செல்வம் சேர முருகன் வழிபாடு

murugan money
- Advertisement -

இன்றைய காலத்தில் பணத்தின் தேவையானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பணம் இல்லாத வாழ்க்கை ஒரு நரக வாழ்க்கை எனும் அளவிற்கு காலம் மாறி விட்டது. அப்படியான இந்த சூழ்நிலையில் பணம் நம்மை தேடி வரவும் அதற்கான யோகத்தை நாம் பெறவும் சில தெய்வ வழிபாடுகள் உகந்ததாக சொல்லப்படுகிறது.

அந்த வகையில் முருகப்பெருமானை வழிபட்டால் நம்முடைய பண தேவைகள் அனைத்தும் பூர்த்தி அடையும் என்று சொல்லப்படுகிறது. அவரை எப்படி வணங்க வேண்டும் என்ற தகவலை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

பண வரவு அதிகரிக்க முருகப்பெருமான் வழிபாடு

இன்று உலக அளவிலும் பெரும்பாலான மக்கள் முருகப் பெருமானின் வழிபாட்டில் அதிக நம்பிக்கையுடன் ஈடுபட்டுள்ளார்கள். இதற்கு அவரின் அருளும் சக்கியும் தான் காரணம். முருகா என்று அழைத்த உடனே வந்து நிற்கும் அற்புதமான தெய்வம் அவர் அப்படியான அவரை நம்முடைய பணம் தேவை தீர எப்படி வணங்குவது என்று பார்க்கலாம்.

முருகப்பெருமானின் வழிபாடு என்றாலே அது செவ்வாய்க்கிழமை தான். அதிலும் செவ்வாய்க்கிழமையும் செவ்வாய் ஹோரையில் வழிபடுவது நல்லது. இந்த பரிகாரத்தை பொருத்த வரையில் நீங்கள் செவ்வாய்க்கிழமை காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணிக்குள் செய்துவிட வேண்டும்.

- Advertisement -

இந்த வழிபாட்டிற்கு முருகன் வள்ளி தெய்வானையுடன் இருக்கும் ஆலயத்திற்கு சொல்ல வேண்டும். தனியாக இருக்கும் முருகப்பெருமானிடம் இந்த வேண்டுதல் செய்யக் கூடாது. இந்த கோவிலுக்கு சென்று முருகப்பெருமானுக்கு பிடித்த செவ்வரளி பூவில் மாலை சூட்டி விடுங்கள். அடுத்து முருகப்பெருமானை பார்த்தவாறு ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைக்க வேண்டும்.

இப்போது இந்த தீபத்தை பார்த்தவாறு நீங்கள் அமர்ந்து கொள்ளுங்கள். இந்த தீபம் குறைந்தது முருகப் பெருமான் முன்பு ஒரு மணி நேரம் எரிய வேண்டும் .அதற்கு ஏற்றார் போல் நெய் திரி போன்றவற்றை கொண்டு செல்லுங்கள். இப்போது இந்த தீபத்தின் முன் அமர்ந்து ஓம் சரவண பவ என்ற இந்த நாமத்தை நீங்கள் சொல்ல வேண்டும். ஒரு மணி நேரமும் அந்த தீபத்தை பார்த்தவாறு இந்த நாமத்தை சொல்ல வேண்டும்.

- Advertisement -

ஒரு மணி நேரம் கழித்து முருகப்பெருமானை வணங்கி விட்டு வீட்டிற்கு வந்து விடுங்கள் இவ்வளவு தான் வழிபாடு. இந்த பரிகாரத்தை நீங்கள் வருடத்திற்கு இரண்டு முறை செய்தாலே போதுமானது. உங்களுடைய பண தேவைகள் அனைத்தும் நீங்கி பணவரவை அதிகரிக்க கூடிய தன்மை இந்த வழிபாட்டிற்கு உண்டு என்று சொல்லப்படுகிறது.

இந்த வழிபாட்டில் முக்கியமானது முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் இருக்கும் ஆலயம். அடுத்து நீங்கள் அந்த தீபத்தின் முன்பு ஒரு மணி நேரம் தீப ஓளியை பார்த்தபடி சொல்லும் நாமம். ஒரு மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து தீபத்தை பார்த்து இப்படி சொல்வது கொஞ்சம் சிரமமாகத் தான் இருக்கும். ஆனால் இதை செய்தால் பலன் பல மடங்கு உண்டு என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இதையும் படிக்கலாமே: நகை அடமானம் போகாமல் இருக்க

ஆகையால் நம்பிக்கையுடன் முருகப்பெருமானை இப்படி வழிபாடு செய்து பணவரவை தாராளமாக பெற்று நல்ல செல்வ செழிப்புடன் வாழும் நிலையை அடையலாம் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -