நேர்மறை ஆற்றல்களை அதிகரிக்க நிலை வாசலில் இருக்க வேண்டிய பொருள்

panjalogam
- Advertisement -

ஒருவருடைய மனது எந்த அளவுக்கு நேர்மறை ஆற்றலோடு இருக்க வேண்டுமோ அதே போல் அவர் இருக்கும் வீடும் நேர்மறை ஆற்றல்கள் நிறைந்ததாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்களுடைய வாழ்க்கையில் நன்மைகள் நடைபெறும். அப்படி நேர்மறை ஆற்றல்கள் அதிகரிப்பதற்கு முன்பாக வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் நீங்க வேண்டும். ஒருவருடைய மனதில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் நீங்க வேண்டும் என்றால் அவர் தெய்வீக வழிபாட்டிலும் தியானத்திலும் ஈடுபட வேண்டும். இதே வீட்டிற்கும் எதிர்மறை ஆற்றல்கள் விலக வேண்டும் என்றால் என்ன செய்வது என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

ஒவ்வொரு கோவிலிலும் கருவறைக்குள் இருக்கும் தெய்வத்தை விட உற்சவமூர்த்தியாக இருக்கக்கூடிய தெய்வத்திற்கு அதிக பலன் இருக்கும் என்று கூறுவார்கள். அந்த தெய்வ சிலைக்கு அபிஷேகம் செய்யக்கூடிய அந்த தீர்த்தத்தை மருந்தாக நினைத்து அருந்துபவர்கள் பலர் இருக்கிறார்கள். மேலும் இந்த உற்சவ சிலை தான் ஆலயத்தை சுற்றி வலம் வந்து தன் பக்தர்களை தேடி அவர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கக்கூடிய தெய்வமாக திகழ்கிறது. இவ்வளவு ஆற்றல்கள் இந்த தெய்வ சிலைக்கு எப்படி வந்தது என்றால் அதில் ஒரு முக்கியமான சூட்சுமம் இருக்கிறது. அதுதான் அந்த சிலை செய்யப்பட்ட உலோகம்.

- Advertisement -

பஞ்சலோகம் என்பது ஐந்து வகையான உலோகங்கள் சேர்ந்து செய்யக்கூடிய ஒன்றாகும். இது மிகவும் தெய்வீக சக்தி மிகுந்தது என்பதால் தான் கோவில் சம்பந்தப்பட்ட அனைத்து விதமான பொருட்களையும் பஞ்சலோகத்தில் வாங்க வேண்டும் என்று கூறுவார்கள். அதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு வீட்டிலும் வீடு கட்டும்பொழுது நிலை வாசலை வைக்கும் பூஜை நடைபெறும் பொழுது நிலை வாசலுக்கு அடியில் பஞ்சலோகத்தை வைக்கும் பழக்கம் பழங்காலத்தில் இருந்து தொன்று தொட்டு வருகிறது.

இவ்வளவு ஆற்றல் மிகுந்த இந்த பஞ்சலோகத்தை நாம் முறையாக அணிந்து கொள்வதன் மூலம் நம் உடலில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தையும் நீக்கும் வல்லமை கொண்டதாக திகழ்கிறது. அதனால் தான் நம்முடைய முன்னோர்கள் பஞ்சலோகத்தில் மோதிரம், காப்பு என்று அணிந்திருந்தார்கள். சாதாரணமாக நம் வீட்டில் இருக்கக் கூடிய தெய்வ சிலைகளை பஞ்சலோகத்தில் வாங்கி வைத்த அபிஷேகம் செய்தால் அந்த சிலைகளுக்கு பல தெய்வீக ஆற்றல் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இந்த பஞ்சலோகத்தை மிகவும் எளிமையான முறையில் நம் வீட்டில் எப்படி உபயோகப்படுத்தினால் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான எதிர்மறை ஆற்றல்களும் நீங்கும் என்று பார்ப்போம்.

- Advertisement -

சுத்தமான பஞ்சலோகமாக பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள். நாட்டு மருந்து கடைகளில் மூலிகை மருந்து என்று கிடைக்கும். இந்த மருந்தை பயன்படுத்தி தான் கோவிலில் விக்ரகங்களை வைப்பார்கள். அந்த மருந்தை வாங்கி வந்து நம்முடைய வீட்டு நிலை வாசலில் மேலே தடவி அதற்கு மேல் இந்த பஞ்சலோகத்தை வைத்து ஒட்டி விட வேண்டும். இப்படி வைப்பதன் மூலம் நம்மிடமும் நம் வீட்டிலும் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் நீங்கும். நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும்.

இதோடு மட்டுமல்லாமல் நாம் எந்த காரியத்தை நினைக்கிறோமோ அந்த காரியம் நடைபெறும். வாஸ்து ரீதியாக வீட்டில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்து அதனால் தடைகள் ஏற்பட்டு இருந்தால் அந்த தடைகள் அனைத்தும் நீங்கும். வாடகை வீட்டில் இருப்பவர்கள் இந்த முறையில் பஞ்சலோகத்தை வைத்து தினமும் பூஜை செய்துவர விரைவிலேயே சொந்த வீடு வாங்கக்கூடிய யோகமும் அவர்களுக்கு கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: கோடீஸ்வர யோகம் தரும் வழிபாடு

மிகவும் அற்புதமான ஆற்றல் கொண்ட இந்த பஞ்சலோகத்தை நாமும் நம் வீட்டில் நம்பிக்கையுடன் வைத்து வழிபட்டு வாழ்வில் பல நல்ல மாற்றங்களை பெறுவோம்.

- Advertisement -