பண தேவையை பூர்த்தி செய்யும் பெருமாள் வழிபாடு

vishnu valipadu
- Advertisement -

ஒருவரின் வாழ்வாதாரம் என்பது அவரின் வருமானத்தை பொருத்துதான் அமைகிறது. அந்த வருமானத்தை பொறுத்துதான் அவர்களின் அடிப்படை தேவைகளும் இருக்கும். பலருக்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு கூட வருமானம் இல்லாமல் கஷ்டப்படுவார்கள். இன்னும் சிலரோ ஆடம்பர வசதிகளை மேற்கொள்ளும் அளவிற்கு வருமானம் இருக்கும். அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் கஷ்டப்படுபவர்கள் தங்களின் பண வரவை அதிகரிக்க பெருமாளை எந்த முறையில் வழிபட வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொரு நபரும் கடுமையாக உழைக்க வேண்டும். கடுமையாக உழைத்து அதன் மூலம் பணவரவை அதிகரித்து அதன் அடிப்படையிலேயே வசதியான வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்தால்தான் அந்த வசதியும் நிலைக்கும். சம்பாதித்த பணமும் நிலைக்கும். இப்படி கடினமாக உழைத்தும் தங்களால் தங்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்துக் கொள்ள முடியாத நிலையில் இருப்பவர்கள் பெருமாளை வழிபட வேண்டும்.

- Advertisement -

பெருமாளுக்கு உரிய தினமாக புதன்கிழமையும், சனிக்கிழமையும் திகழ்கிறது. எந்த கிழமையை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம். இதற்காக பெரிதும் செலவு செய்ய வேண்டியதே இல்லை. அருகில் இருக்கும் பெருமாள் அல்லது விஷ்ணுவின் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். தங்களின் வசதிக்கேற்ப எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செல்லலாம். இருப்பினும் விடியற்காலையில் செல்வது மிகவும் சிறப்புக்குறியதாக திகழ்கிறது.

புதன்கிழமையை தேர்வு செய்தால் தொடர்ந்து புதன்கிழமை தோறும் இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். சனிக்கிழமை தேர்வு செய்தால் சனிக்கிழமையில் தொடர்ந்து செய்ய வேண்டும். ஒரு பெரிய அகல் விளக்கு ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள். அதில் நெய்யை ஊற்றி தாமரை தண்டு திரி போட்டு தீபம் ஏற்றி வைக்க வேண்டும். பிறகு பெருமாளிடம் தங்களுடைய பண தேவைகள் பூர்த்தியடைய வேண்டும்.

- Advertisement -

வாழ்வாதாரம் உயர வேண்டும் அல்லது நியாயமான கோரிக்கை ஏதாவது ஒன்றை வைக்க வேண்டும். இப்படி வழிபட்ட பிறகு 11 முறை பெருமாளை வலம் வர வேண்டும். அவ்வாறு வலம் வரும்பொழுது “ஓம் நமோ நாராயணா” என்னும் மந்திரத்தை மனதிற்குள் மனதார உச்சரித்து வேறு எந்த நினைவும் வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் அவரை மட்டுமே நினைத்து வலம் வர வேண்டும்.

இப்படி தொடர்ந்து 27 வாரங்கள் செய்துவர தாங்கள் எந்த கோரிக்கையை வைத்து இந்த வழிபாட்டை மேற்கொண்டார்கள் அந்த கோரிக்கை கண்டிப்பான முறையில் நிறைவேறும். அதோடு மட்டுமல்லாமல் பண வரவும் அதிகரிக்கும். அதேசமயம் அடிப்படை தேவைகளும் பூர்த்தியடையும். நியாயமாக கிடைக்க வேண்டிய விஷயத்தை மட்டுமே வேண்டுதலாக வைத்து இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: ஆருத்ரா தரிசனம் 2023

பெருமாளை முழு மனதோடு நம்பி ஒரு துளி கூட சந்தேகமில்லாமல் அவரை வழிபட்டால் நம் வாழ்வில் பல அற்புதங்களை பெருமாள் நிகழ்த்துவார் என்பது பலரும் அனுபவபூர்வமாக கண்ட உண்மை.

- Advertisement -