பணப் பிரச்சினை தொடர்ந்து கொண்டே இருந்தால் அதை உடனே சரி செய்ய இந்த இரண்டு தீபத்தை ஏற்றுங்கள். இது வரை வராத பணமும் வீடு தேடி வரும்.

swana bhairavar dheepam
- Advertisement -

இந்த பணத் தேவையையும் பணப்பிரச்சனையும் பற்றி நாம் நாளெல்லாம் பேசினாலும் கூட ஓயாது. அந்த அளவிற்கு இன்றைய காலக்கட்டத்தில் பணத்தின் தேவை இன்றியமையாதாக இருக்கிறது. பண பற்றாக்குறையும் அதேஸபோல் பெருகிக் கொண்டே இருக்கிறது. எவ்வளவு சம்பாதித்தாலும் போதவில்லை என்பதோடு சம்பாதிக்கும் பணமும் கையில் நிற்காமல் செலவழிந்து கொண்டே இருப்பது, அத்துடன் வர வேண்டிய பணம் கைக்கு வராமல் இருப்பது போன்ற பணம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்ய இந்த தீபத்தை ஏற்றும் போது சரி செய்து கொள்ளலாம் என்று சொல்லப்படுகிறது. அது குறித்தான தகவலை இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பண வரவை அதிகரிக்க தீபம்
இந்த தீபத்தை சொர்ண ஆகர்சன பைரவரை நினைத்து ஏற்ற வேண்டும். பொதுவாக பைரவரை கடன் அடையவும் எதிரிகள் தொல்லையிலிருந்து காக்கவும் தான் பெரும்பாலானோர் வழிபடுபவர்கள் பரிகாரமும் அது குறித்ததாகவே இருக்கும். ஆனால் வீட்டில் இருக்கும் பணத்தடையை நீக்கவும் பண வரவை தாராளமாகவும் சொர்ண ஆகர்சன பைரவரை வணங்கினால் அது நடக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த சொர்ணாஆகர்சண பைரவரை எப்படி வழிபட வேண்டும் என்பதை தான் இப்போது பார்க்க போகிறோம்.

- Advertisement -

இந்த தீபத்தை வெள்ளிக்கிழமைகளில் தான் ஏற்ற வேண்டும். வெள்ளிக்கிழமை காலை அல்லது மாலை உங்களுக்கு எந்த நேரத்தில் ஏற்ற முடியுமோ அந்த நேரத்தில் இரண்டு அகல் தீபம் நெய் ஊற்றி சொர்ணஆகர்சண பைரவரை நினைத்து உங்கள் வீட்டு பூஜை அறையில் ஏற்றினால் போதும். அந்த நேரத்தில் உங்களுக்கு இருக்கும் பணப்பிரச்சனைள் எல்லாத்துக்குமே சரியாக வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டு ஏற்றுங்கள். இந்த தீபத்தை தொடர்ந்து ஒன்பது வாரங்கள் ஏற்ற வேண்டும்.

அடுத்ததாக இதே போன்றதொரு தீப பரிகாரத்தை பற்றி தான் பார்க்க போகிறோம். அது குபேரருக்கு ஏற்ற வேண்டும். குபேரர் என்று சொன்னாலே பணம்தான் பணத்திற்கு அதிபதியாகவும் இவரை வணங்கும் போது பணத்திற்கு தடை என்பதே இருக்காது என்பதும் அனைவரும் தெரியும். ஆனால் பண பிரச்சனைகளை தீர்க்கவும் இதே குபேரரை வழிபடலாம்.

- Advertisement -

இந்த தீபத்தை வியாழன் அல்லது வெள்ளி இந்த இரண்டில் ஏதாவது ஒரு நாளில் ஏற்றலாம். இதை வியாழக்கிழமை ஏற்றுவதாக இருந்தால் மாலையில் ஏற்றங்கள். வெள்ளிக்கிழமை ஏற்றுவதாக இருந்தால் காலை அல்லது மாலை இரண்டு நேரத்தில் ஏற்றலாம். ஆனால் குபேரருக்கு ஏற்றப்படும் அகல் தீபத்தில் தாமரை தண்டு திரி போட்டு தான் ஏற்ற வேண்டும்.

இதையும் படிக்கலாமே: எந்த நாள் நரசிம்மரை வழிபடுகிறோமோ இல்லையோ இந்த ஒரு நாள் கண்டிப்பான முறையில் நாம் வழிபட்டோம் என்றால் நம்முடைய கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்துவிடும்.

இந்த தீபத்தை நீங்கள் இத்தனை வாரம் வேண்டுமானாலும் ஏற்றலாம். ஏனெனில் பண பிரச்சனை தீர்வதோடு பணத் தேவையானது மனிதனுக்கு எப்போதும் இருக்க கூடியது தான். ஆகையால் இந்த தீப வழிபாட்டை நீங்கள் தொடர்ந்து செய்யலாம். எந்த ஒரு தடையும் இல்லாமல் பணம் வந்து கொண்டே இருக்கும். நமக்கு இருக்கும் பணத்தடைகள் நீங்கவும் பணம் தாராளமாக வந்து கொண்டு இருக்கவும் இந்த இரண்டு தெய்வங்களை மனதார நினைத்து இந்த தீப பரிகாரத்தை செய்து வாருங்கள்.

- Advertisement -