பணம் பல வழிகளில் வர பரிகாரம்

murugan ginger
- Advertisement -

சிலருக்கு எந்த காரியத்தை தொடங்கினாலும் அதில் தடங்கல் ஏற்பட்டு கொண்டே இருக்கும். அது தொழிலாக இருந்தாலும் சரி, குடும்பத்தில் நடக்கும் நல்ல காரியங்கள் ஆக இருந்தாலும் சரி ஏதேனும் ஒரு தடங்கல் இருந்து கொண்டே இருக்கும். இது சில நேரங்களில் நம்மை விரக்தியின் உச்சத்திற்கு கொண்டு சென்று விடும்.

இவை அனைத்திலும் விட பணத்தடை என்பது நம்மை அப்படியே புரட்டி போட்டு விடக் கூடியது. பணம் இல்லாமல் என்ன செய்ய முடியும். வரவேண்டிய பணம் கைக்கு வராமல் தடைபட்டுக் கொண்டே இருந்தால் எந்த ஒரு காரியத்தையும் சிறப்பாக செய்ய முடியாது. மொத்தத்தில் அனைத்து தடைகளையும் சரி செய்யக் கூடிய ஒரு எளிய பரிகாரத்தை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

தடைகளை தகர்த்தெறிய இஞ்சி பரிகாரம்

இந்த தடைகளை எல்லாம் தகர்த்தெறிய நாம் பயன்படுத்த போகும் பொருள் தான் கொஞ்சம் ஆச்சரியப்படுத்தக் கூடிய ஒன்று. அது வேறொன்றும் இல்லை இஞ்சி தான். இதையெல்லாம் சரி செய்வதற்கும் இஞ்சிக்கும் என்ன தொடர்பு என்பது பற்றி எல்லாம் நம் மனம் சிந்திக்கும். இஞ்சானது செவ்வாய் கிரகத்தின் காரியத்துவம் பெற்றது என்று சொல்லப்படுகிறது.

இந்த இஞ்சியை தினந்தோறும் நாம் பயன்படுத்தும் போது நம் உடல் ஆரோக்கியத்தை மட்டும் இது மேம்படுத்துவதில்லை நம்முடைய பொருளாதார தடை, காரியத்தடை அனைத்தையும் இது மேம்படுத்தும். ஆகையால் தான் நம் முன்னோர்கள் இதை தினந்தோறும் உணவில் சேர்த்து வந்தார்கள். அவர்கள் செய்த ஒவ்வொரு காரியத்திற்கு பின்பும் பல உண்மைகள் மறைந்திருப்பதற்கு இதுவும் ஒரு சான்று.

- Advertisement -

இந்த இஞ்சியை அரைத்து சாறு எடுத்து குளிக்கும் தண்ணீரில் சிறிதளவு கலந்து குளிக்க வேண்டும். இஞ்சி சாறு கலக்கும் போது அந்த தண்ணீர் சுடுதண்ணீராகத் தான் இருக்க வேண்டும் பச்ச தண்ணீரில் கலந்து குளிக்க கூடாது. அதே போல் வீடு துடைக்கும் நேரத்திலும் இந்த இஞ்சி சாறு சிறிதளவு கலந்து துடைக்கலாம்.

வியாபாரம் தொழில் செய்பவர்கள் இஞ்சை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு சிறிய கிண்ணத்தில் போட்டு தொழில் நிறுவனங்களில் வைக்கலாம். இதனால் வியாபாரம் அதிகரிக்கும் பணத்தடை நீங்கும் காரிய தடைகளும் விலகும். இத்துடன் இஞ்சியை ஏதேனும் ஒரு வகையில் தினமும் நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் இதுவும் முக்கியமான ஒன்று.

- Advertisement -

இந்த இஞ்சியை தினந்தோறும் பயன்படுத்தும் போது செவ்வாய் கிரகத்தின் அனுகிரகம் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். செவ்வாய் கிரகத்துக்கு அதிபதியானவர் யார் முருகப்பெருமான் இவரின் அருள் கிடைத்தாலே போதும். நம்முடைய அனைத்து தடைகளும் நீங்கும். ஒரு மனிதனின் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய அனைத்து தடைகளையும் நீக்க கூடிய முருகனின் அருளைப் பெறவும் இந்த பரிகாரம் உதவி புரியும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: தடைகளை தகர்த்தெறியும் தேங்காய் பரிகாரம்

இந்த பரிகார முறையில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து நல்ல பலனை அடையலாம். எந்த ஒரு பரிகாரத்தையும் நம்முடைய முயற்சியுடனும் உழைப்புடனும் சேர்த்து முழு நம்பிக்கையுடன் செய்தால் நல்ல பலனை பெறலாம் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -