வியாழக்கிழமை அஷ்டமி திதியன்று இந்த மாலையை மட்டும் பைரவருக்கு அணிவித்து பூஜை செய்திடுங்கள். உங்கள் கடன் தொல்லைகள் தீர்ந்து பண வரவு உண்டாகும்

bairavar
- Advertisement -

வியாழக்கிழமை என்பது எப்போதும் பைரவருக்கு உகந்த நாளாகும். இந்த நாளில் விரதமிருந்து பைரவரை வழிபட பலருக்கும் நல்ல பலன்கள் கிடைக்கிறது. அவ்வாறு வியாழக்கிழமையோடு சேர்ந்து வருகின்ற இந்த அஷ்டமி தினத்தில் பைரவருக்கு விசேஷ பூஜை செய்வதன் மூலம் நமது கடன் தொல்லையிலிருந்து விடுபட முடியும். ஒருவரின் வாழ்க்கையில் கடன் பிரச்சனை மட்டும் இல்லாமல் இருந்தால் அவர்கள் தங்களின் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ முடியும். கடன் தொல்லையிலிருந்து மீள முடியாதவர்கள் இந்த பூஜையை மட்டும் அஷ்டமியன்று தவறாமல் செய்திடுங்கள். வாருங்கள் இந்த பூஜையை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

thursday

எப்பொழுதும் போலல்லாமல் இந்த அஷ்டமி இரண்டு நாட்கள் சேர்ந்து வருகிறது. வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டு நாட்களும் அஷ்டமி திதி இருக்கிறது. அவ்வாறு வியாழக்கிழமை மதியம் 12 : 44 மணிக்கு தொடங்குகின்ற அஷ்டமி திதி வெள்ளிக்கிழமை மதியம் 11 : 22 மணி வரை நீடிக்கிறது. இந்த நேரத்தில் தான் பைரவருக்கான சிறப்பு வழிபாட்டை செய்ய வேண்டும்.

- Advertisement -

பைரவரை வணங்குவதற்கு வியாழக்கிழமை மிகவும் சிறந்த நாளாகும். ஆனால் ஸ்வர்ண ஆகர்ஷன பைரவரை வணங்குவதற்கு வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டு தினங்களுமே சிறந்த தினங்கள் தான். எனவே வியாழக்கிழமை இரவு பூஜை செய்ய முடியும் என்பவர்கள் அன்றைய தினமும் செய்யலாம். அல்லது வெள்ளிக்கிழமை காலையிலும் பைரவருக்கான பூஜையை செய்திடலாம்.

swarna-bairavar2

ஒரு சிலருக்கு சொத்து பிரச்சனை மூலமாக இருக்கும் வழக்குகள் நிலுவையில் இருந்து கொண்டிருக்கும். பல காலங்களாக ஒரு முடிவுக்கு வராமல் பிரச்சனை கொடுத்துக் கொண்டிருக்கும். இந்த வழக்கு சீக்கிரத்தில் முடிவடைய வேண்டும் என்று நினைப்பவர்கள் அருகிலுள்ள வைரவர் கோவிலுக்கு சென்று, எட்டு மிளகுகளை ஒரு சிறிய சிகப்பு துணியில் மூட்டையாக கட்டி, அதனை அகல் விளக்கில் வைத்து, வேப்ப எண்ணெய் ஊற்றி பைரவருக்கு தீபம் ஏற்ற வேண்டும். இதனை அஷ்டமி திதியன்று துவங்கி நாற்பத்தி எட்டு நாட்கள் செய்து வர வேண்டும். இதனை செய்வதால் உங்களுக்கு சீக்கிரத்தில் நல்ல பலன் உண்டாகும்.

- Advertisement -

ஒரு சிலருக்கு பைரவரின் படத்தை வீட்டில் வைக்கலாமா? என்ற சந்தேகம் இருக்கிறது. சுவர்ண ஆகர்ஷண பைரவர் படத்தை மட்டும் வீட்டில் வைத்துக்கொள்ளலாம். வேறு பைரவர் படத்தை கண்டிப்பாக வீட்டில் வைத்துக் கொள்ளக்கூடாது. அவ்வாறு பைரவர் படமும் இல்லாமல், பைரவர் கோயிலும் அருகில் இல்லாமல் இருந்தால் வீட்டிற்கு அருகே இருக்கும் நாய்களுக்கு பிஸ்கட், உளுந்த வடை மற்றும் ஏதேனும் உணவுகளை அளிப்பது நமது கடன் பிரச்சினைகள் தீர்வதற்கு சிறந்த வழயாகிறது.

jwe

முக்கியமாக அடகில் இருக்கும் நகைகளை மீட்கவும், நம்மிடம் நகைகள் அதிகமாக சேரவும் சுவர்ண ஆகர்ஷண பைரவருக்கு இந்த சிறப்பு மாலையை அணிவித்து, அஷ்டமி திதியன்று பூஜை செய்திட வேண்டும். அவ்வாறு சுவர்ண ஆகர்ஷண பைரவர் படத்திற்கு மஞ்சள் குங்கும பொட்டு வைத்து, மஞ்சள் நிற நூலில் முந்திரிகளை மாலையாக கட்டி அணிவிக்க வேண்டும். அல்லது ஜாதிபத்திரியை மாலையாக கட்டியும் அணிவிக்கலாம்.

mundhiri

இவ்வாறு மாலை அணிவித்து நம் விருப்பத்திற்கு ஏற்றவாறு நகை சேர வேண்டுமென்று சுவர்ண ஆகர்ஷண பைரவரை மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். இந்த பூஜையை ஒவ்வொரு அஷ்டமி தினத்தன்றும் தவறாமல் செய்து வந்தால் நமது வீட்டில் பணமும், நகையும் அள்ள அள்ள குறையாத அளவிற்கு சேர்ந்து கொண்டிருக்கும்.

- Advertisement -