தங்கத்தை வாங்க காசு சேர்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் முதலில் இதை வாங்கி வையுங்கள். கிடு கிடுவென காசு சேர்ந்து மலை போல தங்க நகைகளை வாங்கி குவிக்கும் யோகம் வரும்.

mahalakshmi gold
- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் சம்பாதிப்பதை விட கடினம் ஒரு குண்டுமணி தங்கத்தை வாங்குவது. தங்கம் விற்கும் விலை அப்படி போய்க் கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் நாம் காசு சேர்த்து தங்கம் வாங்க ஆசைப்பட்டாலும் கூட நிறைவேறுவது என்பது பெரிய காரியமாக தான் உள்ளது. ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தங்கம் வாங்க வேண்டும் என நினைத்து இதில் காசு சேர்த்து வைக்கும் போது பணம் பல மடங்கி பெருகி சேர்ந்து நகை வாங்கக் கூடிய யோகத்தை கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது.

தங்கம் வாங்க வேண்டும் என நினைத்து காசு சேர்க்க ஆரம்பித்தால் அது எந்த காரணத்தில் கொண்டும் தடையில்லாமல் சேர்க்க வேண்டும். அது மட்டுமின்றி தங்கம் வாங்க வேண்டும் என நினைத்து சேர்த்த காசில் தங்கம் மட்டுமே வாங்க முயற்சி செய்யுங்கள். இதெல்லாம் தங்கம் நம்மை வந்து அடைய ஒரு சில ஆன்மீகம் கூறும் வழிகள் என்றே சொல்லலாம்.

- Advertisement -

பணம் அதிகமாக சேர சுரை குடுவை
நாம் காசு சேர்க்க பயன்படுத்தும் அந்த பொருளானது சுரை குடுவை. இதற்கு வற்றாத செல்வத்தை தரக்கூடிய அட்சய பாத்திரம் என்ற ஒரு பெயரும் உண்டு. அட்சய பாத்திரத்தில் எப்படி ஒரு பொருள் போடும் போது பல மடங்கு பெருகிக் கொண்டே இருக்கிறதோ, அது போல இந்த சுரை குடுவையில் சேர்க்கும் சேமிப்பும் பல மடங்கு பெருகும் என்று சொல்லப்படுகிறது. இந்த சுரைக்குடுவையானது சுரைக்காயில் இருந்து தயாரிக்கப்படுவது. இதற்கு ஒரு வரலாற்று உண்டு.

அதாவது சுரைக்காய் சித்தர் தன் வாழ்நாள் முழுவதிலும் சுரைக்காய் மட்டுமே உண்டு உயிர் வாழ்த்ததால் அவரின் பக்தியை கண்டு மகிழ்ந்த தெய்வம் அவருக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டதும், நான் உண்ட இந்த சுரக்காயை யார் எல்லாம் பயன்படுத்துகிறார்களோ அவர்களுக்கு வற்றாத செல்வத்தை தர வேண்டும் என்று கேட்டதாக சொல்லப்படுகிறது. ஆகையால் தான் சுரைக்காய் பயன்படுத்தி செய்யப்படும் இந்த குடுவை மிகவும் விசேஷமானதாகவும், தெய்வீக சக்தி நிறைந்ததாகவும் இருக்கிறது.

- Advertisement -

இந்த சுரை குடுவையில் பணத்தை சேமிப்பதற்கு முன்பாக இதில் நவதானியங்களை சேர்த்துக் கொள்ளுங்கள். நவதானியங்கள் கொஞ்சமாக இருந்தால் கூட போதும். இத்துடன் பச்சைக் கற்பூரம், ஏலக்காய், கிராம்பு போன்ற மகாலட்சுமி தாயாருக்கு உகந்த பணத்தை ஈர்க்கும் பொருள்களை எல்லாம் இதில் போட்டு விட்டு அதன் பிறகு நீங்கள் இதில் பணத்தை சேர்க்க ஆரம்பிக்க வேண்டும்.

இந்த குடுவையை பூஜையறையில் வைத்து பூஜித்து பணத்தை போட்டு வாருங்கள். இந்த குடுவையில் நீங்கள் போடும் பணத்தை எடுத்து செலவு செய்யக் கூடாது இது மிகவும் முக்கியம். இதில் சேர்க்கும் பணம் சேமிப்பை நாம் எடுக்காமல் இருந்தால், இதில் சேமிக்கும் பணம் பல மடங்காக பெருகிக் கொண்டே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் குறிப்பிட்ட அளவு பணம் சேர்ந்த பின்பு அந்த பணத்தை கொண்டு தங்கம் வெள்ளி மட்டும் வாங்குங்கள் வேறு எதையும் வாங்க வேண்டாம். அதே போல் ஒரு முறை பணத்தை எடுத்த பிறகு மீண்டும் நவதானியம் மற்ற பொருட்களை எல்லாம் போட்டு பூஜித்த பிறகு தான் பணத்தை சேமிக்க ஆரம்பிக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: தங்க நகைகளை தெரியாமல் கூட இந்த இடத்தில் வைக்காதீர்கள் ஸ்வர்ணம் சேரவே சேராது என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது!

இப்படி சேமிக்கும் போது இந்த பரிகாரத்தின் மூலம் குடுவையில் அதிகப்படியான பணம் சேர்த்து நீங்கள் தங்கம் வெள்ளி வாங்குவதற்கான யோகத்தை உங்களுக்கு கொடுக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த சுரை குடுவையை பயன்படுத்தி பணத்தை சேமிக்கும் இந்த பரிகார முறையில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -