பணக்கஷ்டம் தீர இப்படி எல்லாம் கூடவா பரிகாரம் இருக்குது! இதுவரை கேள்விப்படாத விசித்திர பரிகாரங்களில் சில உங்களுக்காக.

dog
- Advertisement -

பணம் கஷ்டம் தீர ஆன்மீகத்திலும் தாந்திரீகத்திலும் கோடிக்கணக்கான பரிகாரம் கொட்டி கிடைக்கின்றது. ஆனால் அந்த பரிகாரங்களை செய்பவர்கள் எல்லோரும் பணக்காரர்கள் ஆகிவிடுகிறார்களா. நிச்சயம் கிடையாது. பரிகாரத்தை முழு நம்பிக்கையோடு செய்பவர்களுக்கு மட்டுமே முழு பலன் கிடைக்கும். அந்த வரிசையில் உங்களுக்கு பரிகாரத்தின் மீது நம்பிக்கை இருந்தால் பின் சொல்லக்கூடிய பரிகாரங்களை படித்து பாருங்கள். உங்களுக்கு எது செட் ஆகுமோ உங்களுக்கு எது எளிமையாக இருக்குமோ அதை பின்பற்றி பலன் பெறலாம். நம்பிக்கை இருந்தால் மட்டுமே பரிகாரங்கள் பலன் தரும் என்ற தகவலோடு பதிவிற்குள் தொடர்ந்து பயணம் செய்வோம் வாருங்கள்.

பணம் தரும் சில விசித்திர பரிகாரங்கள்:
குழந்தைக்கு முதல் முதலில் பல் விழும் அல்லவா. அந்த குழந்தைக்கு விழும் முதல் பல்லை எடுத்து நன்றாக சுத்தம் செய்துவிட்டு வெள்ளி தாயத்தில் போட்டு அணிந்து கொண்டால், சகல ஐஸ்வர்யமும் வசியமாகும் என்று சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

வீதியில் இருக்கும் நாய் பிஸ்கட் அல்லது ரொட்டி எதையாவது சாப்பிட்டுக் கொண்டிருக்கும் அல்லவா. அப்படி அந்த நாய் சாப்பிடும்போது அது சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொருளை பாதையில் கீழே விட்டு விட்டு போய்விடும். நாய் சாப்பிட்டு மீதம் வைத்த அந்த ரொட்டியையோ அல்லது பிஸ்கட்டையோ கொண்டு வந்து உங்களுடைய வீட்டு காம்பவுண்டுக்கு உள்ளே மண்ணைத் தோண்டி புதைத்து வைத்தால் வீட்டில் இருக்கும் வறுமை நீங்குமாம். இதை யாராவது நம்புவீர்களா. நம்பிக்கை இருந்தால் முயற்சி செய்து பாருங்கள்.

வெள்ளிக்கிழமை அன்று சுக்கிர ஓரையில் அத்தி மரத்தின் வேரை எடுத்துக் கொள்ளவும். அந்த வேருக்கு மஞ்சள் குங்குமப்பொட்டு வைத்து வெள்ளி தாயத்தில் கோர்த்து மகாலட்சுமி தாயின் பாதத்தில் வைத்து ‘ஓம் மகாலட்சுமி தாயே போற்றி’ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லி அந்த தாயத்தை கையிலோ அல்லது கழுத்திலோ கட்டிக் கொண்டால் உங்களுக்கு தீராத வறுமையும் தீரும். செல்வ கடாட்சம் பெருகும்.

- Advertisement -

வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோதுமையை வாங்கி உங்கள் கையால் தானம் கொடுக்க வேண்டும். யாருக்கு வேண்டும் என்றாலும் இந்த கோதுமை தானம் செய்யலாம். இந்த கோதுமை தானம் உங்களை வாழ்க்கையில் செல்வந்தர்களாக உயர்த்தும்.

இதையும் படிக்கலாமே: தங்கத்தை வாங்க காசு சேர்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் முதலில் இதை வாங்கி வையுங்கள். கிடு கிடுவென காசு சேர்ந்து மலை போல தங்க நகைகளை வாங்கி குவிக்கும் யோகம் வரும்.

வெள்ளை குன்றின் மணி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அதை வாங்கி 11 என்ற எண் கணக்கில் உங்களுடைய பர்ஸிலோ பாக்கெட்டிலோ வைத்துக் வைத்துக்கொண்டு எங்கு சென்றாலும் நீங்கள் மதிக்கப்படுவீர்கள். நீங்கள் சொல்லும் பேச்சை எதிராளிகள் அப்படியே கேட்பார்கள். பெயர் புகழ் பதவி உங்களை வந்து சேருவதற்கு இந்த எளிய பரிகாரம் உதவியாக இருக்கும்.

- Advertisement -