தாங்க முடியத வலி, வேதனையில் நோய் நொடியில் அவதிப்படுபவர்கள் இந்த ஒரு மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால், வந்த நோய், வந்த வழியே திரும்பிச் செல்லும். தீராத நோய் தீர, மகா பெரியவா தன் பக்தனுக்கு உபதேசம் செய்த மந்திரம்.

periyava
- Advertisement -

காஞ்சி மகா பெரியவா அவர்களை பற்றி நாம் எல்லோருக்கும் நன்றாக தெரியும். உங்களுக்கு இருக்கும் கஷ்டங்களை மகா பெரியவா திருவுருவப்படத்திற்கு முன்பு அமர்ந்து, மனம் உருகி சொன்னால் அந்த மகா பெரியவா, யாராவது ஒரு மனித ரூபத்தில் வந்து உங்களுக்கான தீர்வை நிச்சயம் காட்டிக் கொடுப்பார். உங்களுடைய வீட்டில் மகா பெரியவா அவர்களின் திருவுருவப் படம் இல்லையா, அவரை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். அவரின் திரு உருவத்தை கண் முன்னே கொண்டு வாருங்கள். கண்களின் முன்பு அந்த மகா பெரியவா அவர்களின் திரு உருவம் தெரியும்.

அப்போது, தியான நிலையில் உங்கள் கஷ்டங்களை பெரியவா பாதங்களில் இறக்கி வையுங்கள். உங்கள் பிரச்சனைக்கு உண்டான தீர்வினை அவர் நிச்சயம் சொல்லுவார் என்பது நம்பிக்கை. கலியுகத்தில் வாழ்ந்த கண் கண்ட மகான் இந்த மகா பெரியவா. இந்த மகா பெரியவா தன் பக்தருக்கு உபதேசம் செய்த ஒரு மந்திரத்தை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். தீராத உடல் உபாதையால் அவதிப்பட்டு அறுவை சிகிச்சைக்கே செல்லவிருந்த ஒரு பக்தனை காப்பாற்றிய ஆன்மீகம் மந்திரம் தான் இது.

- Advertisement -

உடல்நிலை சரியில்லாதவர்கள் சொல்ல வேண்டிய மந்திரம்:
ஸ்ரீ துர்கையே நமஹ! ஸ்ரீ துர்கையே நமஹ! ஸ்ரீ துர்கையே நமஹ! இதுதாங்க மந்திரம். இந்த துர்க்கை என்ற வார்த்தைக்குள் எல்லா அம்பாளும் அடக்கம். காமாட்சி அம்மன், மீனாட்சி அம்மன், எல்லா அம்மன் ஸ்வரூபம் சேர்ந்த ஒரு கடவுள் தான் துர்க்கை அம்மன் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

நோய்வாய்ப்பட்டவர்கள், உடல்நிலை சரியில்லாதவர்கள், உடல் சோர்வு கொண்டவர்கள், தீராத வலியால் அவஸ்தைப்படுபவர்கள் எல்லாம் தினமும் காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு, இந்த மந்திரத்தை தொடர்ந்து சொல்லி வர வேண்டும். உங்கள் வீட்டு பக்கத்தில் ஏதாவது ஒரு அம்மன் கோவில் இருந்தால் அந்த கோவிலுக்கு சென்று, இரண்டு மண் அகல்விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வைத்துவிட்டு, அந்த கோவிலில் சிறிது நேரம் அமர்ந்து இதே மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

- Advertisement -

உடல்நிலை சரியாகும் வரை கணக்கு பார்க்காதீங்க. இந்த மந்திரத்தை மனதிற்குள் சொல்லிக் கொண்டே வாருங்கள். அந்த துர்க்கை அம்பால் உங்களுடைய உடல் உபாதைகளை படிப்படியாக சரி செய்து விடுவார்கள். படிக்கையிலே இருக்கிறார்கள் எந்திரிக்க முடியவில்லை என்றால், அவர்களை மனசார இந்த மந்திரத்தை சொல்ல சொல்லுங்கள் போதும்.

பக்தன் ஒருவன் ரொம்பவும் உடல்நிலை சரியில்லாத சூழ்நிலையில் மகா பெரியவாவை சந்தித்தபோது, இந்த மந்திரத்தை அந்த பக்தனுக்காக மஹா பெரியவா உபதேசம் செய்துள்ளார். அந்த பக்தனும் தொடர்ந்து இந்த மந்திரத்தை ஜபம் செய்து வந்திருக்கின்றான். ஒரு சில நாட்களில் அவனுடைய உடல்நிலை மாறி, நல்ல ஆரோக்கியத்தை பெற்றிருக்கின்றான்.

இதையும் படிக்கலாமே: ஆடிப்பெருக்கு அன்று இந்த இரண்டு பொருட்களை மட்டும் மறக்காமல் வாங்கி விடுங்கள். வீட்டில் பொன் பொருள் எல்லாம் வாங்கிக் குவிக்க கூடிய யோகங்கள் தானாக வந்து சேரும்.

அது மட்டும் இல்லாமல் அவனுக்கு அந்த துர்க்கை அம்பாலே ஒருநாள் கனவில் வந்து தரிசனத்தை காட்டி இருக்கின்றாள் என்றால் நீங்கள் நம்புவீர்களா. நம்பிக்கையோடு நாம் செய்யக்கூடிய பரிகாரத்திற்கு, மந்திர ஜபத்திற்கு உண்டான பலனை அந்த தெய்வம் ஏதாவது ஒரு ரூபத்தில் காட்டிக் கொடுக்கும். மகா பெரிய ஆசிரமத்தில் உண்மையாக நடந்த சம்பவம் இது. இதன் அடிப்படையில் உங்களுக்காக இந்த பதிவு கொடுக்கப்பட்டுள்ளது. நம்பிக்கை உள்ளவர்கள் இந்த மந்திரத்தை உச்சரித்து பாருங்கள். உடல் உபாதைகள் நீங்குவதோடு சேர்த்து அந்த அம்பாளின் தரிசனமும் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது.

- Advertisement -