நிரந்தரமாக நிம்மதியாக ஒரு வருமானத்தை தரும் வேலையை தேடி கண்டுபிடிக்க வேண்டுமா? தினமும் காலையில் இந்த 1 வரி மந்திரத்தை சொல்லி பாருங்கள்.

surya-bhagavan-job
- Advertisement -

எல்லோரும் தான் வேலைக்கு போறாங்க. ஆனால் மன நிம்மதியோடு சந்தோஷத்தோடு திருப்தியோடு அந்த வேலையை செய்கிறார்களா. நிச்சயம் இல்லை. வேலையில் ஏதாவது ஒரு பிரச்சனை. வேலை இன்று போய்விடுமோ, நாளை போய் விடுமோ, என்ற பயத்தோடு நாட்களை நகர்த்திச் செல்வார்கள். இந்த மாதம் வந்த சம்பளம் அடுத்த மாதம் கிடைக்காது. மூன்று மாதம் தொடர்ந்து சம்பளம் வாங்குவார்கள். அடுத்த மாதம் சம்பளம் இல்லாமல் கடன் வாங்குவார்கள். பிறகு அடுத்த மாதம், சம்பளம் வரும்போது கடனை திருப்பிக் கொடுக்க வேண்டும். குடும்பத்தை நடத்திச் செல்ல வேண்டும் இப்படி பற்றாக்குறை பட்ஜெட். வருமானத்தில் பிரச்சனை.

இதையெல்லாம் சரி கட்ட நிரந்தரமான வருமானம் கிடைக்க, நிரந்தரமான வேலை கிடைக்க, நமக்கு பிடித்த வேலை கிடைக்க, நாம் செய்ய வேண்டிய ஒரு வழிபாட்டு முறை உள்ளது. இதை செய்தால் நீங்கள் நினைத்தபடி நல்ல வேலை கிடைக்கும் கை நிறைய சம்பளத்தோடு சந்தோஷமா வாழ்வதற்கு உண்டான வழிகள் கிடைக்கும்.

- Advertisement -

நல்ல வேலை கிடைக்க தினமும் சொல்ல வேண்டிய மந்திரம்:
எத்தனை முறை சொன்னாலும் சரி, உங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்க வேண்டும், நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்றால், நீங்கள் சூரிய உதயத்திற்கு முன்பு கண் விழிக்க வேண்டும். அப்போதுதான் உங்களுக்கு பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் இருக்கும் தடைகள் விலகும். காலை 6:00 மணிக்கு முன்பாகவே எழுந்து குளித்து இருக்க வேண்டும்.

சூரியன் உதிக்கக்கூடிய கிழக்கு திசை பக்கமாக அமர்ந்து காலை 6 மணிக்கு இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும். ஒரு செம்பு சொம்பு எடுத்துக் கொள்ளுங்கள். பூஜை அறையில் இருக்கும் பஞ்ச பாத்திரமாக இருந்தாலும் சரி, இந்த பரிகாரத்திற்கு செம்பு பாத்திரம் தான் முக்கியம். அந்த செம்பு பாத்திரம் நிரம்ப குடிக்கின்ற தண்ணீரை ஊற்றி, அதில் நாட்டு சர்க்கரை அல்லது சிறிது வெல்லம், 2 துளசி இலைகள் போட்டு, வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த தண்ணீருக்கு முன்பாக அமர்ந்து சூரிய பகவானை நினைத்து ‘ஓம் ஹ்ரீம் சூர்யாயை நமஹ’ என்ற மந்திரத்தை 27 முறை சொல்ல வேண்டும். பிறகு செம்பு சொம்பில் இருக்கும் தண்ணீரை கொஞ்சமாக சூரியனுக்கு ஊற்றி சமர்ப்பணம் செய்து விடுங்கள். அந்த தீர்த்தத்தில் இருந்து இறுதியாக கொஞ்சம் எடுத்து நீங்களும் பருகலாம். (நீங்கள் தீர்த்தத்தை பருகி விட்டு, பின்பு அந்த தண்ணீரை சூரியனுக்கு சமர்ப்பணம் செய்யக் கூடாது. அது எச்சில் பட்டதாக மாறிவிடும்.)

விடியல் காலை பொழுதில் சூரியன் உதயமாகும் சமயத்தில் மேல் சொன்ன மந்திரத்தை சொல்லிவிட்டு, நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்ற பிரார்த்தனையை அந்த சூரிய பகவானிடம் தொடர்ந்து வைத்து வந்தால், உங்கள் வேலை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு கிடைக்கும். உயர் பதவி கிடைக்க, உயர் சம்பளம் கிடைக்க நிரந்தர வேலை கிடைக்க இந்த பரிகாரம் கைகொடுக்கும்.

இதையும் படிக்கலாமே: இந்த ஒரு வார்த்தையை உங்கள் வீட்டு நிலை வாசலில் எழுதி வைத்து விட்டால் போதும். இதைத் தாண்டி எந்த ஒரு கெட்ட சக்தியும் உங்களை நெருங்கவே முடியாது.

ஒரு நாள் அல்லது இரண்டு நாள் இந்த பரிகாரத்தை செய்து விட்டு பலனை எதிர்பார்க்கக் கூடாது. தொடர்ந்து உங்கள் வாழ்நாள் முழுவதும் சூரிய நமஸ்காரம் செய்து மேலே சொன்ன வழிபாட்டை மேற்கொண்டு வரும்போது வாழ்நாள் முழுவதும் உங்கள் வேலையில் பிரச்சனை இல்லாமல் வருமானத்தில் பிரச்சனை இல்லாமல் நிம்மதியாக வாழலாம். அதற்குண்டான அனுகிரகத்தை சூரிய பகவான் உங்களுக்கு நிச்சயம் காட்டிக் கொடுப்பார் என்ற நம்பிக்கையுடன் இன்றைய ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -