பணத்தடை அகல கிராம்பு பரிகாரம்

cash glove
- Advertisement -

ஒரு மனிதனை மொத்தமாக முடக்கி போடக் கூடிய ஒரு ஆற்றலானது பணத்திற்கு உண்டு. பணம் மட்டுமே எல்லாவற்றையும் சாதித்து விடுமா? என்று கேட்கலாம். ஆனால் பணம் இல்லை என்றால் எதையுமே சாதிக்க முடியாது என்ற நிதர்சனமான உண்மையையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதற்காகத் தான் இன்று அனைவரும் பணத்தின் பின்னாலே ஓடிக் கொண்டிருக்கிறோம்.

இப்படி பணத்தின் பின்னாலே அலைந்தாலும் பணம் நம்மிடம் வரவேண்டும் அல்லவா. அப்படி வந்த பணம் நம்மிடம் வீண் விரயம் ஆகாமல் தங்க வேண்டும். அது மட்டும் இன்றி பணம் பல மடங்கு பெருக வேண்டும். இவையெல்லாம் சரிவர நடந்தால் தான் நம்முடைய பொருளாதார நிலையில் உயர்ந்து நல்ல நிலைக்கு வர முடியும்.

- Advertisement -

இவை அனைத்தையும் செய்ய பல தாந்த்ரீக பரிகார முறைகள் இருப்பினும், மிகவும் எளிமையாக அதே நேரத்தில் உடனே பலன் தரக் கூடிய ஒரு எளிமையான பரிகார முறை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம். இது வரை எந்த பரிகாரம் செய்தும் பலன் இல்லை என்பவர்களும் இந்த பரிகாரத்தின் மூலம் நல்ல பலனை பெறலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

பணத்தடை நீக்கி பணவரவை அதிகரிக்க

இந்த பரிகாரம் ஒரு தாந்திரீக பரிகாரம் தான். ஆகையால் நீங்கள் எந்த கிழமையில் வேண்டுமானாலும் தொடங்கலாம். முதலில் தாந்திரீக பரிகாரம் என்றால் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள். எந்த ஒரு வழிப்பாடும் பூஜை முறைகளும் இல்லாமல் செய்யக் கூடிய பரிகாரங்களை தான் நாம் தாந்த்ரீக பரிகாரங்கள் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

இந்த பரிகாரத்தை காலை ஆறிலிருந்து ஏழு, மாலை ஆறிலிருந்து ஏழு இந்த நேரத்திற்குள்ளாக மட்டும் தான் செய்ய வேண்டும். இது தான் இதற்குள்ள விதிமுறை. இந்த பரிகாரம் செய்ய முதலில் ஒரு அகல் விளக்கை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஐந்து கிராம்பு போடுங்கள். அத்துடன் இரண்டு கற்பூரம் இதற்கு சாதாரண கற்பூரத்தையும் பயன்படுத்தலாம் பச்சை கற்பூரத்தையும் பயன்படுத்தலாம்.

இதன் மேல் இரண்டு சொட்டு சுத்தமான பசு நெய் ஊற்றுங்கள். அதன் பிறகு இந்த அகல் விளக்கை உங்கள் வரவேற்பறை வைத்து பற்ற வையுங்கள். இந்த விளக்கை உள்ள கிராம்பு முற்றிலுமாக எரிய வேண்டும் அது எரியும் போது உங்கள் மனதில் பணத்தடை நீங்கி பணவரவு அதிகரிக்க வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு இந்த அகல் எடுத்து வைத்து விடுங்கள்.

- Advertisement -

இதே போல 45 நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். 45 நாட்களும் ஒரே ஆகலை பயன்படுத்தலாம் தவறில்லை. 45 வது நாள் ஏற்றிய பிறகு இந்த அகலை அப்புறப்படுத்தி விடுங்கள். பெண்கள் இந்த பரிகாரத்தை செய்யும் போது தங்களுக்கான மாத விடாய் காலம் முடிந்த பிறகு தொடர்ந்து செய்யலாம். அதிலும் எந்த தவறும் கிடையாது.

இதையும் படிக்கலாமே: பஞ்சபூத ஸ்தலங்களும் வழிபாட்டு முறையும்

இந்த பரிகாரத்தை செய்ய தொடங்கிய உடனே உங்களுக்கு இருக்கும் பணத்தடைகள் வீண் விரையும் அனைத்தும் குறைய தொடங்கி விடும். அது மட்டும் இன்றி பணவரவு அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அனைத்தும் உங்களைத் தேடி வரும். நீங்கள் அதை சரியான முறையில் பயன்படுத்தி முன்னேற்றம் அடையுங்கள். பணவரவு அதிகரிக்கக் கூடிய இந்த தாந்திரீக பரிகார முறையில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து பலன் அடையுங்கள்.

- Advertisement -