பணப்பிரச்சனையை விரட்டி அடிக்க தீப வழிபாடு

vialkku
- Advertisement -

நன்றாக உழைத்து நன்றாக சம்பாத்தியம் செய்கின்றோம். ஆனால் அந்த பணத்தை வீட்டிற்குள் கொண்டு வருவதில் தான் பிரச்சனையே இருக்கிறது. இந்த மாதம் சம்பளம் 50 ஆயிரம் ரூபாய் வாங்கியாச்சு. ஆனால், வருமானமாக வந்த 50,000 ரூபாயில் ஒரு 2000 ரூபாயாவது வீட்டில் கொண்டுவந்து பீரோவில் வைத்து சேமித்தோமா என்பதில் தான் கேள்வியே.

வங்கி கணக்கிற்கு வந்த சம்பள பணத்திலிருந்து பத்து ரூபாயை கூட வீட்டிற்கு கொண்டு வர முடியாத சூழ்நிலைதான் இன்று நிலவி வருகிறது. பணத்தை வீட்டிற்குள் வரவிடாமல் தடுக்கக்கூடிய அந்த கெட்ட சக்தியை தகர்த்தெறிய கூடிய சுலபமான ஒரு தீப வழிபாட்டை பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

- Advertisement -

பணத்தடையை விளக்கும் தீப வழிபாடு

ஒரு சின்னதா தட்டு எடுத்துக்கோங்க. அந்த தட்டில் ஜாதிக்காய் 3, விரலி மஞ்சள் 2, வச்சிருங்க. அதன் பிறகு அந்த தட்டில் ஒரு விளக்கு வைத்து தீபம் ஏற்றி வீட்டில் இருக்கும் பெண்கள் மகாலட்சுமியை வீட்டிற்குள் வரவழைக்க வேண்டும். பொதுவாகவே காமாட்சி அம்மன் விளக்கை ஒரு தட்டுக்கு மேலே வைத்து ஏற்றக்கூடிய பழக்கம் நம் வீடுகளில் இருக்கும்.

அப்படி இருந்தால் அந்த காமாட்சி அம்மன் விளக்கு வைத்திருக்கக்கூடிய தட்டில் எப்போதும் மூன்று ஜாதிக்காயையும், இரண்டு விரலி மஞ்சளையும் வைத்து விடுங்கள். அந்த பொருட்களை அடிக்கடி மாற்ற வேண்டும் என்ற அவசியம் எல்லாம் கிடையாது. ஆறு மாதத்திற்கு ஒரு முறை பழைய பொருட்களை எடுத்து கால் படாத இடத்தில் போட்டுவிட்டு, மீண்டும் புது பொருளை வாங்கி வையுங்க.

- Advertisement -

இந்த பரிகாரத்தை வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று தொடங்கினால், ரொம்ப ரொம்ப சிறப்பு. தினமும் வீட்டிற்குள் பெண்கள் விளக்கு ஏற்றும் போது இந்த தீப ஒளியின் பிரகாசம், வீட்டில் செல்வ வளத்தை கொடுக்க வேண்டும், வீட்டில் இருக்கும் பணத்தடையை விளக்க வேண்டும் என்று வேண்டுதல் வைத்துக் கொண்டே வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

ஜாதிக்காய்க்கு பணத்தை ஈர்க்கக்கூடிய வசிய தன்மை உண்டு. விளக்கு சூட்டில் அந்த ஜாதிக்காய் லேசாக சூடாகும். அந்த சூடு உங்கள் வீடு முழுவதும் பரவும். இந்த வாசமே உங்கள் வீட்டில் இருக்கும் தரித்திரத்தை விரட்டி அடித்து விடும். பண வசியத்தை ஏற்படுத்தித் தரும். விரலி மஞ்சள் சொல்லவே தேவை கிடையாது. சுப காரியத்த தடையை விளக்குவதற்கு இந்த பொருள் ரொம்ப ரொம்ப முக்கியம்.

- Advertisement -

ஒவ்வொரு வீட்டு பூஜை அறையிலும் வைக்க வேண்டிய பொருட்களின் பட்டியலில் இந்த விரலை மஞ்சளுக்குத்தான் முதலிடம். உங்க வீட்டில் பயன்பாட்டில் விரலி மஞ்சள் இருக்குதோ இல்லையோ, பூஜை அறையில் கட்டாயம் இரண்டு மஞ்சள் எப்போதும் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். இது குரு பகவானின் அனுகிரகத்தையும் கொடுக்கும். அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே: நேர்மறை ஆற்றல்களை அதிகரிக்க நிலை வாசலில் இருக்க வேண்டிய பொருள்

மேலே சொன்ன இந்த ஆன்மீகம் தீப வழிபாட்டு முறை ஒருவர் வீட்டில் இருக்கும் பணக்கஷ்டத்தை உடனடியாக துரத்தி அடிக்க கூடிய வல்லமை கொண்டது. உங்களுக்கும் நம்பிக்கை இருந்தால் இதை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -