நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை பெற பரிகாரம்

mahalashmi2
- Advertisement -

சில பேருக்கு பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். உழைப்பும் இருக்கும். ஆனால் அதற்கு ஏற்ற வாய்ப்புகள் தேடி வராது. சில பேருக்கு வாய்ப்புகள் நிறைய தேடி வரும். ஆனால் நிறைய உழைக்கணும், நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணமே அவர்களுக்கு இருக்காது.

இருப்பதை வைத்து வாழ்ந்து கொள்ளலாம் என்று வாழ்க்கை போன போக்கில் போவார்கள். இப்படிப்பட்ட எண்ணம் உங்களுக்கும் இருக்குதா. உழைக்க வேண்டும் என்ற எண்ணமே வரலையா. எப்போதும் தூங்க வேண்டும் என்று தோன்றுகிறதா. இதற்கெல்லாம் காரணம் உங்கள் உடம்பை பிடித்திருக்கும் தரித்திரம் பீடை எதிர்மறை ஆற்றல்.

- Advertisement -

உங்கள் உடம்பை பிடித்திருக்கும் எதிர்மறை ஆற்றலை விரட்டி அடிக்க சோம்பேறித்தனத்தை விரட்டி அடிக்க சூப்பரான ஐடியா இருக்குது. சுலபமான ஐடியாவும் கூட. ஆன்மீகம் சொல்லும் இந்த முறையை பின்பற்றி குளித்துப் பாருங்கள். சுறுசுறுப்பு ஒட்டுமொத்தமாக உங்களுக்கு சொந்தமாகிவிடும்.

உடம்பை பிடித்த தரித்திரம் விலக குளியல் முறை

இந்த குளியலுக்கு நமக்கு தேவையான பொருள் பசு தயிர். பசு தயிர் கிடைக்காது என்பவர்கள் நீங்கள் சாதாரணமாக பாக்கெட் தயிர் அல்லது நீங்கள் வீட்டில் உறை ஊற்றும் தயிர் எதை வேண்டும் என்றாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். பசு தயிரில் இந்த பரிகாரத்தை செய்வது உடனடியாக சிறப்பான பலனை தரும். வாரத்தில் ஒரு நாள் தலைக்கு குளிக்கும் போது இதை செய்யவும். வெள்ளிக்கிழமை செய்தால் சிறப்பு.

- Advertisement -

ஞாயிற்றுக்கிழமை தான் விடுமுறை. அப்போதுதான் நேரம் கிடைக்கும் என்றால் ஞாயிற்றுக்கிழமை கூட இந்த பரிகாரத்தை செய்யலாம். குளிப்பதற்கு முன்பு கொஞ்சமாக பசு தயிரை கையில் எடுத்து முகம் கை கால்களில் தடவி ஐந்து நிமிடம் கழித்து அதன் பிறகு தலைக்கு குளித்து விட வேண்டும். தலையில் தயிர் வைக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது.

லேசாக 2 ஸ்பூன் தயிரை எடுத்து பரவலாக உடம்பு முழுவதும் பூசி குளித்து கொள்ளுங்கள். தயிர் பூசி விட்டு சோப்பு போட்டு தாராளமாக குடிக்கலாம். எந்த ஒரு தவறும் கிடையாது. இந்த குளியலை முடித்துவிட்டு ஒரு சின்ன கிண்ணத்தில் சுத்தமான குடிக்கின்ற தண்ணீரை எடுத்துக்கோங்க. அதில் கொஞ்சமாக மஞ்சள் பொடியை போட்டு கலந்து உங்கள் தலை மேலே தெளித்துக் கொள்ளுங்கள். பிறகு வீடு முழுவதும் இந்த தண்ணீரை தெளித்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: தரித்திரம் பீடை நீங்க தூபம் போடும் முறை

வாரம் ஒரு முறை இந்த பரிகாரத்தை செய்து வந்தாலே உங்கள் உடம்பில் இருக்கும் சோம்பேறித்தனம் விலகும். வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் விலகும். சுறுசுறுப்பாக வேலை செய்யணும் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்குள் வரும். பிறகு உழைப்பும் சுறுசுறுப்பும் உங்களுக்கு சொந்தமாகிவிடும். சோம்பேறித்தனம் உங்களை விட்டு தூரம் ஓடிவிடும். பிறகு என்ன நிறைய சம்பாதிக்கலாம் சந்தோஷமாக வாழலாம். நம்பிக்கை உள்ளவர்கள் ஆன்மீகம் சார்ந்த இந்த பரிகாரங்களை செய்து பலன் பெறவும்.

- Advertisement -