பண வரவு அதிகரித்து செல்வ செழிப்புடன் வாழ விநாயகர் வழிபாடு

selva vinayagar
- Advertisement -

முழு முதற் கடவுளாக திகழக்கூடிய விநாயகப் பெருமானை நாம் அன்றாடம் வழிபட வேண்டும். ஒவ்வொரு நொடியும் கூட அவரை வழிபடுவதன் மூலம் நமக்கு பல அற்புதமான பலன்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதனால் தான் அவரை முழுமுதற் கடவுள் என்றே கூறுகிறோம். இவரை வணங்குவதால் நமக்கு என்ன பலன் கிடைக்காது என்று யோசித்தால் கூட நம்மால் பதில் சொல்ல முடியாது.

அந்த அளவுக்கு அற்புதமான பலன்களையும் நம் வாழ்க்கையில் நம்முடைய முன்னேற்றத்திற்கும் வழி வகுக்கக்கூடிய தெய்வமாக விநாயகப் பெருமான் திகழ்கிறார். அப்படிப்பட்ட விநாயகப் பெருமானை எந்த முறையில் வழிபட்டால் பணவரவு அதிகரிக்கும் அஷ்ட லட்சுமிகளின் அருள் கிடைக்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

ஒரு தெய்வத்தை நாம் வழிபடும் பொழுது அந்த தெய்வத்தின் அருள் மட்டும் தான் நமக்கு கிடைக்கும். ஆனால் விநாயகப் பெருமானை பொறுத்தவரை நாம் விநாயகப் பெருமானை வழிபட்டால் விநாயகப் பெருமானின் அருளோடு மட்டுமல்லாமல் மற்ற தெய்வங்களின் அருளும் சேர்ந்து கிடைக்கும். அந்த வகையில் அஷ்ட ஐஸ்வர்யங்களை பெற உதவ கூடிய அஷ்ட லட்சுமிகளின் அருளை பெறுவதற்கு விநாயகப் பெருமானை வழிபடும் முறையைப் பற்றி பார்ப்போம்.

இந்த வழிபாட்டை வெள்ளிக்கிழமை அன்று காலை 6:00 மணியிலிருந்து 7:00 மணிக்குள் செய்ய வேண்டும். அருகில் இருக்கக்கூடிய விநாயகர் ஆலயத்திற்கு செல்லுங்கள். அங்கு விநாயகருக்கு முன்பாக 16 அகல்விளக்குகளில் நெய் தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு 108 முறை விநாயகரை வலம் வர வேண்டும். அப்பொழுது “ஓம் லட்சுமி விநாயகரே போற்றி” என்னும் மந்திரத்தை கூறிய படியே வலம் வர வேண்டும்.

- Advertisement -

இந்த எண்ணிக்கையை சரியாக கணக்கிடுவதற்கு செம்பருத்திப் பூக்களையோ அல்லது அருகம்புல்லையோ 108 என்ற எண்ணிக்கையில் எடுத்துக்கொண்டு ஒவ்வொரு முறையும் சுற்றும் பொழுதும் ஒவ்வொரு பூவையோ அல்லது அருகம்புல்லையோ விநாயகருக்கு சமர்ப்பித்து வலம் வர இதன் பலன் மிகவும் அதிகமாக இருக்கும்.

108 முறை சுற்றி வந்த பிறகு தங்கள் பெயரில் விநாயகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். தங்கள் வாழ்வில் செல்வ செழிப்பு அதிகரிக்கும் வரை தொடர்ந்து விடாமல் விநாயகப் பெருமானை இந்த மந்திரத்தை கூறி வலம் வந்து கொண்டே இருக்க வேண்டும். விநாயகப் பெருமானை விடாமல் பற்றி கொண்டு இந்த வழிபாட்டை செய்பவர்களுடைய வாழ்க்கையில் பணவரவு என்பது அதிகரிக்கும். செல்வ செழிப்பு மேலோங்கும். தனதானியம் சேரும். அஷ்ட லட்சுமிகளின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும் .

அருகில் அரசமரம் இருந்தாலும் அரச மரத்தையும் இந்த முறையில் மந்திரம் கூறி வலம் வர அனைத்து பலன்களும் நமக்கு கிடைக்கும். தங்கள் வேண்டுதல் நிறைவேறிய பிறகு விநாயகப் பெருமானுக்கு தங்களால் இயன்ற அபிஷேகங்களை செய்து அவர் மனதை குளிர்விக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: ராகுவால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க வழிபாடு
மிகவும் எளிமையான அதே சமயம் சக்தி வாய்ந்த விநாயகர் வழிபாட்டை மேற்கொண்டு வாழ்க்கையில் பணவரவையும் செல்வ செழிப்பையும் அதிகரித்து நிம்மதியான மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழலாம்.

- Advertisement -