பண கஷ்டத்தை நீக்கும் தீபம்

vishnu deepam
- Advertisement -

அனைத்து விதமான செயல்களுக்கும் பிரதானமாக விளங்கக்கூடியது பணம்தான். ஒருவரிடம் பணம் இருந்தால் அவரால் சாதிக்க முடியாத விஷயங்களே இருக்காது என்பதால்தான் பணத்தை கஷ்டப்பட்டு சம்பாதிக்க வேண்டும் என்று பலரும் உழைக்கிறார்கள். இன்னும் சிலரோ தாங்கள் எந்தவித கஷ்டமும் படாமல் பணத்தை சம்பாதிக்க என்னவெல்லாம் செய்யலாம் என்று யோசிக்கிறார்கள். ஆக மொத்தம் பணம் என்பது அனைவருக்கும் தேவைப்படும் ஒரு அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது. அப்படிப்பட்ட பணத்தைப் பெற வேண்டும் என்றால் நமக்கு மகாவிஷ்ணுவின் அருள் பரிபூரணமாக வேண்டும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் மகாவிஷ்ணுவின் அருளை பரிபூரணமாக பெறுவதற்கு ஏற்ற வேண்டிய தீபத்தை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

இந்த உலகத்தை காத்து ரசிக்கக்கூடிய தெய்வமாக திகழக்கூடியவர்கள் மும்மூர்த்திகள். பிரம்மா படைத்தலையும், விஷ்ணு காத்தலையும், சிவன் அழித்தல் தொழிலையும் செய்து வருகிறார்கள் என்பது புராணங்களில் கூறப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இவர்கள் மூவரில் பண தேவைகளை பூர்த்தி செய்யக் கூடியவராக விளங்க கூடியவர் விஷ்ணு பகவான். விஷ்ணு பகவானை திதி காரகன் என்றும் கூறுவது உண்டு.

- Advertisement -

விஷ்ணு பகவானின் அருளை பரிபூரணமாக பெற்றவர்கள் வாழ்க்கையில் பணம் ரீதியான பிரச்சினைகள் எதுவுமே வராது என்று தான் கூற வேண்டும். இதற்கு முழுக்க முழுக்க காரணம் மகாவிஷ்ணுவின் இதயத்தில் குடியிருக்கும் மகாலட்சுமியே. மகாவிஷ்ணுவை வழிபடுபவர்களுக்கு மகாலட்சுமியின் அருள் கடாட்சம் பரிபூரணமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

மகாவிஷ்ணுவின் கரங்களில் இருக்கக்கூடிய சங்கு சக்கரம் இவை இரண்டிற்கும் மிகப்பெரிய மகத்துவம் இருக்கிறது. இவை இரண்டையும் பூஜை அறையில் கோலம் போல வரைந்து கொள்ள வேண்டும். பிறகு இதற்கு மேல் மகாவிஷ்ணுவிற்கு மிகவும் பிடித்தமான பொருளான துளசி இலை சிலவற்றை வைக்க வேண்டும். அந்த துளசி இலைக்கும் மேல் அகல் விளக்கில் நெய் ஊற்றி தாமரைத் தண்டு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

இப்படி அனுதினமும் மகாவிஷ்ணுவை நினைத்து தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் அவர்கள் வாழ்வில் பணப் பிரச்சனை என்பதே ஏற்படாது. இந்த வழிபாட்டை மகாவிஷ்ணுவிற்கு விருப்பமான நாட்களில் ஆரம்பிப்பது மிகவும் சிறப்புக்குரியதாக இருக்கும். அதாவது ஏகாதேசி, புதன்கிழமை, சனிக்கிழமை போன்ற நாட்களில் ஆரம்பிக்கலாம். சங்கு சக்கரம் வரைய தெரியாதவர்கள், சங்கு சக்கர ஸ்டிக்கரை வாங்கி ஒட்டி ஏற்றலாம்

ஆனால் அதற்கு முழு பலன் கிடைக்காது என்று தான் கூற வேண்டும். அது மட்டுமல்லாமல் சங்கு சக்கரம் வரையும் பொழுது பச்சரிசி மாவால் வரைவது மிகவும் சிறப்புக்குரியதாக இருக்கும். இந்த தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு “ஓம் நமோ நாராயணா” என்னும் மந்திரத்தை மனதார தங்களால் இயன்ற அளவு 27, 54, 108 போன்ற எண்ணிக்கையில் உச்சரிக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்பட பரிகாரம்

மகாவிஷ்ணுவை நினைத்து இந்த தீபத்தை நாம் நம்முடைய இல்லங்களில் ஏற்றி வருவதன் மூலம் பணம் தொடர்பான அனைத்து விதமான பிரச்சனைகளும் நீங்கி செல்வ செழிப்புடன் நலமுடன் வாழலாம்.

- Advertisement -