பணம் வீண் விரயம் ஆகாமல் இருக்க பஞ்சமுக தீபம்

pana thadai neenga
- Advertisement -

நம்முடைய வாழ்க்கையில் ஒரு நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு கொஞ்சம் உயரவே படாத பாடு பட வேண்டும். கஷ்டப்பட்டு போராடி எத்தனையோ அவமானங்களை சந்தித்த பிறகு தான் மனிதன் தன்னுடைய நிலையை மேம்படுத்திக் கொள்கிறான். அப்படி உயரும் ஒருவரை மற்றவர் பார்க்கும் விதமானது வேறு வகையில் இருக்கும்.

இவர்களுக்கு என்ன எல்லாம் இருக்கிறது, வசதியாய் வாழ்கிறார்கள் என்று சாதாரணமாக சொல்லி விடுவார்கள். இந்த எண்ணங்களும் பார்வைகளுமே நம்முடைய வாழ்க்கையை ஒன்றும் இல்லாமல் செய்து விடும். இதைத் தான் பெரியவர்கள் கல்லடி பட்டாலும் படலாம் கண்ணடி படக்கூடாது என்று சொல்லி வைத்தார்கள். இது நம்முடைய பொருளாதார நிலையை அப்படியே சரித்து விடும்.

- Advertisement -

இதனால் உடல்நலம், மனநலம், பொருளாதாரம் என அனைத்திலும் பின்தங்கி விடுவோம். இப்படியான இன்னல்களில் இருந்து நம்மை காக்கக்கூடிய தாயாக விளங்குபவர் தான் இந்த வாராகி. பொதுவாக வாராகி அன்னை நம்முடைய எதிரிகளை அழித்து நம்மை நல்ல முறையில் வாழ வைப்பதில் முதன்மையாயானவர். இந்த பிரச்சனைகளிலிருந்து வெளிவர அவரை எப்படி வணங்குவது என்று ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கண் திருஷ்டி பணத்தட்டுப்பாடு நீங்க வாராகி வழிபாடு

இந்த வழிபாட்டை நாம் வீட்டில் இருந்தே செய்யலாம். இதற்கு வாராகி அன்னை படம் சிலை வைத்திருப்பவர்கள் அதை வைத்து செய்யலாம். படம் இல்லாதவர்கள் ஐந்து முக திரி கொண்ட விளக்கை வராகி அன்னையாக நினைத்து ஏற்றுங்கள். படம் சிலை இருந்தாலும் இந்த விளக்கை தான் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

வாராகி அன்னை சப்த கன்னிகளில் பஞ்சமுக நாயகியாக விளங்குகிறார். ஆகையால் வாராகி அன்னைக்கு 5 முக தீபம் ஏற்றுவது மிகவும் சிறந்தது. இந்த அன்னைக்கு நெய்வேத்தியமாக கிழங்கு வகைகள் அல்லது மாதுளை முத்துக்கள் போன்றவற்றை தயார் செய்து கொள்ளுங்கள். செவ்வரளி மலர் அல்லது வாசனை மலர்களையும் பூஜைக்கு தயார் செய்து கொள்ளுங்கள்.

இந்த பூஜையை வெள்ளி செவ்வாய் அன்று தூங்குவது மிகவும் நல்லது. அன்றைய தினம் காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து முடித்து வாராகி அன்னை படத்திற்கு முன்பாக இந்த பஞ்சமுக தீபத்தை ஏற்றி வைத்து விடுங்கள். அதன் பிறகு வெற்றிலை பாக்கு பழம் வைத்து நெய்வேத்தியத்துடன் ஒரு எலுமிச்சை பழத்தை கட்டாயமாக வைக்க வேண்டும்.

- Advertisement -

இவையெல்லாம் வைத்த பிறகு வாராகி அன்னை மனதில் நினைத்துக் கொண்டு ஓம் மோஹி மோஹின்யை நமஹ என்ற வாராஹி இந்த மந்திரத்தை 27 முறை உச்சரிக்க வேண்டும். அதன் பிறகு வராகி அன்னைக்கு வைத்த நெய்வேத்தியத்தை எடுத்து வீட்டில் உள்ளவர்களும் நீங்களும் பிரசாதமாக சாப்பிடுங்கள்.

வாராகி அன்னைக்கு வைத்த எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி வீட்டில் இருக்கும் அனைவரும் பழசாராக கலந்து குடியுங்கள். இதன் மூலம் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் உங்களுக்குள் இருக்கும் எதிர்மறை ஆற்றல் அனைத்தும் நீங்கி விடும். மேலும் நல்ல நேர்மறை ஆற்றலும் நல்ல பணவரவையும் கண் திருஷ்டி இல்லாத வாழ்க்கையும் வாழலாம்.

இந்த பூஜையை தினமும் செய்ய முடிந்தவர்கள் செய்யலாம் அல்லது வெள்ளி செவ்வாயில் செய்யலாம். இந்த பழத்தை வீட்டு வாசலில் கட்டி வைப்பதன் மூலம் வீட்டிற்கு நல்ல நேர்மறை ஆற்றல் கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும் பணத்தடைகள் நீங்கும். வீண் செலவுகள், ஆரோக்கிய கேடுகள் வருவது தடைப்படும்.

இதையும் படிக்கலாமே: போகி அன்று காப்பு கட்டும் முறை

நீங்கள் வேறு ஏதேனும் முக்கியமான காரியத்திற்கு செல்கிறீர்கள் என்றால் இந்த பழத்தை அன்றைய தினம் வைத்து வணங்கி கையில் கொண்டு செல்லுங்கள். இது உங்களுடைய காரியத்தை வெற்றியாக்கி கொடுக்கும். வாராகி அன்னையை நினைத்து இந்த மந்திரத்தை சொல்லி வழிபடும் பூஜை நம்முடைய சகல இன்னல்களையும் தீர்க்கும்.

- Advertisement -