- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்ரமலான் நோன்பு கஞ்சி செய்முறை

ரமலான் நோன்பு கஞ்சி செய்முறை

- Advertisement -

ரமலான் மாதம் ஆரம்பித்து விட்டது. இஸ்லாமிய நண்பர்கள் அனைவரும் நோன்பு இருப்பார்கள். காலையிலிருந்து மாலை வரை எச்சில் கூட விழுங்காமல் மிகவும் கட்டுப்பாடாக இருக்கக்கூடிய நோன்பு ஆக இது திகழ்கிறது. இப்படி நோன்பு இருப்பவர்கள் மாலையில் தொழுகையை நிறைவு செய்த பிறகு நோன்பை நிறைவு செய்யும் வகையில் நோன்பு கஞ்சி அருந்தி நிறைவு செய்வார்கள். இந்த நோன்பு கஞ்சி என்பது அனைத்து பள்ளிவாசல்களிலும் கிடைக்கும்.

அதே சமயம் பலரும் தங்கள் இல்லங்களிலும் செய்வார்கள். இந்த நோன்பு கஞ்சியை மத சார்பற்ற நிலையில் பல இந்துக்களும் சென்று வாங்கி அருந்தும் பழக்கம் இருந்து வருகிறது. இந்த நோன்பு கஞ்சி சைவமாகவும் செய்ய முடியும். அதே சமயம் அசைவமாகவும் செய்ய முடியும். இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் சைவ நோன்பு கஞ்சி எப்படி செய்வது என்று தான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்:

  • எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
  • நெய் – 1 டேபிள் ஸ்பூன்
  • பட்டை – 2
  • ஏலக்காய் – 4
  • கிராம்பு – 4
  • பிரியாணி இலை – 1
  • வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
  • பூண்டு – 5 பல்
  • சின்ன வெங்காயம் – 5
  • பெரிய வெங்காயம் – 1
  • தக்காளி – 1
  • பச்சை மிளகாய் – 3
  • கேரட் – 100 கிராம்
  • கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு
  • புதினா – ஒரு கைப்பிடி அளவு
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • பச்சரிசி – 1 கப்
  • பாசிப்பருப்பு – ஒரு கைப்பிடி அளவு
  • தண்ணீர் – 5 கப்
  • தேங்காய் விழுது – 3 டீஸ்பூன்

செய்முறை

முதலில் பச்சரிசியையும் பாசிப்பருப்பையும் தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவி ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு குக்கரை அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். குக்கர் நன்றாக சூடானதும் அதில் எண்ணெய் நெய் இரண்டையும் ஊற்ற வேண்டும். இவை இரண்டும் நன்றாக சூடான பிறகு பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை இவற்றை சேர்க்க வேண்டும். பிறகு வெந்தயத்தை சேர்க்க வேண்டும்.

வெந்தயம் சிவந்த பிறகு பூண்டு, சின்ன வெங்காயம் இவை இரண்டையும் ஒன்று இரண்டாக இடித்து அதனுடன் சேர்க்க வேண்டும். பிறகு பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி அதையும் சேர்க்க வேண்டும். தக்காளியை பொடியாக நறுக்கி அதையும் சேர்த்து, மூன்று பச்சை மிளகாயையும் நீளவாக்கில் நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு கொத்தமல்லி, புதினா, இஞ்சி பூண்டு பேஸ்ட், பொடியாக நறுக்கிய கேரட்டையும், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

- Advertisement -

அசைவம் சாப்பிடுபவர்களாக இருந்தால் கேரட்டிற்கு பதிலாக கொத்துக்கறி வாங்கி இதில் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். இவை அனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு ஊற வைத்திருக்கும் பச்சரிசி, பாசிப்பருப்பை இதனுடன் தண்ணீர் இல்லாமல் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். ஒரு நிமிடம் அப்படியே வைத்து விட்டு பிறகு இதில் 5 கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி விசில் போட்டு விட வேண்டும்.

ஐந்து விசில் வரும் வரை அப்படியே விட்டு விடுங்கள். ஐந்து விசில் வந்த பிறகு அதை அணைத்து விடலாம். விசில் முழுவதும் போன பிறகு குக்கரை திறந்து தண்ணீர் தேவைப்பட்டால் தேவையான அளவு தண்ணீரை கொதிக்க வைத்து அதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு தேங்காய் விழுதையும் சேர்த்து ஒருமுறை நன்றாக கொதிக்கவிட்டு சிறிது பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தளையையும் தூவி இறக்கி விட வேண்டும்.

- Advertisement -

அவ்வளவுதான் மிகவும் சுவையான நோம்பு கஞ்சி தயாராகிவிட்டது. சைவம் அசைவம் இரண்டிற்கும் ஒரே வித்தியாசம் தான் சைவமாக இருந்தால் கேரட்டை சேர்த்துக் கொள்ளுங்கள் அசைவமாக இருந்தால் மட்டனை சேர்த்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: பிரண்டை சாதப்பொடி செய்முறை

நாமும் நம் வீட்டில் இது போல் மதசார்பற்ற நிலையை நம்முடைய குழந்தைகளுக்கு சொல்லித் தரும் வகையில் இஸ்லாமியர்களின் பாரம்பரிய உணவான நோன்பு கஞ்சியை செய்து தருவோம்.

சற்று முன்