தீராத நோய்களும் தீர இந்த ஒரு பொருளை தொப்புளில் வையுங்கள்! நோய் தீர வணங்க வேண்டிய தெய்வம் என்ன!

dhanvanthiri-vasambu
- Advertisement -

அமிர்த கலசத்தை கையில் ஏந்தி மூவுலகத்தையும் பார்க்கும் இந்த கடவுளுக்கு நோய்களை தீர்க்கக் கூடிய அத்தனை அற்புதமான சக்திகள் உண்டு. இவருக்கு என தனி கோவில்கள் அக்காலங்களில் இல்லை என்றாலும், தற்போது சில இடங்களில் கட்டப்பட்டுள்ளன. அதில் வழிபாடுகளும் நடத்தப்படுகிறது. அப்படியான நோய் தீர வணங்க வேண்டிய தெய்வம் என்ன? சகல நோய்களும் தீர என்ன செய்ய வேண்டும்? என்பதைத் தான் இந்த ஆன்மிகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

எல்லோருக்கும் நோய்களை நீக்கி ஆரோக்கியத்தை வரமாக கொடுக்கக் கூடியவர் தன்வந்திரி பகவான் ஆவார். இவரின் திருமந்திரத்தை உச்சரிப்பவர்களுக்கு சகல நோய்களும் தீர்வதாக நம்பப்படுகிறது. நோயுற்றவர்கள் மட்டுமல்லாமல் நோயுற்றவர்களுக்காக யார் வேண்டுமானாலும் இவரை வழிபட்டு பலன் பெறலாம் என்கிறார் பட்டாச்சாரியார்.

- Advertisement -

தன்வந்திரி பகவான் மந்திரம்:
ஓம் நமோபகவதே வாசுதேவாய
தன்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாய
சர்வாமய விநாசனாய த்ரைலோக்யநாதாய
ஸ்ரீமஹா விஷ்ணவே நம:

இந்த மந்திரத்தை நோயுற்றவர்கள் அல்லது நோயற்றவர்களுக்காக தன்வந்திரி பகவானை வழிபடுபவர்கள் தினமும் 21 முறை அவர்களை நினைத்து உச்சரிக்க வேண்டும். நீண்ட கால நோய்களும் தீர இவரை மனதார வழிபட்டால் அற்புதங்கள் பல நடக்குமாம். தன்வந்திரி பகவானை வழிபட வேண்டிய முக்கிய நாட்கள் தேய்பிறை திரையோதசி, சனிக்கிழமை மற்றும் புதன்கிழமை ஆகும். அது போல பெயர் சொல்லாத மருந்து என்று கூறப்படும் இந்த அற்புதமான மூலிகை மருந்தை நாட்டு மருந்து கடைகளில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இதை குழந்தைகளுக்கு வயிற்று நோய் தீர, அழாமல் இருக்க பயன்படுத்துவார்கள். இதற்கு வசம்பு என்ற பெயர்! வசம்பு மூலிகை பொருள் மட்டும் அல்ல நோய்களை தீர்க்கக் கூடிய அற்புதமான குணம் கொண்டுள்ள ஒரு பொருளும் ஆகும்.

- Advertisement -

வசம்பை விளக்கில் எரியக்விட்டு ஜோதியிலிருந்து உண்டாகக்கூடிய கரியை எடுத்து தினமும் நெற்றியில் தடவிக் கொண்டு வருபவர்களுக்கு நோய்கள் அண்டாது என்று கூறப்படுகிறது. அது மட்டும் அல்லாமல் வசம்பை கல்லில் இழைத்து அதை தொப்புளில் தினமும் போட்டுக் கொண்டு வருபவர்களுக்கு தீராத நோய்கள் தீருவதாகவும் நம்பிக்கை உண்டு. வசம்பை எப்பொழுதும் கவசம் போல நூலில் தட்டி கையில் கட்டி கொண்டால் நம்மை நெருங்கும் துஷ்ட சக்திகள் விலகி ஓடும். தோஷங்களால் உண்டாகக் கூடிய நோய்களும், விழிகளும் நம்மை நெருங்காமல் பாதுகாக்க கூடிய ஒரு கவசமாக இந்த வசம்பு செயல்படுகிறது.

இதையும் படிக்கலாமே:
எதிர்பாராத தீடீர் அதிர்ஷ்டங்கள் வந்து எட்டு திக்கிலும் இருந்து வற்றாத பண வரவு வர தினமும் இந்த இரண்டு மந்திரத்தை மட்டும் ஜெபித்து வாருங்கள்.

திருஷ்டிகள் கழியவும், யாருடைய கண்களும் குழந்தை மேல் படாமல் இருக்கவும் குழந்தை பிறந்தவுடன் வசம்பை இது போல கையில் கட்டுவதை பார்த்திருப்போம். மேலும் வசம்பு எப்பொழுதும் வீட்டின் பூஜை அறையில் வைத்துக் கொள்ள வேண்டும். வசம்பு இருக்கும் இல்லங்களில் துர் தேவதைகள் நுழையாது, தீய சக்திகள் அண்டாது, திருஷ்டிகள் ஒழியும், காத்து கருப்பு போன்ற தொந்தரவுகளும் நெருங்காது. குலதெய்வ வாசம் எப்பொழுதும் நிறைந்து இருக்கும். மேலும் குபேர சம்பத்து உண்டாகவும் வசம்பை பூஜை அறையில் வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் இதை விளக்கில் சுட்டு நெற்றியில் வைத்துக் கொண்டே வாருங்கள் சகல சௌபாக்கியங்களும் உங்களுக்கு வந்து சேரும்.

- Advertisement -