பொருளாதார பிரச்சனை தீர பரிகாரம்

money water
- Advertisement -

இன்றைய காலத்தில் குடும்பத்தில் இருக்கும் ஆணும் பெண்ணும் வேலைக்கு சென்று சம்பாதிக்கிறார்கள். சம்பாதித்து மாத தொடக்கத்தில் அவர்கள் கையில் சம்பளம் என்று ஒரு குறிப்பிட்ட தொகை வந்து இருக்கும். எண்ணி 5 அல்லது 10 நாட்களில் அவை அனைத்தும் ஏதாவது ஒரு ரூபத்தில் காலியாகி விடும். மறுநாள் என்ன செய்வது என்று தெரியாமல் யோசிப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் செய்யக்கூடிய ஒரு எளிய பரிகார முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பொருளாதார ரீதியாக ஒருவருக்கு பிரச்சினை ஏற்படுகிறது என்றால் அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். கையில் பணம் தங்கவே இல்லை என்று வருத்தப்படுபவர்களும் பலர் இருக்கலாம். இவை அனைத்திற்கும் காரணமாக திகழ்வது எதிர்மறை ஆற்றல்களே. இந்த எதிர்மறை ஆற்றல்களை நீக்குவதற்கு பல பரிகார முறைகள் இருக்கின்றன அவற்றுள் மிகவும் எளிமையான ஒரு பரிகார முறையைப் பற்றி பார்ப்போம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை தினமும் செய்யலாம். இயலாதவர்கள் செவ்வாய் வெள்ளிக்கிழமையில் செய்யலாம். மேலும் இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது வீட்டில் அசைவம் சமைத்து இருக்கக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பரிகாரத்திற்கு நமக்கு குறிப்பிட்ட சில பொருட்கள் தேவைப்படும். அவை முடக்கத்தான் இலை, கஸ்தூரி மஞ்சள், பச்சை கற்பூரம், ஜவ்வாது.

முடக்கத்தான் கீரை பரவலாக அனைத்து இடங்களிலும் வளரக்கூடிய ஒன்றாக தான் இருக்கிறது. அப்படியும் கிடைக்காதவர்கள் முடக்கத்தான் இலை பொடியை நாட்டு மருந்து கடைகளில் இருந்து வாங்கியும் உபயோகப்படுத்தலாம். முடிந்த அளவு இலையாக பறித்து உபயோகப்படுத்துவது நன்மையைத் தரும். முடக்கத்தான் இலையை நன்றாக சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி காய வைக்க வேண்டும்.

- Advertisement -

இந்த இலை சருகாக காய்ந்த பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் எவ்வளவு இலையை போடுகிறோமோ அதே அளவு கஸ்தூரி மஞ்சள், பச்சை கற்பூரம், மற்றும் ஜவ்வாது அனைத்தையும் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த பொடியை ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். வீடு சுத்தமாக இருக்கும் நாட்களில் அதாவது செவ்வாய், வெள்ளி போன்ற நாட்களில் வீட்டை சுத்தம் செய்த பிறகு ஒரு பாத்திரத்தில் பன்னீரை ஊற்றி அதில் இந்த பொடியை கலந்து வீடு முழுவதும் உள்ளிருந்து தெரிந்து கொண்டு வர வேண்டும்.

வீட்டின் ஒவ்வொரு மூலை முடுக்குகளிலும் இந்த தண்ணீரை தெளிக்க வேண்டும். இவ்வாறு தெரிந்து கொண்டே வீட்டிற்கு வெளியே வரவேண்டும். வாசல் வரை தெளித்து விடுங்கள். இப்படி செய்வதன் மூலம் வீட்டிற்குள் இருக்கும் எதிர்மறை ஆற்றலை நாம் வெளியே கொண்டு வந்து விடுகிறோம் என்பது அர்த்தம். இந்த மூலிகைகள் பொருளாதாரப் பிரச்சினையை தீர்ப்பதோடு மட்டுமல்லாமல் பண வரவை அதிகரிக்கவும் செய்யும். மகாலட்சுமியின் அருளை பரிபூரணமாக பெறவும் உதவுகிறது.

இதையும் படிக்கலாமே: மார்கழி முதல் நாள் வீட்டில் வைக்க வேண்டிய செடி

கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணம் நம் கையில் தங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த எளிய பரிகாரத்தை செய்து பலன் பெறலாம்.

- Advertisement -