பணம் தரும் குருபகவான் வழிபாடு

guru
- Advertisement -

குருவின் அருள் ஆசி இருந்தால்தான் நம்முடைய வீடு செல்வ செழிப்போடு இருக்கும். குரு பார்க்க கோடி நன்மை என்று சொல்லுவார்கள். உங்களுக்கு வருமானத்தில் பிரச்சனையா. கடன் தொல்லையால் அவதிப்பட்டு வருகிறீர்களா. உங்களுக்குத்தான் முதலில் அந்த குரு பகவானின் அருள் ஆசி பரிபூரணமாக கிடைக்க வேண்டும்.

குடும்பத்தில் இருக்கும் பலவிதமான பணப் பிரச்சனைகளில் இருந்தும் விடுபட, வியாழக்கிழமை குரு பகவானை நினைத்து எப்படி வழிபாடு செய்வது, என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவலை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

வியாழக்கிழமை குரு பகவான் வழிபாடு

பொதுவாகவே படிக்கின்ற பிள்ளைகளை வியாழக்கிழமை கொண்டைக்கடலை மாலையை கட்டி குருபகவானுக்கு போட சொல்லுவார்கள். உங்களுக்கு பணம் சார்ந்த பிரச்சனை இருந்தாலும், நீங்கள் வியாழக்கிழமை கொண்டை கடலை மாலையை கோர்த்து கொண்டு போய் குரு பகவானுக்கு போடலாம். குரு பகவானுக்கு மஞ்சள் நிற கலர் ரொம்ப ரொம்ப சிறப்பு.

ஆகவே மஞ்சள் நிற பூக்களை குரு பகவானுக்கு வாங்கி செல்வது நல்லது. கூடவே சேர்த்து வியாழக்கிழமை என்றால் இனிமேல் முல்லை பூவையும் வாங்கிக் கொள்ளுங்கள். குரு பகவானுக்கு உரிய பூக்களில் இந்த முல்லை பூவும் ஒன்று.

- Advertisement -

வியாழக்கிழமை தோறும் முல்லை பூ சரத்தை வாங்கி, குருபகவானை நினைத்து உங்கள் நிலை வாசல் படியில் தொங்க விட்டால் போதும். உங்களுடைய வீட்டிற்குள் குரு பகவான் நிரந்தரமாக குடி வந்து விடுவார். நிலை வாசலில் மாட்ட வேண்டும் என்றால் குறைந்தது இரண்டு முழம் பூவிலிருந்து, மூன்று முழம் பூ நமக்கு தேவைப்படும்.

அவ்வளவு பூ எங்களால் வாங்க முடியாது எங்களுடைய நிதி நிலைமை ரொம்பவும் குறைவாக இருக்கிறது என்பவர்கள், கொஞ்சமாக முல்லை பூ வாங்கி நிலை வாசலுக்கு நடுவே தொங்கவிட்டு விடுங்கள் போதும். முடியாதவர்கள் நிலை வாசலுக்கு இரண்டு பக்கத்தில் ஆவது இந்த முல்லைப் பூக்களை கொஞ்சம் கொஞ்சமாக வையுங்கள்.

- Advertisement -

குரு பகவானை நினைத்து வியாழக்கிழமை நிலை வாசல் படியில் முல்லை பூவை வைத்து, குரு பகவானை வீட்டிற்குள் அழைத்தால் போதும். உங்களுடைய வீட்டிற்குள் குரு சந்தோஷமாக வந்துவிடுவார். பிறகு கோடி கோடியாக கொட்டிக் கொடுப்பார். அதில் எந்த சந்தேகமும் கிடையாது.

உங்களால் முடிந்தால் நிலை வாசலில் கொஞ்சமாக இடம் இருக்கிறது எனும் பட்சத்தில் அந்த இடத்தில் முல்லைச் செடியை வைத்து வளர்க்கலாம். முல்லை செடி தொல்லை நீக்கும் என்ற ஒரு வாசகத்தை நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள். முல்லைச் செடியை அப்படியே படர விட்டீர்கள் என்றால் உங்கள் வீட்டு வாசலில் முன்பு கொடியாக படர்ந்து விடும்.

இதையும் படிக்கலாமே: கடனாக கொடுத்த பணம் சீக்கிரம் திரும்ப வர விநாயகர் வழிபாடு

இந்த கொடி நிச்சயம் உங்கள் வீட்டில் இருக்கும் தொல்லைகளை தீர்த்து வைக்கும் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது. வாய்ப்பு உள்ளவர்கள் இதையும் பின்பற்றி பாருங்கள். நிச்சயம் குடும்பத்தில் இருக்கும் பணக்கஷ்டம் நீங்கும். செல்வ செழிப்பு அதிகரிக்கும். குரு பகவானின் அருள் ஆசியை பரிபூரணமாக பெற இந்த ஆன்மீகம் சார்ந்த வழிபாடு எல்லோருக்கும் பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -