தீராத நோய் தீர முருகர் மந்திரம்

murugan4
- Advertisement -

சுப்ரமணியனின் பாதங்களை பற்றி கொண்டால் நம்முடைய குடும்பம் சுபிட்சம் பெரும். நாளைய தினம் முருகப்பெருமானுக்கு உரிய தைப்பூசத் திருநாள். உங்களுடைய குடும்பத்தில் யாரேனும் உடல் ஆரோக்கியம் இல்லாமல் கஷ்டப்படுகிறார்களா, தொடர்ந்து மருந்து மாத்திரை சாப்பிடக் கூடிய சூழ்நிலையில் இருக்கிறதா. அவர்களுக்கு உண்டான ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபட நாளை நீங்கள் செய்ய வேண்டிய எளிமையான ஒரு ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

இந்த வழிபாட்டோடு சேர்த்து ஒரு சிறப்பு வாய்ந்த மந்திரமும் சொல்லப்பட்டுள்ளது. மன நிறைவோடு இந்த மந்திரத்தை நாளை சொல்லுங்க. உங்களுக்கு நிறைவான ஆரோக்கியத்தை அந்த முருக பெருமான் கொடுப்பார். நாளை 25-01-2024 அதிகாலை வேளையிலேயே எழுந்து சுத்தபத்தமாக குளித்து விடுங்கள். விரதம் இருக்க முடியும் என்பவர்கள் பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்து தைப்பூசம் விரதத்தை தொடங்கலாம். பால் பழம் சாப்பிட்டு விரதம் இருக்கலாம் பலகாரங்கள் சாப்பிட்டும் விரதம் இருக்கலாம். உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை.

- Advertisement -

சாப்பிடாமல் விரதம் இருக்க முடியாது என்பவர்கள் மூன்று வேலை வயிறார உணவு சாப்பிட்டு முருகப்பெருமானை வழிபாடு செய்யலாம். உங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று நாளை முருகப்பெருமானை தரிசனம் செய்யுங்கள். கோவிலிலேயே ஏதாவது ஒரு இடத்தில் அமர்ந்து இந்த மந்திரத்தை சொல்லலாம். முடியாதவர்கள் வீட்டிலிருந்தபடி முருகப்பெருமானின் திருவுருவப்படத்திற்கு முன்பாக அமர்ந்தும் இந்த மந்திரத்தை சொல்லலாம்.

உங்க வீட்டு பூஜை அறையில் ஒரு சின்ன தட்டில் முருகப்பெருமானின் முன்பாக ஒரே ஒரு நெல்லிக்காய் வையுங்கள். காட்டு நெல்லிக்காய் என்று சொல்லுவார்கள். கசப்பாக இருக்கும் பெரிய நெல்லிக்காய். அந்த நெல்லிக்காயை முருகப்பெருமானுக்கு வைத்து நிவேதனம் செய்துவிட்டு பின் சொல்லக்கூடிய இந்த மந்திரத்தை 6 முறை உச்சரிக்கவும். 6 முறைக்கு மேல் எத்தனை முறை சொன்னாலும் தவறு கிடையாது.

- Advertisement -

நோய் தீர்க்கும் முருகன் மந்திரம்:

ஓம் பாலசுப்பிரமணிய
மஹா தேவி புத்ரா
சுவாமி வா வர சுவாஹா!

மூன்று வரி மந்திரம். எல்லோராலும் படிக்க முடியக்கூடிய மந்திரம் தான் இது. ஒரு வேலை உங்களுடைய வீட்டில் யாராவது படுத்த படுக்கையாகவே இருக்கிறார்கள். அவர்களால் மெத்தையை விட்டு எந்திரிக்கவே முடியாது. பல வருடமாக அவர்களது உயிர் பிரியவும் இல்லை. அவர்களால் சாதாரண மனிதர்களைப் போல வாழவும் முடியவில்லை.

- Advertisement -

நரக வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் எனும் பட்சத்தில் அவர்களுடைய வலது கையை நீங்கள் தொட்டு முருகப்பெருமானை நினைத்து இந்த மந்திரத்தை சொல்லுங்கள். நிச்சயம் அவர்களுக்கு உண்டான ஒரு நல்ல வழியை எம்பெருமான் காட்டிக் கொடுப்பான்.

இந்த மந்திரத்தை சொல்லி முடித்துவிட்டு நிவேதனமாக வைத்த அந்த நெல்லிக்காயை வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் பகிர்ந்து உண்ணலாம். ரொம்ப ரொம்ப அற்புதம் வாய்ந்த இந்த வழிபாட்டினை நாளைய தினம் தைப்பூச நாளில் செய்வது ரொம்ப ரொம்ப சிறப்பு. நாளைக்கு காலை நேரம் இருப்பவர்கள் 9:30 முப்பது மணிக்கு மேல் இந்த வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: 25-01-2024 குபேர பௌர்ணமி வழிபாடு

காலை இந்த வழிபாட்டை செய்ய முடியாது என்பவர்கள் மாலை 6:00 மணிக்கு மேல் இரவு 9:00 மணிக்குள் எந்த நேரத்தில் வேண்டும் என்றாலும் வீட்டில் முருகப் பெருமானின் முன்பு விளக்கு ஏற்றி இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். நிச்சயம் உங்களுக்கு ஒரு நல்ல வழி கிடைக்கும் என்ற தகவலோடு முருகப்பெருமானின் பாதங்களை பணிந்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -