் வருவது முக்கியம். அப்படி வலம் வரும் வேளையில் உங்களுடைய வேண்டுதலை மிகவும் சிரத்தையுடன் வைத்து வணங்கிக் கொள்ளுங்கள்.

இவையெல்லாம் முடித்த பிறகு வேறு உடை மாற்றிக் கொண்டு அங்கு தெய்வத்தின் முன்பு நின்று உங்களுடைய வேண்டுதல் பலிக்க வேண்டி கொண்டு தீபம் ஏற்று வழிபடுங்கள். நிச்சயம் உங்களுடைய வேண்டுதல்கள் பலனளிக்கும் என்று நம்பப்படுகிறது. அது மட்டும் இன்றி பலருக்கு எந்த பூஜை பரிகாரங்கள் செய்தாலும் பலனே இருக்காது. இந்த கோவிலுக்கு சென்று இப்படி வழிபட்டால் அந்த பிரச்சனையும் சரியாகும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்காலமே: வாழ்க்கையில் இப்போது நீங்கள் எவ்வளவு மோசமான சூழ்நிலையில் இருந்தாலும், இனி வரும் காலகட்டத்தில் உங்கள் பண கஷ்டம் தீரும். தினமும் இந்த ஒரு மந்திரத்தை சொன்னால் போதும்.

நம்முடைய வாழ்க்கையில் நாம் படும் பெரும் இன்னல்களை எல்லாம் தீர்த்து நிம்மதியாக வாழ இந்த ஆலயத்திற்கு ஒரு முறையாவது சென்று இப்படி வழிபாடு செய்வது நம்முடைய பிரச்சனையை தீர்த்துக் கொள்ளலாம். இதன் பிறகு உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் உங்களுக்கு வெற்றியாகவே அமையும் என்ற நம்பிக்கையோடு இந்த ஆலயத்திற்கு சென்று வாருங்கள்.

- Advertisement -