பச்சரிசியை இப்படி வைத்தால் வீட்டில் பண என்றைக்குமே நிலையாக நிலைத்து நிற்பதோடு, பணவரவையும் அதிகரிக்கும்..

rawrice money
- Advertisement -

வாழுகின்ற அனைத்து நாட்களிலும் பணத்தின் தேவை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அந்த தேவையை பூர்த்தி செய்வதற்காக நாமும் பல வழிகளில் முயற்சி செய்து கொண்டு இருக்கிறோம். அதோடு சேர்ந்து பணத்தேவையை அதிகரிப்பதற்காக பல வழிபாட்டு முறைகளையும், பரிகாரங்களையும் மேற்கொள்கிறோம். அந்த வகையில் இன்று பணவரவை அதிகரிக்க பச்சரிசியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பண வரவை அருளக்கூடியவராக திகழ்பவர்தான் குபேரர் மற்றும் மகாலட்சுமி தாயார். இவர்களின் மனம் குளிர்ந்து விட்டாலே நமக்கு பணத்தட்டுப்பாடு என்பது இருக்கவே இருக்காது. ஏதாவது ஒரு ரூபத்தில் நம் கையில் பணப்புழக்கம் இருந்து கொண்டே இருக்கும். அவர்களின் மனதை குளிர வைப்பதற்கு பல வழிபாட்டு முறைகள் இருக்கின்றன. அவற்றுள் மிகவும் எளிமையாக நம் வீட்டில் இருக்கக்கூடிய பச்சரிசியை வைத்து எப்படி பரிகாரம் செய்வது என்று பார்ப்போம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை நாம் பௌர்ணமி நாள் அன்று தான் செய்ய வேண்டும். நம் வீட்டில் இருக்கும் அரிசியை நாம் அன்னபூரணியாக வணங்கும் பழக்கம் நம்மிடம் இருக்கிறது. அதிலும் குறிப்பாக பச்சரிசி என்பது அனைத்து தெய்வங்களுக்கும் உகந்ததாக கருதப்படுகிறது. மேலும் அனைத்து விதமான ஆன்மீக செயல்பாடுகளுக்கும் பச்சரிசியை தான் நாம் பயன்படுத்துகிறோம். அந்த வகையில் இந்த பரிகாரத்திற்கும் நமக்கு பச்சரிசி தான் தேவைப்படும். இதோடு நமக்கு ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய் மற்றும் பத்து ரூபாய் நாணயங்களும் தேவைப்படும். ஒரு கண்ணாடி பாட்டில் தேவைப்படும்.

பௌர்ணமி நாளன்று ஒரு சுத்தமான கண்ணாடி பாட்டிலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு கைப்பிடி அளவு பச்சரிசியை போடுங்கள். அதற்கு மேல் ஒரு ரூபாய் நாணயத்தை வையுங்கள். இந்த நாணயம் படுக்க வசத்தில் தான் இருக்க வேண்டும். அதற்கு மேல் மறுபடியும் ஒரு கைப்பிடி அளவு பச்சரிசியை போடுங்கள். அதற்கு மேல் இரண்டு ரூபாய் நாணயத்தை வையுங்கள். இவ்வாறு ஒவ்வொரு நாணயத்தையும் பச்சரிசியை போட்டு வைத்து விட வேண்டும். கடைசியாக பத்து ரூபாய் நாணயத்தை வைத்து அதற்கு மேல் அந்த பாட்டில் நிறையும் அளவிற்கு பச்சரிசி போட்டு விட வேண்டும்.

- Advertisement -

இந்த பாட்டிலின் மூடியில் ஆறு துளைகளை போட்டு அந்த பாட்டிலை மூடி விட வேண்டும். இந்த பாட்டில் நம் வீட்டில் இருக்கும் நபர்களின் கண்களில் தென்படுமாறு ஏதாவது ஒரு இடத்தில் வைத்து விட வேண்டும். முக்கிய குறிப்பு வெளியில் இருந்து வருபவர்கள் இதை பார்க்காத அளவிற்கு வைக்க வேண்டும்.

இந்த பாட்டிலில் இருக்கும் பச்சரிசியை ஒவ்வொரு பௌர்ணமிக்கும் மாற்ற வேண்டும். நாணயங்களை மறுபடியும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். பழைய பச்சரிசியை பறவைகளுக்கோ அல்லது மாட்டிற்கோ உணவாக வழங்க வேண்டும். அதை வீணாக்கக்கூடாது.

- Advertisement -

இவ்வாறு செய்வதன் மூலம் மகாலட்சுமி தாயாரின் அருளும், குபேரரின் அருளும் நமக்கு பரிபூரணமாக கிடைத்து நம் கையில் பணப்புழக்கம் என்றுமே நிலையாக நிலைத்து நிற்கும். மேலும் பண வரவு அதிகரித்துக் கொண்டே செல்லும்.

இதையும் படிக்கலாமே: நாளை (3.9.23) மகா சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகருக்கு இப்படி தீபம் ஏற்றி இந்த மந்திர வழிபாடு செய்யுங்கள். சங்கடங்கள் தீர்ந்து விநாயகரின் அருள் ஆசியை பெற்று செல்வ வளமாய் வாழ நாளைய தினத்தை தவற விட்டால் இன்னும் ஓராண்டு காத்திருக்க வேண்டும்.

எளிமையான அதே சமயத்தில் சக்தி வாய்ந்த இந்த பரிகாரத்தை ஒவ்வொரு பௌர்ணமி நாளன்று நாம் செய்து பௌர்ணமியை போல் நம் வாழ்க்கையில் ஒளிப் பெருகச் செய்வோம்.

- Advertisement -