சிவன் அருளை முழுமையாக பெற நாளை புதப்பிரதோஷத்தில் இந்த மந்திரத்தை 11 முறை சொன்னால் போதும்.

siva lingam manthiram
- Advertisement -

நாளை வரவிருக்கும் புதப்பிரதோஷம் சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. நம்முடைய வாக்கு பலிக்கவும், சொல்லும் வார்த்தையை பிறர் கேட்டு நடக்கவும், புத்தி கூர்மையை பெறவும் அறிவு ஞானத்தை அதிகரிக்கவும் புதபகவானுடைய அனுகிரகம் தேவை. நாளை வரக்கூடிய பிரதோஷத்தில் சிவபெருமானை வழிபாடு செய்வதோடு, புதன் பகவானையும் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் ஒரே நாளில் இரண்டு பெரிய வரங்களை நம்மால் பெற இயலும்.

சிவபெருமானை நினைத்தாலே மோட்சம் தான். அப்பேர்ப்பட்ட இந்த நாளில் அவரை நினைத்து விரதம் இருந்து வழிபடும் பொழுது வாழ்வில் எல்லா இன்பங்களையும் வளமான வாழ்க்கையும் பெறலாம். அப்பேர்ப்பட்ட பிரதோஷம் வரும் ஒவ்வொரு நாளும் சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. இந்த வகையில் நாளைய புதபிரதோஷமும் அதிமுக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்தப் பிரதோஷ நாளில் பலரும் சிவபெருமானை ஆலயங்களும் சென்று வழிபடுவது முறை. அப்படி வழிபடும் நேரத்தில் இந்த ஒரு மந்திரத்தை ஜெபிப்பதன் மூலம் அவருடைய அருளை முழுமையாக பெற முடியும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது என்ன மந்திரம் எப்படி சொல்ல வேண்டும் என்பதை எல்லாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பிரதோஷ நாளில் சொல்ல வேண்டிய சிவ மந்திரம்

இந்த மந்திரத்தை சிவாலயத்தில் பிரதோஷ வேளையில் அவரை தரிசனம் செய்த பிறகு சொல்ல வேண்டும். ஆலயம் சென்று வழிபட முடியாதவர்கள் வீட்டில் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து இந்த மந்திரத்தை சொல்லலாம்.

- Advertisement -

ஓம் தத் புருஷாய வித்மஹே
மகா தேவ தீமஹி
தன்னோ ருத்ர ப்ரசோதயாத்

என்ற இந்த மந்திரத்தை 11 முறை உச்சரிக்க வேண்டும். வேலைக்கு செல்பவர்கள் அல்லது பிரதோஷ நேரத்தில் வெளியில் இருப்பவர்கள் இந்த மந்திரத்தை வீட்டில் ராகு காலம், எமகண்டம் இந்த இரண்டு நேரத்தை தவிர்த்து மற்ற நேரத்தில் 11 முறை சொல்லுங்கள். நிச்சயம் அதற்கான பலனும் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: மகாலட்சுமி தாயாரின் அருள் பெறும் வழிமுறைகள்

இந்த மந்திரத்தை சொல்லும் நேரத்தில் வீட்டில் ஸ்படிக லிங்கம் நந்தி சிலை போன்றவற்றை வைத்திருப்பவர்கள் மஞ்சள் தீர்த்தத்தால் அபிஷேகம் செய்தால் இன்னும் பல விசேஷமான பலன்களை பெறலாம். நாளை நம்பிக்கையுடன் இந்த மந்திர வழிபாட்டை செய்து சிவபெருமானின் அருளை முழுமையாக பெற்றுக் கொள்ளுங்கள்.

- Advertisement -