நீங்க மாறினாலும் உங்களை எதிரியா நினைக்கிறாங்களா? எப்பேர்ப்பட்ட பகையும் மறைய செய்ய வேண்டிய எளிய பரிகாரம் என்ன?

enemy-kirambu
- Advertisement -

நாம் என்னதான் பகை மறந்து விட்டுக் கொடுத்து சென்றாலும் சிலர் அந்த பாகையை வளர்த்துக் கொண்டே செல்வார்கள். அவர்கள் எப்படியாவது மனம் திருந்தி எல்லாவற்றையும் மறந்து பழையபடி நல்ல உறவாட மாட்டார்களா? என்று ஏங்குபவர்களும் உண்டு. இந்த வகையில் பகை மறைய ரொம்ப எளிதாக நாம் செய்யும் இந்த பரிகாரம் நல்ல ஒரு பலனை தரும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. அப்படியான ஒரு எளிய பரிகாரத்தை தான் இந்த ஆன்மிகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

வாழும் ஒரு காலத்தில் எல்லோருடனும் அன்புடனும், நட்புறவுடனும் பழகி நிறைய உறவுகளை சம்பாதிக்க வேண்டும் என்று தான் நம் முன்னோர்கள் நமக்கு கூறி சென்றுள்ளனர். உறவுகளை வீட்டு திண்ணைக்கே அழைத்து வந்தது அந்த காலம். யார் என்றே தெரியாத முகமறியா வழிப்போக்கர்களுக்கும் இளைப்பாற இடம் கொடுத்தது அந்த திண்ணை! இதன் மூலமும் நிறைய உறவுகளை சம்பாதித்து உள்ளனர்.

- Advertisement -

இன்று இருக்கும் நவீன குடும்பங்கள் பலரும் தங்களுடைய வீட்டில் திண்ணை வைத்து கட்டாவிட்டாலும் பரவாயில்லை, இருக்கின்ற சாலைகளை கூட ஆக்கிரமிப்பு செய்து வாசற்படியை கூட அவர்களுடைய இடத்திற்கு உட்பட்டு கட்டுவதில்லை. சுயநலமும், பகையும் வளர்ந்து விட்ட இந்த காலகட்டத்தில் ஒரு சிலர் பகையை மறந்து நல்ல உறவை மேம்படுத்த நினைத்தாலும் பலருடைய மனம் அதற்கு ஒப்புக் கொள்வது இல்லை.

இப்படி பகையை வளர்த்துக் கொண்டே செல்லும் சில குறுகிய மனம் படைத்தவர்களுக்கு நல்ல சிந்தனையையும், தெளிவையும் கொடுக்க இறைவனிடம் எப்படி நாம் பரிகாரம் செய்து பிரார்த்திக்க வேண்டும்? இதற்கு முதலில் ஒரு சாம்பிராணி தூபக்கால் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். தூப காலில் கொட்டாங்குச்சியை எரித்து தனல் செய்து கொள்ளுங்கள். இந்த தனலில் நீங்கள் எப்பொழுதும் போல சாம்பிராணியை போட்டு வீடு முழுவதும் காண்பிப்பீர்கள் அல்லவா? அதே போல செய்யுங்கள்.

- Advertisement -

சாம்பிராணி புகை வரும் பொழுது அந்த புகையில் ஒரே ஒரு கிராம்பை வலது கையில் வைத்து நீங்கள் யார் மாற வேண்டும்? என்று நினைக்கிறீர்களோ, அவருடைய பெயரை மூன்று முறை உச்சரித்து மனதார அவர்கள் மனம் திருந்தி விட, பகை மாற இஷ்ட தெய்வத்திடம், குலதெய்வத்திடம் வேண்டிக் கொள்ளுங்கள். அதன் பிறகு கையில் இருக்கும் இந்த கிராம்பை சாம்பிராணியில் போட்டு எரித்து விடுங்கள். சாம்பிராணியில் போடப்பட்ட கிராம்பு முழுவதும் எரிந்து சாம்பல் ஆகி விட வேண்டும். இப்படி செய்யும் பொழுது அவர்கள் மனதில் இருக்கக்கூடிய கெட்ட எண்ணங்கள், வகுர புத்திகள், பகைமை அழிய நீங்கள் வேண்டிய தெய்வங்கள் உங்களுக்கு துணை நிற்கும் என்பது நம்பிக்கை.

இதையும் படிக்கலாமே:
கர்மாவை கட்டி போடும் கரு மிளகு! இந்த நாளில் கரு மிளகை தலையை சுற்றி போட்டால் கர்ம வினைகள் கரைந்து ஓடிவிடும்.

இந்த பரிகாரத்தை ரொம்ப எளிதாக செய்துவிடலாம். பரிகாரம் செய்யும் பொழுது சூரியன் மறைவதற்கு முன்பு செய்து விடுங்கள். காலையில் சூரியன் உதித்தது முதல் மறையும் வரை நீங்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்த பரிகாரத்தை பூஜை அறையில் வைத்து செய்யலாம். கிராம்பு போடும் பொழுது பூஜை அறைக்கு வெளியில் வந்து போடுங்கள். கிராம்பு எரிந்து முடிந்ததும் தூபக்காலை கொண்டு போய் வெளியில் வைத்து விடுங்கள். ஆறியதும் அதை பயப்படாத இடத்தில் அப்புறப்படுத்தி விடுங்கள். அவ்வளவுதான், இதுபோல ஒரு முறை செய்தாலே உங்கள் பகை மாறும் என்பது நியதி!

- Advertisement -