நவராத்திரி நிறைவு பெற்ற பிறகு பத்தாவது நாளாக வரக்கூடியது தான் விஜயதசமி. அன்றைய தினத்தில் நாம் தொடங்கக்கூடிய எந்த காரியமாக இருந்தாலும் அந்த காரியம் விஜயமாகும் அதாவது வெற்றி பெறும் என்று கூறப்படுகிறது. அதனால் தான் அன்றைய தினத்தில் பலரும் தங்களுடைய பிள்ளைகளை கல்வி கூடத்தில் கொண்டு போய் சேர்ப்பார்கள். இதன் மூலம் அவர்களின் பிள்ளைகள் வெற்றிகரமாக படிப்பை நிறைவு செய்வார்கள் என்று பொருள்படும். அப்படிப்பட்ட விஜயதசமி நாளன்று பணவரவு ஏற்படுவதற்கு செய்யக்கூடிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
பணவரவு அதிகரிக்க விஜயதசமி பரிகாரம்
வெற்றிகளை வாரி வழங்கக்கூடிய நாளாக திகழக்கூடிய விஜயதசமி நாளன்று நாம் நம்முடைய பண வரவை அதிகரிப்பதற்கு சில வழிமுறைகளை பின்பற்ற முடியும். அந்த வழிமுறைகளில் மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்வது சுக்கிரன் மற்றும் குருவின் அருளை பெறுவதுதான். குரு என்பவர் பெரும் பணத்தைக் குறிக்கக் கூடியவராக திகழ்கிறார். சுக்கிரன் என்பவர் அன்றாட செலவுகளை சமாளிக்கும் அளவிற்கு பணவரவை தரக்கூடியவராக திகழ்கிறார். இவர்கள் இருவரின் அருளையும் பெற்று விட்டால் நமக்கு பணவரவில் எந்த வித குறையும் இருக்காது. அதற்குரிய ஒரு பரிகாரத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.
இந்த பரிகாரத்தை வருடத்திற்கு ஒருமுறை வரக்கூடிய விஜயதசமி நாள் அன்று தான் செய்ய வேண்டும். இதற்கு நமக்கு ஒரு குங்குமச்சிமிழ் ஒன்று வேண்டும். அது வெள்ளியில் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் வெள்ளியில் வாங்கிக் கொள்ளுங்கள். ஏற்கனவே வீட்டில் வெள்ளிக் குங்குமச்சிமிழ் இருக்கிறது என்று நினைப்பவர்கள் அந்த குங்குமச்சிமிழை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
விஜயதசமி நாளன்று அருகில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு அம்மனின் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அம்மன், லட்சுமி ,சரஸ்வதி, மாரியம்மன் இப்படி எந்த ரூபத்தில் இருந்தாலும் அந்த ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அன்றைய தினத்தில் அந்த அம்மனுக்கு மஞ்சள் அபிஷேகம் செய்து மஞ்சளை பிரசாதமாக தருவார்கள். அந்த மஞ்சளை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வரவேண்டும்.
ஒருவேளை அங்கு மஞ்சள் அபிஷேகம் செய்யவில்லை மஞ்சளை பிரசாதமாக தரவில்லை என்னும் பட்சத்தில் வீட்டில் விரலி மஞ்சளை ஊறவைத்து நன்றாக அரைத்து கெட்டியாக உருண்டை பதத்திற்கு எடுத்துக் கொண்டு அருகில் இருக்கக்கூடிய அம்மன ஆலயத்திற்கு செல்ல வேண்டும். பிறகு அந்த மஞ்சளை அம்மனின் பாதத்தில் வைத்து அதில் சிறிதளவு மட்டும் வாங்கி வர வேண்டும். இப்படி வாங்கி வந்த இந்த மஞ்சளை நாம் சுத்தம் செய்து வைத்திருக்கும் வெள்ளி குங்குமச்சிமிழ் போட்டு மூடி வைத்து விட வேண்டும். அவ்வளவுதான் பரிகாரம்.
ஒரு வருடம் வரை இது அப்படியே இருக்கட்டும் அடுத்த வருடம் விஜயதசமி நாளன்று குங்குமச்சிமிழில் இருக்கும் மஞ்சளை தண்ணீரில் கரைத்து கால் படாத இடத்தில் ஊற்றிவிட்டு புதிதாக மஞ்சளை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். இப்படி செய்வதன் மூலம் சுக்கிர குருவின் அம்சம் நமக்கு கிடைக்கும். அதன் மூலம் பணவரவு என்பது அதிகரிக்கும்.
இதையும் படிக்கலாமே: புரட்டாசி கடைசி சனிக்கிழமை வழிபாடு
மிகவும் எளிமையான இந்த பரிகாரத்தை விஜயதசமி நாளன்று செய்பவர்களுக்கு பணவரவில் எந்தவித குறையும் இருக்காது என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.