தீராத வியாதி நம் உடம்பை விட்டு தொலைதூரம் தொலைந்து போக ஈசனை நினைத்து இந்த ஒரு வார்த்தையை சொன்னாலே போதும். மருந்து மாத்திரை வாசம் உங்கள் வீட்டில் வீசாது.

shivan
- Advertisement -

500 ரூபாய் கொடுத்து நல்ல சாப்பாடு வாங்கி சாப்பிட கொஞ்சம் கஷ்டப்படுவோம். செலவு செய்ய மாட்டோம். அதுவே மருத்துவமனைக்கு சென்று 5000 ரூபாய்க்கு செலவு செய்வோம். இதுதான் மனிதர்களின் மனசு. இருக்கின்ற காசை வைத்து அனுபவித்து வாழ வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். எல்லாவற்றையும் சேர்த்து வைத்துக் கொண்டு போய் மருத்துவமனையில் கொட்டிக் கொடுப்பார்கள், அல்லது வேறு யாரிடமாவது கொடுத்து ஏமாறுவார்கள். இந்த தவறை நீங்க செய்யாதீங்க. வரக்கூடிய வருமானத்தை அளவோடு செலவு செய்து, தேவைக்கு ஏற்ப எதிர்காலத்திற்கு பணத்தை சேமித்து வாழ பழகிக் கொள்ளுங்கள். மூன்று தலைமுறைக்கு சொத்து சேர்க்க வேண்டும் நான்கு தலைமுறைக்கு சொத்து சேர்க்க வேண்டும் என்று பேராசைப்படக் கூடாது. சரி, இப்போது விஷயத்திற்கு வருவோம்.

தீராத நோய் தீர சிவ மந்திரம்
தீராத நோய்நொடி பிரச்சனை. எங்க வீட்ல மருந்து மாத்திரை கச்சேரி தான் தினமும். மூன்று வேளை சாப்பாடு சாப்பிடுகின்றோமோ இல்லையோ, மறக்காமல் இந்த மாத்திரையை சாப்பிட வேண்டும் என்பவர்கள், இந்த மந்திரத்தை சொல்லி வந்தால் கூடிய சீக்கிரத்தில் உங்களை விட்டு அந்த வியாதி ஓடோடி சென்றுவிடும். அதற்காக மருத்துவத்தை கைவிடக்கூடாது. இந்த மந்திரத்தோடு சேர்த்து மாத்திரையும் தொடருங்கள்.

- Advertisement -

கடவுள் உங்களுக்கான நல்லதொரு வழியை நிச்சயம் சீக்கிரம் காட்டிக் கொடுப்பான். தினமும் காலையில் எழுந்தவுடன் நீங்கள் சுத்தபத்தமாக இருக்கும் பட்சத்தில் பல் தேய்த்து முகத்தை மட்டும் கழுவிக்கொண்டு உங்களுடைய வீட்டிலேயே ஒரு இடத்தில் அமர்ந்து குலதெய்வத்தை பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

உடம்பில் இருக்கும் வியாதிகள் நிரந்தரமாக நீங்க வேண்டும். மருந்து மாத்திரை சாப்பிடாத ஆரோக்கியமான வாழ்க்கை வேண்டும் என்று கேளுங்கள். பிறகு எம்பெருமான் ஈசனை நினைத்துக் கொள்ளுங்கள். எல்லோருக்கும் மேன்மையானவன், எல்லோருக்கும் அப்பன் அவன் தானே. அவன் நினைத்தால் நம் தலையெழுத்தை மாற்றி எழுத முடியும். அவன் பாதத்தை பற்றி கொண்டு இந்த மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும்.

- Advertisement -

‘உங்யுநமசிவய’ இந்த ஒரு வார்த்தை தான் மந்திரம். அடி மனதில் இருந்து உண்மையான பக்தியோடு சொல்ல வேண்டும். இந்த மந்திரத்தை சொன்னால் உங்கள் வியாதி சரியாகும். அவ்வளவுதான். நம்பிக்கையுடன் வேறு எதுவும் இந்த உலகத்தில் இல்லை என்று தினம் தினம் இந்த மந்திரத்தை சொல்லுங்கள். ஆண்கள் பெண்கள் இப்படி, குழந்தைகளுக்கு கூட சொல்லிக் கொடுத்து இந்த மந்திரத்தை சொல்ல சொல்லலாம். இந்த காலத்து குழந்தைகள் எல்லாம் பிறந்ததிலிருந்து மருந்து மாத்திரையில் வளர்கிறது. அது வேண்டாம். எதிர்காலத்தில் அவர்களுக்கு பிரச்சனையை தான் கொடுக்கும்‌.

ஆரோக்கியமான உணவோடு சேர்த்து தினமும் இந்த மந்திரத்தை உச்சரித்து வர உங்களுடைய உடம்பில் இருக்கும் வியாதிகள் படிப்படியாக குறைய தொடங்கும். சில பேருக்கு நிரந்தரமான வியாதி இருக்கும். சர்க்கரை நோய், தயிராய்டு இப்படிப்பட்ட பிரச்சனைகளுக்கெல்லாம் மாத்திரையை நிறுத்த முடியாத சூழ்நிலை இருக்கும். ஆனால், அவர்களும் இந்த மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்து வர அந்த தீராத வியாதிக்கு ஏதாவது ஒரு வகையில் விமோசனத்தை அந்த கடவுள் நிச்சயம் காட்டிக் கொடுப்பான்.

இதையும் படிக்கலாமே: நாளை ஆடி மாதம் வெள்ளிக்கிழமை துர்கை அம்மனை இந்த மந்திரத்தை சொல்லி இப்படி வழிபட்டால் நீங்கள் நினைத்த காரியம் யாவும் நினைத்த வண்ணம் நிச்சயம் நிறைவேறும்.

குறிப்பாக இந்த சிறு வயதிலேயே இப்போதெல்லாம் குழந்தைகள் சளி இரும்பல் தொந்தரவால் நிறைய மருந்து மாத்திரை சாப்பிடும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அவர்களுடைய வாயால் கூட இந்த மந்திரத்தை சொல்ல சொல்லலாம். அவர்களுக்கு இருக்கும் அந்த ஆரோக்கிய பிரச்சனை சீக்கிரம் சரியாகிவிடும். உங்களுடைய வீட்டில் மருந்து மாத்திரை வாசம் வீசாது. லட்சக்கணக்கில் ஹாஸ்பிடலுக்கு வீண்விரயம் செய்யக்கூடிய பணமெல்லாம் சேமிப்பில் தங்கும். நம்பிக்கை உள்ளவர்கள் எளிமையான ஆன்மீகம் சொல்லும் இந்த மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்து பலன் பெறலாம் என்ற தகவலோடு இன்றைய ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -