இந்த 1 பொருள் பணம் சம்பந்தப்பட்ட அத்தனை பிரச்சனைகளையும் தீர்க்கும்.

pattai
- Advertisement -

பணம் என்றாலே அது வில்லங்கமான விஷயம் தானே. உங்களுடைய வீட்டில், உங்களுக்கு பணம் சம்பந்தப்பட்ட எந்த பிரச்சனைகள் இருந்தாலும் சரி, கண்ணை மூடிக்கொண்டு வியாழக்கிழமை அன்று பின் சொல்லக்கூடிய பரிகாரத்தை மட்டும் நம்பிக்கையோடு செய்து பாருங்கள். வராத பணம் கூட வீடு தேடி வந்து பீரோவில் தங்கும். விற்காத சொத்து கூட விற்கும்.

வாங்க முடியாத சொத்துக்களை கூட வாங்கி போடுவீர்கள். கொடுக்க முடியாத கடனை கூட, திருப்பிக் கொடுத்து விடுவீர்கள். இப்படி பல வகையான நன்மைகளை தரக்கூடிய ஒரே ஒரு பரிகாரம் இது. இந்த பரிகாரத்தை எப்படி செய்யணும். எந்தெந்த பொருட்களை வைத்து செய்யணும் என்பதை பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

பணப் பிரச்சனை தீர பட்டை பரிகாரம்

பட்டைகளில் இரண்டு வகை உண்டு. சாதாரணமாக இருக்கக்கூடிய பட்டை, இன்னொன்று சுருள்பட்டை. இந்த பரிகாரத்திற்கு சுருள்பட்டை தான் நமக்கு கட்டாயம் தேவை. அதை கடைகளில் கேட்டு சரியாக வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு புது ரூபாய் நோட்டு எடுத்து கொள்ளவும்.

20 ரூபாய் நோட்டு, 50 ரூபாய் நோட்டு, 200 ரூபாய், 500 ரூபாய், 2000 ரூபாய் வரை உங்கள் சௌகரியத்திற்கு எதை எடுத்துக் கொள்ள முடியுமோ, ஒரே ஒரு நோட்டை எடுத்துக்கோங்க. கிழிசல் இல்லாத கொஞ்சம் புது நோட்டாக பார்த்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

வியாழக்கிழமை காலை எழுந்து சுத்தபத்தமாக குளித்து விடுங்கள். வியாழன் அன்று காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு குலதெய்வத்தை மனதார வணங்குங்கள். எடுத்து வைத்திருக்கும் நோட்டில் சுருள்பட்டையை வைத்து சுருட்டி, பச்சை நிற நூலால் கட்டி விடுங்கள்.

உள்ளங்கைகளில் இந்த தயார் செய்த நோட்டை வைத்து இரு கைகளையும் கூப்பி சாமி கும்பிட்டுக்கோங்க. வேண்டுதலை மனதார சொல்லுங்கள். பிறகு இதைக் கொண்டு போய் அப்படியே உங்களுடைய பீரோவில் வைக்க வேண்டும். பணம் வைக்கும் பெட்டியில் வைக்கலாம். பணம் வைக்கும் பர்ஸில் வைக்கலாம்.

- Advertisement -

நீங்கள் எந்த இடத்தில் நிறைய பணத்தை வைத்து புழங்குகிறீர்களோ, அந்த இடத்தில் இந்த ரூபாய் நோட்டுடன் சுருட்டிய பட்டையை வைத்து விடுங்கள். இதே போல சொத்து பத்திரங்கள். முக்கியமான டாக்குமெண்ட்ஸ் எல்லாம் வச்சி இருக்க இடத்திலும் இதே மாதிரி ஒரு நோட்டில் பட்டையை சுருட்டி பச்சை நிற நூல் போட்டு, கட்டி வைக்கலாம்.

இதை வைத்துவிட்டு மனம் உருகி உங்கள் உங்களுடைய வேண்டுதலை பிரபஞ்சத்திடம் சொல்லுங்கள். கூடவே பணம் வைக்கும் பெட்டியில் எப்போதும் சிறிதளவு பச்சைக் கற்பூரம், ஏலக்காய், கிராம்பு போன்ற வாசம் நிறைந்த பொருட்களை போட்டு வையுங்கள். இது எல்லாமே சுக்கிரனின் அம்சம் கொண்டது.

சுக்கிர பகவான் நிரந்தரமாக வந்து உங்கள் பீரோவில் தங்க இப்படிப்பட்ட எளிமையான பரிகாரங்கள் கை கொடுக்கும். நாம் இதில் பயன்படுத்திருக்கும் ரூபாய் நோட்டு மகாலட்சுமியின் அம்சம். பச்சை நிற நூல் குபேரரின் அம்சம். வாசம் நிறைந்த பட்டை லவங்கம் ஏலக்காய் பச்சை கற்பூரம் எல்லாமே சுக்கிரனின் அம்சம். இவை அனைத்தும் ஒன்று சேரும்போது நிச்சயம் உங்களுக்கு வெற்றி உண்டு.

இதையும் படிக்கலாமே: சிவன் அருளை முழுமையாக பெற நாளை புதப்பிரதோஷத்தில் இந்த மந்திரத்தை 11 முறை சொன்னால் போதும்.

ஒரு முறை இந்த பரிகாரத்தை செய்து வைத்து விடுங்கள். பீரோவில் வைக்கப்பட்டிருக்கும் அந்த பொருட்களின் வாசம் குறையும் வரை அதை மாற்ற வேண்டாம். அந்த பொருட்களில் இருக்கும் வாசம் நீங்கிய பிறகு புதுசாக பொருட்களை மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். கூடுமானவரை பட்டையை சுற்றி வைத்திருக்கும் அந்த நோட்டை மட்டும் மாற்ற வேண்டாம். பட்டையை மட்டும் மாற்ற வேண்டும். இந்த எளிமையான ஆன்மீகம் சார்ந்த குறிப்பில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -