என்ன செய்தாலும் வீட்டில் செல்வம் தங்குவதே இல்லையா? பச்சை கற்பூரமும், ஜாதிக்காயும் இருந்தால் போதும் இதை கொண்டு விநாயகரின் அருளோடு வீட்டில் தன வரவை எளிதாக அதிகரிக்க செய்யலாம்.

- Advertisement -

எதிர்கால வாழ்விற்காக பணத்தையும், பொருட்களையும் சேர்த்து வைப்பதே மனிதனின் இயல்பு. ஆனால் சில நேரங்களில் நாம் சேர்த்து வைத்த பணத்தையோ, பொருளையோ பயன்படுத்த முடியாமல் அது வீண் விரயமாக மாறி விடும். அதே போல ஒருசிலரால் பணத்தை சேர்க்கவே முடியாத நிலையும் ஏற்படும். இத்தகைய நிலையில் இருந்து விடுபட்டு பண சேர்க்கை பெறவும், சேர்த்த பணத்தை பெருக்கவும் உதவும் சிறப்பான ஒரு பரிகாரத்தை பார்ப்போம்.

நன்மையாக இருந்தாலும், தீமையாக இருந்தாலும் நம் வீட்டிற்கு வரவேண்டும் என்றால் நம் தலைவாசலை தாண்டியே வர வேண்டும். அந்த தலைவாசலில் நாம் வெட்டிவேர் விநாயகரை வீற்றிருக்க செய்வதன் மூலம் நமது இல்லத்தில் நல்லவை தானாக நடகத்துவங்கும். ஆனால் வெட்டிவேர் விநாயகரை நாம் சாதாரணமாக வீற்றிருக்க செய்யமுடியாது. அதற்கான சில பிரத்யேக வழிமுறை உண்டு. அந்த வழிமுறைகளை இப்போது பார்ப்போம்.

- Advertisement -

வெட்டிவேர் விநாயகர் பரிகாரம்:
முதலில் பச்சை கற்பூரத்தையும், ஜாதிக்காயையும் தூளாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அந்தத் தூளை பன்னீரில் கரைத்து, அந்த பன்னீருக்குள் வெட்டிவேர் விநாயகரை முழுமையாக நனைத்து, ஐந்து நிமிடம் வரை ஊற வைக்க வேண்டும். பிறகு அந்த வெட்டிவேர் விநாயகரை உலர விட வேண்டும். அதாவது அதில் இருந்து நீர் சொட்டாத அளவுக்கு உலர விட்டு, பிறகு அதை எடுத்து தலை வாசலின் மேல் மாட்டி விட வேண்டும்.

இதை நாம் தினமும் செய்து வர, அந்த வெட்டிவேரின் மணமும் பச்சை கற்பூரத்தின் மணமும் சேர்ந்து சுக்கிரனை வசப்படுத்தி விடும். இதனால் வீட்டிற்குள் தனவரவு அதிகரிக்கும். மேலும் அதிகரித்த தனவரவு வெளியில் செல்லாமல் காக்க வாயிலில் கணபதி வீற்றிருப்பார். மேலும் சம்பாதித்த பொருட்களை சேமிப்பாக மாற்றக்கூடிய பரிகாரமாக இந்த பரிகாரம் கருதப்படுகிறது.

- Advertisement -

இவற்றை நாம் தொடர்ந்து செய்து வர பண மாற்றங்கள் பல ஏற்படும். மேலும் சேமிப்புகள் அதிகரிக்கும். வீட்டில் இருக்கும் அனைவரும் புத்துணர்ச்சியுடன் இருப்பர். இந்த பரிகாரத்தை நாம் செய்வதற்கு முன்பாக வீட்டிற்குள் ஏதேனும் உடைந்த பொருட்களோ அல்லது அழுக்குகள் படிந்த பொருட்களோ இருக்கக்கூடாது.

இதையும் படிக்கலாமே: பௌர்ணமி நிலவு போல உங்கள் வாழ்க்கை பிரகாசமாக மாற பரிகாரம்

மேலும் சுத்தம் இல்லாமல் இருக்கும் தன்மை இருக்கவே கூடாது. அவ்வாறு இருப்பின் அதுவே சனிபகவானின் ஆதிக்கத்தை ஏற்படுத்தும். அவற்றை சரி செய்த பிறகே இந்த விநாயகப் பெருமானை தலைவாசலில் மாட்ட வேண்டும் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாக கருதப்படுகிறது. நாம் செய்யும் பூஜையின் பலனை நாம் முழுமையாக அடைவதற்கும் நம்மிடம் வரும் தனம் நம்மை விட்டு வெளியில் செல்லாமல் இருப்பதற்கும், நாம் எடுக்கும் முயற்சிகளில் லாபம் கிடைப்பதற்கும் இந்த வெட்டிவேர் விநாயகர் அருள் புரிவார்.

- Advertisement -