பண வரவு அதிகரிக்க வாராகி அன்னை வழிபாடு

varahi sembaruthi cash
- Advertisement -

நம்முடைய துன்பங்கள் கடன் பிரச்சனைகள் காரிய தடைகள் அனைத்தும் நீங்கி நல்ல முறையில் வாழ வாராகி அன்னை வழிபாடு துணை நிற்கும். ஆகையால் தான் இன்று பெரும்பாலானோர் வாராகி அன்னை வழிபாட்டை மேற் கொள்கிறார்கள். இந்த வாராகி அண்மையை பஞ்சமி திதியில் வழிபாடுவது செய்வது மிகவும் சிறந்தது.

அதுவும் நம்முடைய செல்வ வளத்தை பெருக்கிக் கொள்ளவும் வாழ்வில் முன்னேற்றங்களை மேற் கொள்ளவும் வளர்பிறை பஞ்சமி வழிபாடு மிகவும் சிறந்தது. அத்தகைய அற்புதமான இந்த வளர்பிறை பஞ்சமியானது உழவர் திருநாளாம் தை திருநாள் அன்று வந்திருப்பது பல விசேஷ பலன்களை தரக்கூடியதாய் அமையும்.

- Advertisement -

அத்தகைய விசேஷமான இந்த நாளை தவிர விடாமல் வாராகி அன்னையை இந்த முறையில் வழிபாடு செய்தால் நம்முடைய கடன் பிரச்சனைகள் தீர்வதோடு காரியத்தடை நீங்கி பணவரவு அதிகரித்து கோடீஸ்வர யோகத்தையும் பெறலாம். இத்தனை பலன்களை தரக் கூடிய அன்னை எப்படி வழிபாடு செய்வது என்று ஆன்மிகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கோடீஸ்வர யோகம் பெற வாராகி அன்னை வழிபாடு

இந்த வருடத்தின் வளர்பிறை பஞ்சமியானது தைத்திருநாளோடு வந்திருப்பது மிகவும் விசேஷம். இந்த பஞ்சமி திதி திங்கட்கிழமை காலை 10 மணி முதல் செவ்வாய்க்கிழமை காலை 7:30 வரை உள்ளது. ஆகையால் வாராகி அம்மன் வழிபாடு திங்கட்கிழமை மாலையில் செய்வது சிறந்தது. அந்த நேரத்தில் வழிபட முடியாதவர்கள் செவ்வாய்க்கிழமை காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் வழிபாடு செய்யலாம்.

- Advertisement -

இந்த வழிபாடு செய்ய உங்கள் வீட்டில் வாராகி அன்னை படம் சிலை எது இருந்தாலும் மஞ்சள் குங்குமத்தால் ஐந்து பொட்டுகளை கட்டாயமாக வைத்து விடுங்கள். படம் இல்லாதவர்கள் விளக்கில் ஐந்து பொட்டை வைத்து வேண்டும். அன்றைய தினம் ஐந்து முக தீபம் தான் ஏற்ற வேண்டும். அப்படி ஏற்ற முடியாதவர்கள் ஐந்து சிறிய அகல் விளக்கை எடுத்து ஐந்து தீபமாக ஏற்றலாம்.

அடுத்து ஐந்து சிகப்பு நிற ஒற்றை செம்பருத்தி பூவின் இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த செம்பருத்திப் பூவுக்கும் இலைக்கும் பணத்தை ஈர்க்கக் கூடிய தன்மை உண்டு. அதுமட்டுமின்றி இந்த மலர் வாராகி அன்னைக்கு மிகவும் பிடித்ததாக சொல்லப்படுகிறது. இந்த செம்பருத்தியின் ஒவ்வொரு இலையிலும் மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

நீங்கள் ஐந்து முக விளக்கு வைத்திருந்தால் ஒரு தட்டில் ஐந்து செம்பருத்தி இலையும் வைத்து நடுவில் விளக்கை வைக்க வேண்டும். ஐந்து விளக்காக எடுத்திருந்தால் ஒவ்வொரு இலையின் மீது ஒரு விளக்கை வைத்து ஏற்றுங்கள். இதற்கு முடிந்த வரையில் நெய் தீபம் ஏற்றுங்கள். முடியாதவர்கள் ஒரே ஒரு தீபமாவது நெய் ஏற்றி ம ஏற்றுங்கள். பஞ்சமுக தீபம் ஏற்றுபவர்கள் இரண்டு சொட்டு நெய்யாவது அதில் ஊற்ற வேண்டும்.

இப்போது அன்னைக்கு நெய்வேத்தியமாக கிழங்கு வகைகள், பழ வகைகளில் மாதுளை அண்ணாச்சி போன்றவற்றை வைக்கலாம். உணவாக சமைத்து வைக்க விருப்பப்படுவார்கள் கருப்பு உளுந்து அல்லது நவதானியங்களாலான உணவையும் படைக்கலாம். எந்த உணவை படைத்தாலும் ஒரு துண்டு வெல்ல கட்டியை வைக்க கட்டாயமாக வேண்டும். இது தான் மிகவும் முக்கியம்.

இப்போது வாராகி அன்னையின் படத்திற்கு முன்பாக தீபம் ஏற்றி விட்டு நெய்வேத்தியங்களை படைத்து விட்டு அன்னைக்கு முன் அமர்ந்து ஓம் வாராகி தாயே போற்றி என்ற இந்த நாமத்தை 27 முறை சொல்லுங்கள். அன்னையின் வேறு நாம அர்ச்சனைகள் தெரிந்தால் அதையும் சொல்லலாம். இந்த வழிபாடு முடிந்த பிறகு கற்பூர தீபாராதனை காட்டி பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

அதன் பிறகு இந்த வெல்லத்தை எறும்பு புற்று அல்லது எறும்புகள் கூடும் இடத்தில் வைத்து விடுங்கள். அப்படி ஏதுமில்லை அடுக்குமாடி குறிப்பில் உள்ளவர்கள் இந்த வெல்லத்தை எடுத்து வைத்து பசு மாட்டிற்கு கொடுத்து விடுங்கள். அதன் பிறகு நெய்வேத்தியத்தை வீட்டில் உள்ள அனைவரும் பகிர்ந்து உண்டு பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: செல்வம் பெருக தைப் பொங்கல் வழிபாடு

விளக்கு ஏற்ற பயன்படுத்திய இலையை மறுநாள் கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள். இந்த வழிபாடு உங்களுக்கு பணவரவை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது. அதை போல் எறும்புகளுக்கும் பசுவிற்கும் தானமாக கொடுக்கக் கூடிய வெல்லம் உங்களுடைய பணத்தடை காரியத்தடை கடன் தொல்லை அனைத்தையும் தீர்க்கக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்தும். இந்த வழிபாட்டு முறையில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் வழிபாடு செய்து நல்ல பலனை பெறுங்கள்.

- Advertisement -