பணம் சேர ஜாதிக்காய் தீபம்

panam Jathikkai
- Advertisement -

பணம் என்பது இன்று ஒவ்வொருவருக்கும் இருக்கும் அவசிய தேவைகளில் ஒன்று தான். பணம் இல்லாமல் இப்போதைய காலக்கட்டத்தில் எதையும் நம்மால் செய்ய முடியாது. இந்த பணமானது நாம் எவ்வளவு தான் சம்பாதித்தாலும் வந்த வழி தெரியாமல் செலவழிந்து கொண்டே தான் இருக்கிறது. சம்பாதித்த பணம் கையில் தங்கி பெருகினால் தானே நம்மால் நிம்மதியாக இருக்க முடியும்.

அப்படி நாம் சம்பாதிக்கும் பணம் நல்ல முறையில் நம்மிடம் தங்கி செலவழியவும் பணம் அதிகமாக நம்மிடம் வருவதற்கும் பணத்தை ஈர்க்கக் கூடிய சக்தி நம்மிடம் இருக்க வேண்டும். அப்படியான ஒரு பண ஈர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய பரிகாரத்தை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

பண வரவு அதிகரிக்க தீபம்

இந்த தீப பரிகாரத்தை வியாழக்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். வியாழக்கிழமை குபேரர், குரு பகவான் இருவருக்கும் உகந்த நாள். இந்த பரிகாரத்தை நாம் குரு பகவானை மனதில் நினைத்து தான் செய்ய போகிறோம். குரு பார்க்கின் கோடி நன்மை அல்லவா. இப்போது இந்த பரிகாரம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இந்த பரிகாரத்திற்கு நீங்கள் ஒரே ஒரு ஜாதிக்காய் வாங்கிக் கொள்ளுங்கள். அதே போல் நல்லெண்ணெய் பச்சை கற்பூரம் வாங்கிக் கொள்ளுங்கள். வியாழக்கிழமை அன்று குரு ஹோரையில் இந்த பரிகாரத்தை செய்யுங்கள். இதற்கு காலையில் எழுந்து குளித்து முடித்த பிறகு உங்கள் பூஜை அறையில் சுத்தம் செய்து வைத்து விடுங்கள். அதன் பிறகு ஒரு கண்ணாடி பாட்டிலையும் சுத்தம் செய்து தயாராக வைத்து விடுங்கள்.

- Advertisement -

இப்போது நீங்கள் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து விட்டு நீங்கள் வாங்கி வைத்திருக்கும் ஜாதிக்காய் வலது கையில் வைத்து வடித்து கொள்ளுங்கள். அடுத்து உங்கள் இஷ்ட தெய்வம், குலதெய்வம், விநாயகர் அனைவரையும் மனதார நினைத்துக் கொள்ளுங்கள். இப்போது குரு பகவானை நினைத்து உங்கள் பணத்தட்டுப்பாடுகள் நீங்கி பணவரவு அதிகரிக்க வேண்டும் என்று மனதார வேண்டி கொள்ளுங்கள்.

நீங்கள் சுத்தம் செய்து வைத்த அதன் பிறகு நீங்கள் சுத்தம் செய்து வைத்த கண்ணாடி பாட்டிலில் இந்த ஜாதிக்காய் போட்டு விடுங்கள். இப்போது ஜாதிக்காய் மூழ்கும் அளவிற்கு வாங்கி வைத்திருக்கும் நல்லெண்ணெய் ஊற்றி விடுங்கள். மேலும் இதில் கொஞ்சம் பச்சைக் கற்பூரத்தையும் போட்ட பிறகு பாட்டிலை மூடி பூஜையறையில் வைத்து விடுங்கள்.

- Advertisement -

இது ஒரு வாரம் வரை பூஜை அறையில் இருக்க வேண்டும். அடுத்த வாரம் வியாழக்கிழமை அன்று எண்ணெயில் இருக்கும் ஜாதிக்காயை மட்டும் வெளியே எடுத்து போட்டு விடுங்கள். அதன் பிறகு இந்த எண்ணெயை கொண்டு தினமும் தீபம் ஏற்ற வேண்டும். தொழில் செய்பவர்கள் வியாபார ஸ்தலத்தில் இந்த தீபத்தை ஏற்றலாம். வீட்டில் குபேர தீபம் ஏற்றுபவர்கள் அந்த விளக்கில் இந்த எண்ணெய் ஊற்றி ஏற்றினால் மேலும் நல்ல பலனை பெறலாம்.

ஜாதிக்காய் குருபகவானுக்கு உகுந்த பொருளாக பார்க்கப்படுகிறது. அது மட்டும் இன்றி இதில் பணத்தை ஈர்க்கக் கூடிய தன்மை அதிகம் உண்டு. அதே போல் இதில் சேர்த்திருக்கும் பச்சை கற்பூரம் மகாலட்சுமி தாயாருக்கு உகந்தது. அதற்கும் பணத்தை ஈர்க்கும் சக்தி உண்டு. இவை இரண்டும் சேர்த்து ஏற்றப்படும் இந்த தீபம் பணவரவை உங்களுக்கு எடுத்துக் கொடுக்கும் தன்மை கொண்டது.

இதையும் படிக்கலாமே: சனிப்பெயர்ச்சி 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய பரிகாரங்கள்

இந்த தீபப் பரிகார முறையில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் வேண்டி தீபத்தை தொடர்ந்து ஏற்றி வாருங்கள். நிச்சயம் பணத்தட்டுப்பாடு இல்லாமல் பணவரவு அதிகரிக்கும் என்ற இந்த தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -