நமக்கெல்லாம் சொந்த வீடு வாங்கும் யோகமே இல்லை என்று சோர்ந்து விடாமல், இந்த தண்ணீரை தெளித்து வாருங்கள். சொந்த வீட்டில் வாழ யோகம் உங்களை தேடி வரும்.

grahapravesm lord murugan
- Advertisement -

காக்கா, குருவிகளுக்கு கூட பொழுது அடைந்தால் தங்க ஒரு கூடு இருக்கும். அவைகள் கூட தான் கட்டிய கூட்டில் தான் தங்குகின்றன. அடுத்த கூட்டில் போய் தங்குவதில்லை. அப்படி இருக்கும் பொழுது நிதம் வாடகை வீட்டில் தத்தளித்து கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு நாளாவது சொந்த வீட்டில் வாழ்ந்து விட மாட்டோமா என்று ஏக்கம் இருப்பது நியாயம் தானே. அப்படியானவர்களின் துயரத்தை போக்கவும், சொந்த இடம் வாங்கி அதில் வீடு கட்ட முடியாமல் இருப்பவர்களும், கட்டிய வீட்டை பாதையிலே நிறுத்தி மேற் கொண்டு தொடர முடியாமல் இருப்பவர்கள் என அனைவருமே இந்த ஒரு வழிபாட்டை செய்தால் நிச்சயமாக சொந்த வீடு வாங்கும் யோகமானது அவர்களை தேடி வரும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன வழிபாடு எப்படி செய்ய வேண்டும் என்பதை எல்லாம் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஒருவர் சொந்த வீட்டில் வாழ வேண்டும் என்றால் அவருக்கு செவ்வாய் கிரகத்தின் அருளும், ஆசீர்வாதமும் இருக்க வேண்டும். இத்துடன் வீடு சம்பந்தமான அனைத்திற்கும் முருகப்பெருமானை வழிபடும் பொழுது அதற்கான தீர்வும் விரைவில் கிடைக்கும். இந்த இரண்டுமே நமக்கு கிடைக்க வேண்டும் என்றால் செவ்வாய் கிழமையில் முருகப்பெருமானனை வழிபாடு செய்ய வேண்டும். அது எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

முருகப்பெருமான் அறுபடை வீடுகளிலே திருச்செந்தூரில் செவ்வாயாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இதை செய்வதற்கு ஒரு முறை திருச்செந்தூர் சென்று வர வேண்டும். அங்கு சென்று செந்தில் ஆண்டவரை வணங்கினால் உங்கள் வேண்டுதல் விரைவில் நடக்கும் என்று சொல்லப்படுகிறது.

கோவில் உள்ளே சென்றது முதல் இறைவனை தரிசிக்கும் ஒவ்வொரு நொடியும் ஓம் சரவண பவ என்ற நாமத்தை உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும். கோவிலுக்கு சென்றவுடன் திரும்பி விடக் கூடாது. கோவிலில் ஆறு மணி நேரம் தங்க வேண்டும். கோவிலை சுற்றி இருக்கும் இடங்களில் தங்கக் கூடாது. கோவில் உள்ளேயே ஆறு மணி நேரம் இருந்த பிறகு, ஒரு பாட்டிலில் கடற்கரையில் இருந்து தண்ணீரை, வீட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

- Advertisement -

இந்த தண்ணீரை வீட்டிற்கு கொண்டு வந்து, இத்துடன் மஞ்சள் தூள் கலந்து முருகப் பெருமானிடம் வைத்து வேண்டி வாங்கிய பிறகு வீடு கட்ட வேண்டிய நிலம், கட்டிய வீடு பாதியிலே நின்ற இடம் போன்றவற்றில் எல்லாம் இந்த தண்ணீரை தெளித்து விடுங்கள். நீங்கள் நிலம், வீடு எதுவும் கட்டவில்லை இனி தான் வாங்க வேண்டும் என்றால், இந்த தண்ணீரை நீங்கள் இருக்கும் வீட்டிலே தெளித்து விடுட்டால் போதும். இதை ஆறு வாரம் தொடர்ந்து செய்ய வேண்டும் எனவே தண்ணீரை கொண்டு வரும் போது கொஞ்சம் அதிகமாகவே கொண்டு வந்து விடுங்கள். இந்த நிச்சயம் வேண்டுதல் பலிக்கும் என்று சொல்லப்படுகிறது.

திருச்செந்தூர் சென்று வழிபட முடியாதவர்கள் வீட்டிலே இருந்தும் வழிபடலாம். அதற்கும் செவ்வாய்க்கிழமை அன்று காலையில் எழுந்து குளித்து முடித்து சுத்தப்படுத்தமாக பூஜை அறையில் முருகர் படத்தை எடுத்து துடைத்து சந்தனம், குங்குமம் பொட்டு வைத்து வாசனை திரவியங்கள், அரளிப் பூ இவை எல்லாம் வைத்து வழிபாடு செய்து வர வேண்டும். நீங்கள் வேல் வைத்து வழிபடுவதாக இருந்தால் ஒரு தாம்பாளத்தில் பச்சரிசியை கொட்டி அதன் மேல் வேல் வைத்து கொள்ளுங்கள். வேலுக்கும் சந்தனம், குங்குமம் வைத்து அதையும் வைத்து  108 முறை ஓம் சரவண பவ என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும். இந்த வழிபாட்டிலும் உங்களுக்கு சொந்த வீடு வாங்கும் யோகமானது கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: தோஷங்கள் தீர்ந்து சந்தோஷம் பெருக 12 ராசிக்காரர்களும் வணங்க வேண்டிய விநாயகர்கள் யார்? சங்கடங்கள் தீர்க்கும் விநாயகரின் ரகசியங்கள்!

சொந்த வீடு நிலம் வாங்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் செவ்வாய்க்கிழமையில் முருகப் பெருமானை இப்படி வணங்கி சொந்த வீடு கட்டுவதற்கான முயற்சியை நீங்கள் எடுக்கும் பொழுது அதில் நிச்சயம் வெற்றியை மட்டுமே காண்பீர்கள்.

- Advertisement -