மாட்டுப் பொங்கல் அன்று ஏற்ற வேண்டிய தீபம்

Panam Kaviya vilakku
- Advertisement -

நாளைய தினம் மாட்டுப் பொங்கல். உழவனுக்கும் உழவுத் தொழிலுக்கும் உறுதுணையாக இருக்கக் கூடிய கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக நாம் கொண்டாட கூடிய ஒரு பண்டிகை. நம்முடைய இந்த கலாச்சாரத்தில் தான் கால்நடைகளை கூட போற்றி வணங்கக் கூடிய அற்புதமான வழிபாட்டு முறைகள் உள்ளது.

இந்த நாளில் வீட்டில் கால்நடைகளை வைத்திருப்பவர்கள் அவர்களுக்கு பூஜை செய்து வழிபடுவார்கள். அவைகளுக்கு உணவு படைத்து நாளைய தினத்தை வெகு சிறப்பாக கொண்டாடுவார்கள். இதன் மூலம் அவர்களுடைய வாழ்க்கை நல்ல முறையில் மேம்படும் என்பது ஐதீகம். இது பெரும்பாலும் கிராமப்புறங்களில் நடக்கும்.

- Advertisement -

நகர்ப்புறங்களில் இன்று பலருக்கு பசுக்களை பார்ப்பதே அரிதாக இருக்கிறது. அப்படி இருக்கையில் எப்படி இந்த பூஜைகளை செய்வது? இந்த ஒரு குறையை போக்க நம்முடைய வாழ்க்கையில் செல்வ நிலையை உயர்த்திக் கொள்ள நாளைய தினம் என்ன செய்ய வேண்டும் என்பதை எல்லாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

மாட்டுப் பொங்கல் அன்று சொல்ல வேண்டிய மந்திரம் ஏற்ற வேண்டிய தீபம்

நாளைய தினம் பசு வைத்திருப்பவர்கள் அதற்கு வழிபாடு செய்வார்கள். பசு மாடு இல்லாதவர்கள் எங்கேனும் அவைகளை பார்க்க நேர்ந்தால் உங்களால் முடிந்த ஏதேனும் ஒரு உணவுப் பொருளை அவற்றுக்கு உணண வாங்கி கொடுங்கள். இது முப்பது முக்கோடி தேவர்களின் அருளையும் உங்களுக்குப் பெற்றுத் தரும்.

- Advertisement -

இவையெல்லாம் செய்ய முடியாதவர்கள் இந்த தீபத்தை வீட்டில் ஏற்றலாம். அது தான் அற்புதமான பலன்களை தரக்கூடிய பஞ்ச காவிய விளக்கு. இந்த விளக்கை பற்றி பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்திருக்கும். இது முழுவதும் பசுவின் உடைய ஐந்து பொருட்களால் தயாரிக்கப்படும் விளக்கு.

பசுவின் நெய், பால், சாணம், தயிர், கோமியம் இந்த ஐந்து பொருட்களால் தயாரிக்கப்படும் விளக்கு தான் இந்த பஞ்ச காவிய விளக்கு. நாளை தினம் உங்கள் பூஜை அறையில் ஒரு தீபமாகவோ அல்லது ஐந்து தீப்பமாகவோ இதை ஏற்ற வேண்டும். இதில் ஐந்து தீபம் ஏற்றுவது நல்ல பலனை தரும். இந்த தீபத்தை ஏற்றிவிட்டு தீபத்தின் முன் அமர்ந்து கீழ் வரும் இந்த மந்திரத்தை சொல்லுங்கள்.

- Advertisement -

மந்திரம்

ஓம் பசுபதயேசு வித்மஹே
மஹா தேவாய தீமஹி
தந்தோ பசுதேவி ப்ரசோதயாத்

என்ற இந்த மந்திரத்தை குறைந்த பட்சம் ஐந்து முறையும் அதிகபட்சம் உங்களால் எத்தனை முறை சொல்ல முடியுமோ அத்தனை முறை சொல்லுங்கள். நீங்கள் இதை சொல்ல சொல்ல உங்களுடைய செல்வ நிலை உயரும் என்பதில் சந்தேகமே இல்லை.

இதையும் படிக்கலாமே: அரசாங்க வேலை கிடைக்க பரிகாரம்

இந்த முறையில் நாளை தினம் தீபம் ஏற்றி மந்திரத்தை சொல்லி வழிபாடு செய்பவர்களுடைய வாழ்க்கையில் செல்வ வளம் பெருகும். இன்று நீங்கள் எத்தகைய துன்பத்தில் இருந்தாலும் அந்த நிலை மாற்றக் கூடிய தன்மை இந்த தீபத்திற்கு மந்திரத்திற்கு உண்டு. இந்த வழிப்பாட்டு முறையில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் செய்து நல்ல பலனை பெறுங்கள்.

- Advertisement -