தடைகளை தகர்த்தெறியும் தேங்காய் பரிகாரம்

vinayagar thengai
- Advertisement -

மனிதனுக்கு இருக்கக் கூடிய எத்தனையோ வகை பிரச்சனைகளில் காரியத்தடை முக்கியமான பிரச்சனை என்றே சொல்லலாம். எந்த ஒரு செயலையும் நாம் செய்ய நினைக்கும் போது செய்து முடித்தால் தானே வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடியும். எதை தொட்டாலும் தடங்கள் என்றால் எப்படி நம்மால் முன்னேற முடியும்.

இது ஒரு புறம் இருக்க இன்னும் சில இடங்களில் மங்களகரமான விஷயங்கள் எதையும் செய்யவும் முடியாது. நடக்கவும் செய்யாது குறிப்பாக திருமண வயதில் இருப்பவர்களுக்கு திருமணம் கைக்கூடாது, அப்படியே திருமணம் நடந்தாலும் புத்திர பாக்கியம் இல்லாமல் துன்பப்படுவார்கள்.

- Advertisement -

இப்படி ஒரு மனிதன் வாழ்க்கையில் சந்திக்கக் கூடிய அனைத்து தடைகளையும் தகர்த்து எறிய அற்புதமான ஒரு பரிகார முறை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

தடைகளை தகர்த்தெறிய தேங்காய்

இந்த பரிகாரத்தை ஞாயிற்றுக்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். இதற்கு உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு விநாயகர் ஆலயத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள். அந்த விநாயகர் ஆலயத்தில் தேங்காய் சுரை விடுவதற்கான இடம் ஒன்று இருக்க வேண்டும்.

- Advertisement -

அதே போல் அந்த விநாயகர் ஆலயத்தில் ஒரு கால பூஜையாவது நடக்க வேண்டும். ஒரு சில இடங்களில் விநாயகர் ஆலயம் இருக்கும் ஆனால் எந்தவித பூஜையும் நமஸ்காரங்களும் இல்லாமல் சாதாரணமாக இருக்கும். அப்படியான கோவிலில் இந்த பரிகாரத்தை செய்யக் கூடாது பூஜை வழிபாடுகள் செய்யக் கூடிய ஆலயமாக இருக்க வேண்டும்.

வீட்டில் யாருக்கு காரியத்தடை இருக்கிறதோ யாருக்கு திருமண தடை, புத்திர பாக்கியம் இல்லையோ அவர்களை ஞாயிற்றுக்கிழமை வேளையில் விநாயகர் ஆலயத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். கையில் ஒரே ஒரு தேங்காய் மட்டும் மறக்காமல் கொண்டு செல்லுங்கள். இதை தவிர்த்து விநாயகருக்கு அர்ச்சனை காண பொருளும் தெய்வேத்தியம் போன்றவைஉங்கள் விருப்பம் போல எடுத்துச் செல்லலாம்.

- Advertisement -

காரியத்தடை உள்ளவர்களை விநாயகர் ஆலயத்தில் நிறுத்தி அவர்களை மூன்று முறை திருஷ்டி சுற்றுவது போல அவர்களுக்கு சுற்ற வேண்டும். அதன் பிறகு தேங்காய் சூரை விடும் இடத்தில் இந்த தேங்காய் உடைத்து விட்டு விநாயகரை மூன்று முறை வலம் வந்து நேராக வீட்டுக்கு வந்து விடுங்கள். இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்யும் போது தடைப்பட்ட காரியங்கள் ஒவ்வொன்றாக விலக ஆரம்பிக்கும்.

இதையும் படிக்கலாமே: எதிரிகள் மற்றும் துரோகிகள் தொல்லை நீங்க பரிகாரம்

தடைகள் இல்லா அற்புதமான வாழ்க்கை வாழ எளிமையாக இது போன்ற பரிகாரங்களை நமக்கு நிறைய சாஸ்திரங்கள் தந்து இருக்கிறது. இந்த பரிகார முறைகளை நம்பிக்கையுடன் செய்யும் போது நிச்சயம் நல்ல பலனை பெறலாம் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -