பண வரவிற்கு புத்தாண்டு அன்று பார்க்க வேண்டியது

manthiram wakeup
- Advertisement -

புத்தாண்டு இந்த வார்த்தையை சொல்லும் போதே அனைவருக்குள்ளும் ஒரு மகிழ்ச்சி எழும். நமக்கெல்லாம் தமிழ் வருட பிறப்பு தான் புத்தாண்டு என்றாலும், இப்போது ஆங்கில புத்தாண்டை தான் அனைவரும் விமர்சையாக கொண்டாடுகிறார்கள். புத்தாண்டு அன்று நமக்கு பிடித்தவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்கள்.

அது மட்டும் இன்றி இந்த புத்தாண்டில் பலரும் பலவிதமான புதிய செயல்களை தொடங்குவார்கள். அது தங்களுடைய நடைமுறை வாழ்க்கையின் மாற்றமாக இருக்கட்டும் அல்லது பணம் , பணி சார்ந்த விஷயமாகவும் இருக்கலாம். இதற்குக் காரணம் புத்தாண்டு அன்று தொடங்கும் எதுவும் அந்த வருடம் முழுவதும் நல்ல முறையில் தொடரும் என்பது தான்.

- Advertisement -

அந்த வகையில் புத்தாண்டு அன்று காலையில் நாம் செய்யப் போகும் இந்த ஒரு செயலானது வரும் வருடம் முழுவதும் நமக்கு பணம் வரவை தாராளமாக வர செய்யும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

புத்தாண்டு காலையில் கண்விழித்ததும் பார்க்க வேண்டியது

நம்மில் பலருக்கும் காலையில் எழுந்தவுடன் முதலில் கண்விழித்து பார்ப்பது நல்ல விஷயமாக இருக்க வேண்டும் என்று நினைப்பதுண்டு. இதில் பெரும்பாலானவர்கள் பெரிய நம்பிக்கையே வைத்திருக்கிறார்கள். அது போல புத்தாண்டு அன்று காலையில் இதை பார்த்தால் பணவரவு அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. அது என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

புத்தாண்டுக்கு முந்தைய நாள் அதாவது ஞாயிற்றுக்கிழமை இரவு உங்களுடைய வீட்டில் பணிகள் எல்லாம் முடிந்த பிறகு இரவு படுக்கை அறையில் அமர்ந்து இதை செய்ய வேண்டும். அதற்கு ஒரு பச்சை நிற பேனாவை எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்து உங்கள் இரண்டு கைகளையும் சூடு வரும் படி நன்றாக தேய்த்து உங்கள் முகத்தில் ஒற்றி எடுங்கள். அதன் பிறகு கட்டை விரலின் கீழ் பகுதியில் ஸ்ரீம் பிரீஸ் (Shreem Brzee) என்ற மகாலட்சுமி தாயாரின் பீஜ மந்திரத்தை எழுத வேண்டும்.

இதை வலது கை, இடது கை இரண்டிலும் கூட எழுதலாம். ஒரு கையில் நாம் எழுதிக் கொண்டு மற்றொரு கையில் நம் வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லி எழுத சொல்லலாம். இதையே வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் கூட எழுதிக் கொள்ளலாம். இதை எழுதிய பிறகு எத்தனை முறை இந்த வார்த்தையை உங்களால் சொல்ல முடியுமோ அத்தனை முறை மனதார சொல்லிய பிறகு உறங்கி விடுங்கள்.

- Advertisement -

மறுநாள் காலையில் கண் விழித்தவுடன் உங்கள் கைகளை பார்த்து அதில் எழுதி உள்ள இந்த மந்திரத்தை மறுபடியும் மனதார மகாலட்சுமி தாயாரை நினைத்துக் கொண்டு சொல்லுங்கள். காலையில் கண் விழித்ததும் உள்ளங்கையை பார்த்தாலே நல்லது. ஏனெனில் உள்ளங்கையில் மகாலட்சுமி தாயார் வாசம் செய்வதாக ஐதீகம் உண்டு.

இதையும் படிக்கலாமே: கடன் தீர அதி சக்தி வாய்ந்த தேய்பிறை பஞ்சமி பரிகாரம்

அத்துடன் சேர்ந்து தாயாருக்கு உகந்த இந்த மந்திர வார்த்தை யை சொல்லும் போது இந்த வருடம் முழுவதும் பணவரவிற்கு பஞ்சம் இருக்காது என்று சொல்லப்படுகிறது. இதை தினமும் இரவு உறங்கும் முன்பு கூட செய்யலாம் தவறு கிடையாது. மகாலட்சுமி தாயார் என்றாலே பணம் வரவு தான். அவரை நினைத்து செய்யப்படும் இந்த ஒரு காரியம் நல்ல பணவரவை ஏற்படுத்தி தரும் என்று சொல்லப்படுகிறது. இதில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் செய்து பலன் அடையலாம்.

- Advertisement -